என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மாணவன் கிரிக்கெட் மட்டையால் அடித்துக்கொலை - உடலை பள்ளிக்கூட வளாகத்தில் புதைத்த கொடுமை
Byமாலை மலர்28 March 2019 7:49 PM GMT (Updated: 28 March 2019 7:49 PM GMT)
7ம் வகுப்பு படிக்கும் மாணவனை சக மாணவர்கள் கிரிக்கெட் மட்டையால் அடித்துக்கொலை செய்து, மாணவனின் உடலை பள்ளி வளாகத்திலேயே புதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டேராடூன்:
உத்தரகாண்ட் மாநிலம், ரிஷிகேஷ் அருகே உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் அதே பகுதியை சேர்ந்த ஒரு மாணவன் 7-ம் வகுப்பு படித்து வந்தான். அவன் பிற மாணவர்களுடன் வெளியே உல்லாசப்பயணம் சென்றிருந்தான். அப்போது அந்த மாணவன் பிஸ்கெட்டை திருடியதாக கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து தண்டனையாக அனைத்து மாணவர்களும் பள்ளிக்கூடத்தை விட்டு வெளியே செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆத்திரம் அடைந்த மூத்த மாணவர்கள், அந்த குறிப்பிட்ட மாணவனை பள்ளிக்கூடத்தில் வைத்து கிரிக்கெட் மட்டையால் சரமாரியாக தாக்கினர். இதில் அந்த மாணவன் சுருண்டு விழுந்தான். இதையடுத்து அவனை ஆஸ்பத்திரிக்கு எடுத்துச்சென்றனர். ஆனால் அவனைப் பரிசோதித்த டாக்டர்கள் அவனது உயிர் ஏற்கனவே பிரிந்து விட்டதாக தெரிவித்தனர்.
அதைத் தொடர்ந்து பெற்றோருக்கு தெரிவிக்காமலேயே அந்த மாணவனின் உடலை பள்ளி வளாகத்திலேயே புதைத்து விட்டனர். இதில் பள்ளி அதிகாரிகளும் உடந்தையாக இருந்துள்ளனர். இந்த சம்பவம் 10-ந் தேதி நடந்துள்ளது.
இதுகுறித்து உத்தரகாண்ட் குழந்தை உரிமைகள் பாதுகாப்பு கமிஷன் கவனத்துக்கு சென்றது. அதைத் தொடர்ந்து பள்ளி மேலாளர், வார்டன், விளையாட்டு ஆசிரியர், 2 மாணவர்கள் என 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
உத்தரகாண்ட் மாநிலம், ரிஷிகேஷ் அருகே உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் அதே பகுதியை சேர்ந்த ஒரு மாணவன் 7-ம் வகுப்பு படித்து வந்தான். அவன் பிற மாணவர்களுடன் வெளியே உல்லாசப்பயணம் சென்றிருந்தான். அப்போது அந்த மாணவன் பிஸ்கெட்டை திருடியதாக கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து தண்டனையாக அனைத்து மாணவர்களும் பள்ளிக்கூடத்தை விட்டு வெளியே செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆத்திரம் அடைந்த மூத்த மாணவர்கள், அந்த குறிப்பிட்ட மாணவனை பள்ளிக்கூடத்தில் வைத்து கிரிக்கெட் மட்டையால் சரமாரியாக தாக்கினர். இதில் அந்த மாணவன் சுருண்டு விழுந்தான். இதையடுத்து அவனை ஆஸ்பத்திரிக்கு எடுத்துச்சென்றனர். ஆனால் அவனைப் பரிசோதித்த டாக்டர்கள் அவனது உயிர் ஏற்கனவே பிரிந்து விட்டதாக தெரிவித்தனர்.
அதைத் தொடர்ந்து பெற்றோருக்கு தெரிவிக்காமலேயே அந்த மாணவனின் உடலை பள்ளி வளாகத்திலேயே புதைத்து விட்டனர். இதில் பள்ளி அதிகாரிகளும் உடந்தையாக இருந்துள்ளனர். இந்த சம்பவம் 10-ந் தேதி நடந்துள்ளது.
இதுகுறித்து உத்தரகாண்ட் குழந்தை உரிமைகள் பாதுகாப்பு கமிஷன் கவனத்துக்கு சென்றது. அதைத் தொடர்ந்து பள்ளி மேலாளர், வார்டன், விளையாட்டு ஆசிரியர், 2 மாணவர்கள் என 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X