என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சிஏஏ சட்டத்துக்கு எதிரான கையெழுத்து படிவங்கள் டெல்லிக்கு அனுப்பி வைப்பு
Byமாலை மலர்16 Feb 2020 8:13 AM GMT (Updated: 16 Feb 2020 8:13 AM GMT)
திமுக சார்பில் திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்துக்கு எதிராக பெறப்பட்ட கையெழுத்து படிவங்கள் இன்று டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
சென்னை:
திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்துக்கு எதிராக தி.மு.க. கையெழுத்து இயக்கத்தை தொடங்கியது. இதன் நிறைவு விழா திருவள்ளூரில் நடந்தது.
அப்போது பேசிய தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், ஒரு கோடி பேரிடம் கையெழுத்து பெறவேண்டும் என்று முடிவு செய்து இப்பணியை தொடங்கினோம். ஆனால் கையெழுத்து படிவத்தின் எண்ணிக்கை 2 கோடியைத் தாண்டிவிட்டது. மக்கள் உண்மைகளை புரிந்துகொண்டு இந்த கொடுமைகளை தெரிந்துகொண்டு அவர்களாகவே முன்வந்து கையெழுத்துகளை போட்டுள்ளனர் என குறிப்பிட்டார்.
இந்நிலையில், திமுக சார்பில் திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்துக்கு எதிராக பெறப்பட்ட கையெழுத்து படிவங்கள் இன்று டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்றனர். கையெழுத்து பெற்ற படிவங்கள் வரும் 19-ம் தேதி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திடம் ஒப்படைக்கப்படும் என அவர்கள் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X