என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாலக்கோடு அருகே தொழிலதிபருக்கு கொலை மிரட்டல்- வாலிபர் கைது
Byமாலை மலர்6 Feb 2020 4:32 PM GMT (Updated: 6 Feb 2020 4:32 PM GMT)
பாலக்கோடு அருகே பணத் தகராறில் தொழிலதிபருக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்துள்ள கொலசனஅள்ளி பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 40). இவர் சொந்தமாக வாகனங்களுக்கு தேவையான உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடை வைத்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று மாரண்டஅள்ளி ஈ.பி. காலனியை சேர்ந்த திருமால் (38) என்பவர் ஆறுமுகத்தின் கடைக்கு வந்து பொருட்களை வாங்கிவிட்டு பணம் கொடுக்காமல் சென்றுள்ளார். இதையடுத்து ஆறுமுகம் பணத்தை திருமாலிடம் கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த திருமால் கோபத்தில் ஆறுமுகத்தின் கழுத்தை நெரித்து கொலை செய்ய முயற்சித்துள்ளார்.
இதையடுத்து திருமால் கெட்ட வார்த்தைகளால் ஆறுமுகத்தை திட்டிவிட்டு கொலை மிரட்டல் விடுத்து சென்றுள்ளார். இந்நிலையில் ஆறுமுகம் மாரண்டஅள்ளி போலீஸ் நிலையத்தில் திருமால் மீது புகார் செய்தார். இது குறித்து மாரண்டஅள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து திருமலையை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X