search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அடித்துக்கொலை"

    • பால்பண்ணை ஊழியர் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.
    • இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் திரு முக்குளம் அருகே கூட்டுறவு பால் பண்ணை உள்ளது. இங்கு ஏராளமான ஊழி யர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இங்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ரைட்டான்பட்டி பகுதியைச் சேர்ந்த சேவுகன் (வயது57) என்பவரும் தற்காலிக பணியாளராக வேலை பார்த்து வந்தார்.

    இவர் சரிவர வேலைக்கு வராமல் இருந்ததால் சஸ்பெண்டு செய்யப் பட்டதாக கூறப்படுகிறது. மீண்டும் வேலையில் சேர்த்து கொள்ளும்படி கேட்பதற்காக பால் பண்ணைக்கு சேவுகன் சென்றார். அப்போது உயர் அதிகாரிகளிடம் அனுமதி பெற்று வேலையில் சேரும் படி சக ஊழியர்கள் கூறியுள்ளனர்.

    அதன்படி மேலாளரை சந்திப்பதற்காக சேவுகன் சென்றார். அப்போது அவர்களுக்குள் வாக்கு வாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் பால் பண்ணை முன்பு சேவுகன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த ஸ்ரீவில்லி புத்தூர் துணை சூப்பிரண்டு முகேஷ் ஜெயக்குமார் இன்ஸ்பெக்டர் முத்துக் குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

    சேவுகனின் உடலை கைப்பற்றி பிரயோத பரிசோதனைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சேவுகனின் மகன் தங்க திருப்பதி ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசில் புகார் கொடுத்தார்.

    அதில் மேலாளர் சிவனான், ஊழியர்கள் ராம்குமார், நாராயணன், முனியசாமி ஆகியோர் சேர்ந்து தந்தையை அடித்துக் கொலை செய்ததாக கூறியிருந்தார். அதன்பேரில் இந்த வழக்கை போலீசார் கொலை வழக்கமாக மாற்றி சிவனான் உள்பட 4 பேரையும் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சுப்பிரமணி (வயது 70). இவர் மின்வாரியத்தில் வயர்மேனாக பணியாற்றி ஓய்வுபெற்றவர்.
    • தனியாக வசித்து வந்த சுப்பிரமணி அதே பகுதியில் தண்ணீர் கேன் சப்ளை செய்யும் மணிகண்டன் என்பவரிடம் கணக்கு பிள்ளையாக வேலை செய்து வந்தார்.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள புதுப்பட்டி காமராஜ்நகர் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 70). இவர் மின்வாரியத்தில் வயர்மேனாக பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவரது மனைவி ருக்குமணி 7 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார்.

    இவருக்கு முருகன் (55), பாஸ்கர் (53) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். முரு கன் ஆட்டையாம்பட்டியில் சுகாதார ஆய்வாளராக உள்ளார். பாஸ்கர் குடும்பத்துடன் புதுப்பட்டி பகுதியில் வசித்து வருகிறார். தனியாக வசித்து வந்த சுப்பிரமணி அதே பகுதியில் தண்ணீர் கேன் சப்ளை செய்யும் மணிகண்டன் என்பவரிடம் கணக்கு பிள்ளையாக வேலை செய்து வந்தார்.

    இன்று காலை சுப்பிரமணி வேலைக்கு வராததால் மணிகண்டன் அவரை தேடி வீட்டுக்கு வந்தார். அங்கு கட்டிலில் படுத்த நிலையில் சுப்பிர மணி கொலை செய்யப்பட்டு கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் இதுபற்றி சுப்பிரமணியின் மகன்க ளுக்கும், நாமகிரிபேட்டை போலீஸ் நிலையத்துக்கும் தகவல் கொடுத்தார்.

    போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோ தனைக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்கள் சேர்ந்து இந்த கொலையில் ஈடுபட்டி ருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    மர்ம நபர்கள் கட்டில் சட்டத்தால் தாக்கி சுப்பிரமணியை கொலை செய்துள்ளனர். அவரை கொலை செய்தவர்கள் யார்? எதற்காக இந்த கொலை நடந்தது? சுப்பிர மணிக்கும் வேறு யாருக்கும் முன்விரோதம், பகை உள்ளதா? என பல கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகி றார்கள்.

    ராசிபுரம் டி.எஸ்.பி. செந்தில்குமார் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று கொலை நடந்த இடத்தை பார்வையிட்டார். தடயவியல் நிபுணர்களும் வந்து தடயங்களை சேகரித்தனர். மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சம்பவ இடத்தில் மோப்பம் பிடித்தது. யாரயும் கவ்வி பிடிக்கவில்லை.

    இந்த கொலை சம்பவம் ராசிபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • வக்கீல் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்
    • அஸ்வின் மற்றும் சீரஞ்சிவிக்கு இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

    வடவள்ளி,

    கோவை வடவள்ளி அருகே உள்ள சோமையம்பாளையத்தை சேர்ந்தவர் சீரஞ்சிவி (வயது 26). இவர் பழைய கார்களை வாங்கி விற்பது, கார் அடகு வைக்கும் தொழில் செய்து வந்தார். சவுரிபாளையத்தை சேர்ந்தவர் அஸ்வின்(39). இவர்கள் 2 பேரும் நண்பர்கள். 2 பேரும் சேர்ந்து தான் பழைய கார்களை வாங்கி விற்பனை செய்து வந்தனர்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு அஸ்வினிடம் ஒரு நபர், காரை கொடுத்து பணம் தருமாறு கூறியதாக தெரிகிறது. அதன்பேரில் அஸ்வினும் அந்த காரை வாங்கி, சீரஞ்சிவியிடம் கொடுத்தார். சீரஞ்சிவி அந்த காரை ரூ.3 லட்சத்திற்கு விற்று விட்டார்.

    இந்த நிலையில் அஸ்வினிடம் காரை கொடுத்த நபர் தனது கார் தனக்கு திரும்ப வேண்டும். அதனை தற்போது கொடுத்து விடு என கேட்டார்.

    இதனையடுத்து அஸ்வின், சீரஞ்சிவியை சந்தித்து, நான் உன்னிடம் கொடுத்த காரை திருப்பி கொடுத்து விடு. காரை கொடுத்த நபர் கேட்கிறார் என தெரிவித்தார்.

    அப்போது அவர் காரை விற்று விட்டதாக தெரிவித்தார். இதை கேட்டதும் அதிர்ச்சியான அஸ்வின் நான் உன்னிடம் அடகுக்காக தானே கொடுத்தேன். நீ எப்படி விற்கலாம் என தெரிவித்தார். இதனால் 2 பேருக்கும் வாய்தகராறு ஏற்பட்டது. அக்கம்பக்கத்தினர் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக 2 பேருக்குமே முன்விரோதம் இருந்து வந்தது. இதற்கிடையே காரை கொடுத்த நபர் தொடர்ந்து போன் செய்து அஸ்வினிடம் காரை கேட்டு வந்தார்.

    இதனால் அவர் மனஉளைச்சலுக்கு ஆளான அவர் இதுகுறித்து தனது நண்பர்களான நெல்லை பாளையங்கோட்டை வி.எம்.சத்திரத்தை சேர்ந்த கண்ணன் (26), நாங்குநேரியை சேர்ந்த முத்தையா (வயது 33), வேடப்பட்டியை சேர்ந்த ஆனந்தபாபுவிடம் (49) தெரிவித்தார். இவர்களில் கண்ணன் டிரைவராகவும், முத்தையா வக்கீலாகவும், ஆனந்தபாபு பழைய கார்களை வாங்கி விற்கும் தொழிலும் செய்து வந்தனர்.

    அஸ்வினின் புலம்பலை கேட்ட அவரது நண்பர்கள், சீரஞ்சிவியை சந்திக்க வர சொல். அவரிடம் இது சம்பந்தமாக பேசுவோம் என கூறினர்.

    அதன்படி கடந்த 22-ந் தேதி இரவு அஸ்வின் சீரஞ்சிவியை தொடர்பு கொண்டு உன்னிடம் பேச வேண்டும். மருதமலை ரோட்டிற்கு வா என அழைத்தார். இதனை நம்பி சீரஞ்சிவியும் அங்கு சென்றார்.

    அப்போது அங்கு அஸ்வின் தனது நண்பர்களுடன் நின்றிருந்தார். சீரஞ்சிவி வந்ததும், அஸ்வின் கார் சம்பந்தமான பேச்சை எடுத்தார். இதனால் 2 பேருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த அஸ்வின் தனது நண்பர்களுடன் சேர்ந்து சீரஞ்சிவியை அங்கு கிடந்த கட்டை உள்ளிட்டவற்றால் சரமாரியாக தாக்கினர். இதில் உடல் முழுவதும் பலத்த காயம் அடைந்த அவர் மயங்கி விழுந்து விட்டார்.

    பின்னர் அவரை அங்கேயே போட்டு விட்டு 4 பேரும் சென்று விட்டனர். மறுநாள் காலை அந்த வழியாக வந்த 2 பேர் காயத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருந்த சீரஞ்சிவியை பார்த்தனர். உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக அருகே உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இதற்கிடையே சீரஞ்சிவி தாக்கப்பட்ட தகவல் ஆஸ்பத்திரி மூலமாக அவரது தந்தைக்கு தெரியவந்தது. உடனடியாக அவர் விரைந்து சென்று தனது மகனை மேல்சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    மேலும் இதுகுறித்து வடவள்ளி போலீசிலும் சீரஞ்சிவியின் தந்தை புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் அஸ்வின் உள்பட 4 பேர் மீதும் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சீரஞ்சிவி இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதையடுத்து போலீசார் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றினர்.

    தொடர்ந்து சீரஞ்சிவியை அடித்து கொலை செய்த அஸ்வின், அவரது நண்பர்களான கண்ணன், முத்தையா, ஆனந்தபாபு ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.

    பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய ஜெயிலில் அடைத்தனர்.

    • பரமக்குடியில் கார் டிரைவர் அடித்துக்கொலை செய்த விவகாரத்தில் தென்காசி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார்.
    • இந்த தனிப்படை போலீசார் கொலையில் தொடர்புடைய கோவிந்தராஜ், முனீஸ்வரியை கைது செய்தனர்.

    பரமக்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் வேலுச்சாமி. இவரது மகன் தேவராஜ் (வயது29).

    இவர் சென்னை மேட்டுகுப்பம் பகுதியில் கார் டிரைவராக பணியாற்றி வந்தார். இவர் தனது உறவினரான பன்னீர் என்பவருக்கு ரூ. 3 லட்சம் கொடுத்து உதவியுள்ளார். அதனை அவர் திருப்பி கொடுக்காததால் பன்னீர் வைத்திருந்த காரை, தேவராஜ் சென்னைக்கு எடுத்துச்சென்று விட்டார்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு கொலை வழக்கில் ஆஜராக தேவராஜ் பரமக்குடி வந்தார். பின்னர் ராமநாத புரம் கோர்ட்டில் ஆஜராகி விட்டு பரமக்குடி வந்தார். இதுபற்றி அறிந்த பன்னீர், தமிழ், வினித், கோவிந்தராஜ், முனீஸ்வரி ஆகிய 5 பேர் தேவராஜை சந்தித்து அவர் எடுத்துச் சென்ற காரை திருப்பித்தரும்படி கேட்ட னர். அப்போது பணத்தை தந்தால் காரை தருவதாக தேவராஜ் கூறியுள்ளார். இதில் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த பன்னீர் உள்பட 5 பேரும் தேவராஜை அடித்ததில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுபற்றிய புகாரின் பேரில் பரமக்குடி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் கொலை யாளிகளை பிடிக்க டி.எஸ்.பி. வசந்தகுமார் உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மாரிகண் ணன் தலைமையில் தனிப் படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் கொலையில் தொடர்புடைய கோவிந்தராஜ், முனீஸ்வ ரியை கைது செய்தனர்.

    இந்தநிலையில் கொலை யாளி வினித் தென்காசி கோர்ட்டில் சரணடைந் துள்ளார். மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

    • வீராணம் அருகே நிலத் தகராறில் தொழிலாளி அடித்துக்கொலை? தம்பியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    • இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

    சேலம்:

    சேலம் வீராணம் அருகே உள்ள வேடப்பட்டி காளியம்மன் கோவில்காடு பகுதியைச் சேர்ந்தவர் அம்மாசி (வயது 70) இவருக்கு கமலா (63) என்ற மனைவியும் லோகநாதன் (47) என்ற மகனும் உள்ளனர். மேலும் அம்மாசிக்கு தனம் ( 61) என்ற இன்னொரு மனைவியும், அவர் மூலமாக வெங்கடாஜலபதி (45) என்ற மகனும் பானுமதி (42) என்ற மகளும் உள்ளனர்.

    இந்த நிலையில் அம்மாசிக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தை லோகநாதன் மற்றும் வெங்கடாசலபதிக்கு சரிபாதியாக பிரித்து கொடுத்துள்ளனர். இது தொடர்பாக இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

    இந்த நிலையில் கடந்த 26-ந்தேதி அண்ணன், தம்பி இருவருக்கும் தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. அருகிலிருந்தவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

    இதனிடையே நேற்று இரவு வீட்டில் இருந்த லோகநாதன் திடீரென நெஞ்சு வலிப்பதாகக் கூறியுள்ளார். உறவினர்கள் உடனடியாக அவரை சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பெற்று வந்த லோகநாதன் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். வெங்கடாசலம் தாக்கியதால் தான் தற்போது லோகநாதன் இறந்து விட்டதாக உறவினர்கள் வீராணம் போலீசாரிடம் கூறினர்.

    இதனைத் தொடர்ந்து இன்று லோகநாதன் உடல் பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது அதன் முடிவிலேயே லோகநாதன் எப்படி இறந்தார்? என்பது தெரிய வரும்.

    இது தொடர்பாக போலீசார் வெங்கடாசலம் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×