என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
தொழிலாளியை கிரிக்கெட் மட்டையால் தாக்கி கொலை மிரட்டல்- வாலிபருக்கு வலைவீச்சு
பாகூர்:
தவளக்குப்பம் இளவரசன் நகரை சேர்ந்தவர் பகலவன் (வயது 45). கூலி தொழிலாளி. சம்வத்தன்று இவர் தனது வீட்டு வாசலில் தன்னுடன் வேலை பார்க்கும் குமார் என்பவருடன் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது தவளக்குப்பம் சடா நகரை சேர்ந்த சிலம்பு (22) என்பவர் குமாரை பார்த்து நீ எப்படி இங்கு நிற்கலாம் என கேட்டு தகராறு செய்தார்.
இதனை பகலவன் தட்டிக்கேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த சிலம்பு தகாத வார்த்தைகளால் திட்டி கிரிக்கெட் மட்டையால் பகலவனை சரமாரியாக தாக்கினார். மேலும் இதுபற்றி போலீசில் புகார் தெரிவித்தால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டினார்.
இந்த தாக்குதலில் பலத்த காயம் அடைந்த பகலவன் தவளக்குப்பம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்த புகாரின் பேரில் தவளக்குப்பம் போலீசார் வழக்குபதிவு செய்து சிலம்புவை தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்