என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆளுங்கட்சிக்கு ஆதரவாக அதிகாரி பேசும் வீடியோவை வெளியிட்டார் செந்தில் பாலாஜி எம்எல்ஏ
Byமாலை மலர்4 Jan 2020 6:38 AM GMT (Updated: 4 Jan 2020 6:38 AM GMT)
உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது ஆளுங்கட்சிக்கு ஆதரவாக பெண் அதிகாரி பேசுவதாக வீடியோ ஒன்றை செந்தில் பாலாஜி எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ளார்.
கரூர்:
கரூர் மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வார்டுகளில் பதிவான வாக்குகள் க.பரமத்தி அரசு மேல்நிலைப்பள்ளி வாக்கு எண்ணும் மையத்தில் நடைபெற்றது. இதில் தி.மு.க. -காங்கிரஸ் வேட்பாளர்கள் 2 பேரின் வெற்றியை மறைத்து அ.தி.மு.க. வென்றதாக புகார் எழுந்தது.
இதனை கண்டித்து க.பரமத்தியில் நேற்று தி.மு.க. மாவட்ட செயலாளர் செந்தில் பாலாஜி எம்.எல்.ஏ., மற்றும் ஜோதிமணி எம்.பி., மற்றும் கட்சியினர் உள்ளிருப்பு போராட்டம் மற்றும் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தேர்தல் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து போராட்டத்தை கைவிட்டனர். மேலும் கரூர் மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்தக்கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கும் தொடர்ந்துள்ளனர்.
இந்தநிலையில் செந்தில் பாலாஜி எம்.எல்.ஏ., மற்றும் ஜோதிமணி எம்.பி., ஆகியோர் இன்று வீடியோ ஒன்றை வெளியிட்டனர். அதில் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக பெண் அதிகாரி ஒருவர் பேசுவது போன்ற குரல் இடம் பெற்றுள்ளது. ஆனால் அதில் அந்த அதிகாரியின் உருவம் பதிவாகவில்லை. குரல் மட்டும் பதிவாகியுள்ளது.
இது பற்றி செந்தில் பாலாஜி எம்.எல்.ஏ., கூறுகையில், க.பரமத்தி ஊராட்சி ஒன்றியம் 1-வது வார்டில் தி.மு.க. வேட்பாளர் குணசேகரன் 41 வாக்குகள் முன்னிலையில் இருந்த நிலையில் அங்கு தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த கரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அதிகாரி கவிதா , ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படும் நோக்கத்தில் அங்கிருந்த அ.தி.மு.க. முகவர்களிடம் தி.மு.க. வேட்பாளர் குணசேகரன் 41 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். எனவே நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள் என்று கேட்கிறார். அந்த வீடியோ ஆதாரம் எங்களிடம் உள்ளது. தேர்தல் முறைகேடுக்கு இதுவே ஆதாரம். எனவே இது தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளோம் என்றார்.
க.பரமத்தி ஒன்றியம் 1-வது வார்டில் அ.தி.மு.க. வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் செந்தில்பாலாஜி வெளியிட்டுள்ள வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வார்டுகளில் பதிவான வாக்குகள் க.பரமத்தி அரசு மேல்நிலைப்பள்ளி வாக்கு எண்ணும் மையத்தில் நடைபெற்றது. இதில் தி.மு.க. -காங்கிரஸ் வேட்பாளர்கள் 2 பேரின் வெற்றியை மறைத்து அ.தி.மு.க. வென்றதாக புகார் எழுந்தது.
இதனை கண்டித்து க.பரமத்தியில் நேற்று தி.மு.க. மாவட்ட செயலாளர் செந்தில் பாலாஜி எம்.எல்.ஏ., மற்றும் ஜோதிமணி எம்.பி., மற்றும் கட்சியினர் உள்ளிருப்பு போராட்டம் மற்றும் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தேர்தல் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து போராட்டத்தை கைவிட்டனர். மேலும் கரூர் மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்தக்கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கும் தொடர்ந்துள்ளனர்.
இந்தநிலையில் செந்தில் பாலாஜி எம்.எல்.ஏ., மற்றும் ஜோதிமணி எம்.பி., ஆகியோர் இன்று வீடியோ ஒன்றை வெளியிட்டனர். அதில் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக பெண் அதிகாரி ஒருவர் பேசுவது போன்ற குரல் இடம் பெற்றுள்ளது. ஆனால் அதில் அந்த அதிகாரியின் உருவம் பதிவாகவில்லை. குரல் மட்டும் பதிவாகியுள்ளது.
இது பற்றி செந்தில் பாலாஜி எம்.எல்.ஏ., கூறுகையில், க.பரமத்தி ஊராட்சி ஒன்றியம் 1-வது வார்டில் தி.மு.க. வேட்பாளர் குணசேகரன் 41 வாக்குகள் முன்னிலையில் இருந்த நிலையில் அங்கு தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த கரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அதிகாரி கவிதா , ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படும் நோக்கத்தில் அங்கிருந்த அ.தி.மு.க. முகவர்களிடம் தி.மு.க. வேட்பாளர் குணசேகரன் 41 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். எனவே நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள் என்று கேட்கிறார். அந்த வீடியோ ஆதாரம் எங்களிடம் உள்ளது. தேர்தல் முறைகேடுக்கு இதுவே ஆதாரம். எனவே இது தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளோம் என்றார்.
க.பரமத்தி ஒன்றியம் 1-வது வார்டில் அ.தி.மு.க. வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் செந்தில்பாலாஜி வெளியிட்டுள்ள வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X