search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "beatings"

    • வீராணம் அருகே நிலத் தகராறில் தொழிலாளி அடித்துக்கொலை? தம்பியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    • இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

    சேலம்:

    சேலம் வீராணம் அருகே உள்ள வேடப்பட்டி காளியம்மன் கோவில்காடு பகுதியைச் சேர்ந்தவர் அம்மாசி (வயது 70) இவருக்கு கமலா (63) என்ற மனைவியும் லோகநாதன் (47) என்ற மகனும் உள்ளனர். மேலும் அம்மாசிக்கு தனம் ( 61) என்ற இன்னொரு மனைவியும், அவர் மூலமாக வெங்கடாஜலபதி (45) என்ற மகனும் பானுமதி (42) என்ற மகளும் உள்ளனர்.

    இந்த நிலையில் அம்மாசிக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தை லோகநாதன் மற்றும் வெங்கடாசலபதிக்கு சரிபாதியாக பிரித்து கொடுத்துள்ளனர். இது தொடர்பாக இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

    இந்த நிலையில் கடந்த 26-ந்தேதி அண்ணன், தம்பி இருவருக்கும் தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. அருகிலிருந்தவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

    இதனிடையே நேற்று இரவு வீட்டில் இருந்த லோகநாதன் திடீரென நெஞ்சு வலிப்பதாகக் கூறியுள்ளார். உறவினர்கள் உடனடியாக அவரை சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பெற்று வந்த லோகநாதன் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். வெங்கடாசலம் தாக்கியதால் தான் தற்போது லோகநாதன் இறந்து விட்டதாக உறவினர்கள் வீராணம் போலீசாரிடம் கூறினர்.

    இதனைத் தொடர்ந்து இன்று லோகநாதன் உடல் பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது அதன் முடிவிலேயே லோகநாதன் எப்படி இறந்தார்? என்பது தெரிய வரும்.

    இது தொடர்பாக போலீசார் வெங்கடாசலம் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • திண்டிவனம் அருகே மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் கைது செய்யப்பட்டார்.
    • வைரபுரம் கிராமத்தை சேர்ந்தவர் அசோக் அவரது மனைவி ஷர்மிளா. இவர்களுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இதுவரை குழந்தை இல்லை.

    விழுப்புரம்:

    திண்டிவனம் அருகே உள்ள வெள்ளி மேடுப்பேட்டை அடுத்த வைரபுரம் கிராமத்தை சேர்ந்தவர் அசோக். அவரது மனைவி ஷர்மிளா. இவர்களுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இதுவரை குழந்தை இல்லை.

    கடந்த மாதம் 3 தினங்க ளாக பெரமண்டூர் கிராமத்தில் உள்ள தனது தாய் வீட்டில் ஷர்மிளா இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த மாதம் 26-ந் தேதி அசோக், தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். அப்போது வீட்டில் இருவருக்கும், சண்டை ஏற்பட்டுள்ளது. பின், அசோக் வெளியில் சென்றபோது, ஷர்மிளா, வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை, வெள்ளி மேடுப்பேட்டை போலீசார், கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    மேலும், தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதா கவும், வரதட்சனை கொடுமையால், தனது மகள் தற்கொலை செய்து கொண்டதாகவும், அவரது தந்தை சுப்பன் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் வெள்ளி மேடுப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், ஷர்மிளா விடம், வரதட்சனை கேட்டு அசோக், அவரது தந்தை மதுரை, சித்தி பார்வதி, 17 வயதுடைய தங்கை ஆகியோர் கொடுமைப்படு–த்தியதும், சம்பவத்தன்று, ஷர்மிளாவை அசோக் அடித்து துன்புறுத்தி அழைத்து வந்ததும், அதன் காரணமாக அவர் வீட்டில் தற்கொலை செய்து கொண்டதும் தெரிய வந்தது.

    அதன் பேரில் போலீசார், தற்கொலை தூண்டுதல், வரதட்சனை கொடுமை ஆகிய பிரிவுகளின் கீழ், அசோக்கை கைது செய்த னர். தலைமறைவாக உள்ள மதுரை, பார்வதி உள்ளிட்ட 3 பேரை தேடி வருகின்றனர்.

    ×