search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    பாலக்கோடு அருகே தொழிலதிபருக்கு கொலை மிரட்டல்- வாலிபர் கைது

    பாலக்கோடு அருகே பணத் தகராறில் தொழிலதிபருக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    தர்மபுரி:

    தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்துள்ள கொலசனஅள்ளி பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 40). இவர் சொந்தமாக வாகனங்களுக்கு தேவையான உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடை வைத்துள்ளார். 

    இந்த நிலையில் நேற்று மாரண்டஅள்ளி ஈ.பி. காலனியை சேர்ந்த திருமால் (38) என்பவர் ஆறுமுகத்தின் கடைக்கு வந்து பொருட்களை வாங்கிவிட்டு பணம் கொடுக்காமல் சென்றுள்ளார். இதையடுத்து ஆறுமுகம் பணத்தை திருமாலிடம் கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த திருமால் கோபத்தில் ஆறுமுகத்தின் கழுத்தை நெரித்து கொலை செய்ய முயற்சித்துள்ளார். 

    இதையடுத்து திருமால் கெட்ட வார்த்தைகளால் ஆறுமுகத்தை திட்டிவிட்டு கொலை மிரட்டல் விடுத்து சென்றுள்ளார். இந்நிலையில் ஆறுமுகம் மாரண்டஅள்ளி போலீஸ் நிலையத்தில் திருமால் மீது புகார் செய்தார். இது குறித்து மாரண்டஅள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து திருமலையை கைது செய்தனர்.
    Next Story
    ×