search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஓ பன்னீர்செல்வம்
    X
    ஓ பன்னீர்செல்வம்

    நில அளவைப் பணிகளை மேற்கொள்ள வி.ஏ.ஓ.க்களுக்கு அதிகாரம்

    பட்டா மாறுதல் பணியை விரைவுபடுத்தும் வகையில் நில அளவைப் பணிகளை மேற்கொள்ள விஏஓ-க்களுக்கு அதிகாரம் வழங்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
    சென்னை:

    தமிழக சட்டசபையில் 2020-21ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் துறைவாரியான நிதி ஒதுக்கீடு மற்றும் முக்கிய திட்டங்கள் வருமாறு:-

    • தமிழ் வளர்ச்சித்துறைக்கு ரூ.74 கோடி நிதி ஒதுக்கீடு
    • தமிழக மின்சாரத்துறைக்கு ரூ.20,115.58 கோடி நிதி ஒதுக்கீடு
    • சிறைச்சாலைகளுக்கு ரூ.392 கோடி ஒதுக்கீடு 
    • சமூக பாதுகாப்பு ஓய்வூதிய திட்டங்களுக்கு ரூ.4,315 கோடி நிதி ஒதுக்கீடு
    • தமிழகத்தில் உள்ள மத்திய சிறைச்சாலைகளில் மேலும் 6 பெட்ரோல் நிலையங்கள் அமைக்கப்படும்


    • உணவு மானியத்திற்காக ரூ.6,500 கோடி நிதி ஒதுக்கீடு
    • தமிழக உயர்கல்வித்துறைக்கு பட்ஜெட்டில் ரூ.5.052.84 கோடி நிதி ஒதுக்கீடு
    • 2020-2021ம் ஆண்டு நிதியாண்டில் தமிழகத்தின் கடன் ரூ.4,56,660 கோடியாக இருக்கும் 
    • நெல், சிறுதானியம், பயறு வகைகள், பருத்தியில் அதிக விளைச்சல் தரும் ரகங்கள் அறிமுகப்படுத்தப்படும்
    • வேளாண் மண்டலம் விவசாயத்துறைக்கு முக்கியத்துவம் அளித்துள்ளது
    • பொது விநியோகத்திட்டத்தை செயல்படுத்த கூட்டுறவு நிறுவனங்களுக்கு ரூ.400 கோடி மானியம்
    • பெண்கள் பாதுகாப்புக்கான நிர்பயா திட்டத்துக்கு தமிழக பட்ஜெட்டில் ரூ.71 கோடி நிதி ஒதுக்கீடு
    • தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.34,181 கோடி நிதி ஒதுக்கீடு 
    • மீன்வளத்துறைக்கு ரூ.1229 கோடி ஒதுக்கீடு
    • மருத்துவத்துறைக்கு ரூ.15,863 கோடி நிதி ஒதுக்கீடு 
    • பட்டா மாறுதல் பணியை விரைவுபடுத்தும் வகையில் நில அளவைப் பணிகளை மேற்கொள்ள வி.ஏ.ஓ.-க்களுக்கு அதிகாரம்
    • நெடுஞ்சாலைத்துறையில் புதிதாக சாலைப் பாதுகாப்புப் பிரிவு அமைக்கப்படும் 
    • செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சிட்லப்பாக்கம் ஏரியை மீட்டெடுக்க ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு.
    Next Story
    ×