என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தமிழகத்தில் விருப்ப ஓய்வு பெறும் 11 ஆயிரம் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள்
Byமாலை மலர்25 Jan 2020 8:23 AM GMT (Updated: 25 Jan 2020 8:23 AM GMT)
தமிழகத்தில் 11 ஆயிரம் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் விருப்ப ஓய்வில் செல்வதால் ஊழியர்கள் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு உள்ளது. சென்னையில் மட்டும் 2,600 ஊழியர்கள் ஓய்வு பெறுகின்றனர்.
சென்னை:
மத்திய அரசின் தொலைதொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல். தொடர் நஷ்டத்தில் இயங்கி வருவதால் விருப்ப ஓய்வு திட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி 79 ஆயிரம் பேர் விருப்ப ஓய்வு பெற விண்ணப்பித்தனர்.
தமிழகத்தில் மட்டும் 11 ஆயிரம் பேர் விருப்ப ஓய்வு பெற கடிதம் கொடுத்துள்ளனர். 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் விருப்ப ஓய்வு பெறலாம் என அறிவிக்கப்பட்டதையடுத்து பலர் இந்த முடிவுக்கு வந்துள்ளனர்.
வருகிற 31-ந்தேதி அவர்கள் அனைவரும் விருப்ப ஓய்வு பெறுகின்ற நிலையில் ஊழியர்கள் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு உள்ளது. குறிப்பாக வாடிக்கையாளர்கள் சேவை மையங்களில் பணிபுரிந்து வந்த ஊழியர்கள் விருப்ப ஓய்வு பெறுவதால் அங்கு பணிகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
சென்னையில் மட்டும் 2,600 ஊழியர்கள் ஓய்வு பெறுகின்றனர். பி.எஸ்.என்.எல். சென்னை வட்டத்தில் 42 வாடிக்கையாளர் சேவை மையங்கள் உள்ளன. இங்கு 150 பேர் பணிபுரிந்து வருகின்றனர். இதேபோல் தமிழ்நாடு வட்டத்தில் சுமார் 300க்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர்.
அதனால் இந்த பொறுப்பை தனியாரிடம் ஒப்படைக்க பி.எஸ்.என்.எல். நிர்வாகம் முடிவு செய்துள்ளது. செல்போன், டெலிபோன் கட்டணம் வசூல், சிம்கார்டு விற்பனை உள்ளிட்ட சேவைகள் இனி முழுமையாக தனியாரிடம் கொடுக்கப்பட உள்ளது.
இந்த பணி கொடுப்பதற்கு எப்படியும் ஒரு மாத காலமாகும். அதுவரையில் சேவை பாதிக்கும் என்று தெரிகிறது.
மத்திய அரசின் தொலைதொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல். தொடர் நஷ்டத்தில் இயங்கி வருவதால் விருப்ப ஓய்வு திட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி 79 ஆயிரம் பேர் விருப்ப ஓய்வு பெற விண்ணப்பித்தனர்.
தமிழகத்தில் மட்டும் 11 ஆயிரம் பேர் விருப்ப ஓய்வு பெற கடிதம் கொடுத்துள்ளனர். 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் விருப்ப ஓய்வு பெறலாம் என அறிவிக்கப்பட்டதையடுத்து பலர் இந்த முடிவுக்கு வந்துள்ளனர்.
வருகிற 31-ந்தேதி அவர்கள் அனைவரும் விருப்ப ஓய்வு பெறுகின்ற நிலையில் ஊழியர்கள் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு உள்ளது. குறிப்பாக வாடிக்கையாளர்கள் சேவை மையங்களில் பணிபுரிந்து வந்த ஊழியர்கள் விருப்ப ஓய்வு பெறுவதால் அங்கு பணிகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
சென்னையில் மட்டும் 2,600 ஊழியர்கள் ஓய்வு பெறுகின்றனர். பி.எஸ்.என்.எல். சென்னை வட்டத்தில் 42 வாடிக்கையாளர் சேவை மையங்கள் உள்ளன. இங்கு 150 பேர் பணிபுரிந்து வருகின்றனர். இதேபோல் தமிழ்நாடு வட்டத்தில் சுமார் 300க்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர்.
வாடிக்கையாளர் சேவை மையம், டெலிபோன் பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் பெரும்பாலானவர்கள் விருப்ப ஓய்வில் செல்வதால் வாடிக்கையாளர் சேவை மையமும், டெலிபோன் பழுது பார்க்கும் பணிகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
அதனால் இந்த பொறுப்பை தனியாரிடம் ஒப்படைக்க பி.எஸ்.என்.எல். நிர்வாகம் முடிவு செய்துள்ளது. செல்போன், டெலிபோன் கட்டணம் வசூல், சிம்கார்டு விற்பனை உள்ளிட்ட சேவைகள் இனி முழுமையாக தனியாரிடம் கொடுக்கப்பட உள்ளது.
இந்த பணி கொடுப்பதற்கு எப்படியும் ஒரு மாத காலமாகும். அதுவரையில் சேவை பாதிக்கும் என்று தெரிகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X