search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிரிக்கெட் மட்டை"

    7ம் வகுப்பு படிக்கும் மாணவனை சக மாணவர்கள் கிரிக்கெட் மட்டையால் அடித்துக்கொலை செய்து, மாணவனின் உடலை பள்ளி வளாகத்திலேயே புதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    டேராடூன்:

    உத்தரகாண்ட் மாநிலம், ரிஷிகேஷ் அருகே உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் அதே பகுதியை சேர்ந்த ஒரு மாணவன் 7-ம் வகுப்பு படித்து வந்தான். அவன் பிற மாணவர்களுடன் வெளியே உல்லாசப்பயணம் சென்றிருந்தான். அப்போது அந்த மாணவன் பிஸ்கெட்டை திருடியதாக கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து தண்டனையாக அனைத்து மாணவர்களும் பள்ளிக்கூடத்தை விட்டு வெளியே செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆத்திரம் அடைந்த மூத்த மாணவர்கள், அந்த குறிப்பிட்ட மாணவனை பள்ளிக்கூடத்தில் வைத்து கிரிக்கெட் மட்டையால் சரமாரியாக தாக்கினர். இதில் அந்த மாணவன் சுருண்டு விழுந்தான். இதையடுத்து அவனை ஆஸ்பத்திரிக்கு எடுத்துச்சென்றனர். ஆனால் அவனைப் பரிசோதித்த டாக்டர்கள் அவனது உயிர் ஏற்கனவே பிரிந்து விட்டதாக தெரிவித்தனர்.

    அதைத் தொடர்ந்து பெற்றோருக்கு தெரிவிக்காமலேயே அந்த மாணவனின் உடலை பள்ளி வளாகத்திலேயே புதைத்து விட்டனர். இதில் பள்ளி அதிகாரிகளும் உடந்தையாக இருந்துள்ளனர். இந்த சம்பவம் 10-ந் தேதி நடந்துள்ளது.

    இதுகுறித்து உத்தரகாண்ட் குழந்தை உரிமைகள் பாதுகாப்பு கமிஷன் கவனத்துக்கு சென்றது. அதைத் தொடர்ந்து பள்ளி மேலாளர், வார்டன், விளையாட்டு ஆசிரியர், 2 மாணவர்கள் என 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
    ×