என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு - புதுவையில் முதல்வர் நாராயணசாமி தலைமையில் பேரணி
Byமாலை மலர்26 Dec 2019 1:01 PM GMT (Updated: 26 Dec 2019 1:01 PM GMT)
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, புதுவையில் முதல்வர் நாராயணசாமி தலைமையில் கூட்டணி கட்சிகளின் பேரணி இன்று நடைபெற்றது.
புதுச்சேரி:
மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் வன்முறை வெடித்தது.
வடகிழக்கு மாநிலங்களில் போராட்டங்கள் வலுப்பெற்றன. டெல்லி, உத்தர பிரதேசம், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. உயிரிழப்புகளும் நிகழ்ந்தன.
தமிழகத்திலும் குடியுரிமை சட்டத்துக்கு கடும் எதிர்ப்பு நிலவுகிறது. தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குடியுரிமை சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெறவேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
இதற்கிடையே, குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் கடந்த 23-ம் தேதி தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளின் பேரணி நடைபெற்றது.
இந்நிலையில், குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி புதுச்சேரியில் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் கூட்டணி கட்சிகள் பேரணி இன்று நடைபெற்றது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X