என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தருமபுரியில் 10-ம் வகுப்பு மாணவி விஷம் குடித்து தற்கொலை
Byமாலை மலர்19 Dec 2019 2:39 PM GMT (Updated: 19 Dec 2019 2:39 PM GMT)
தருமபுரியில் படிப்பு சரிவர வராததால் விரக்தி அடைந்த 10-ம் வகுப்பு மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
தருமபுரி:
தருமபுரி வட்டார வளர்ச்சி காலனியை சேர்ந்தவர் சக்தி. இவரது மனைவி மணிபாரதி. இவர்களது மகள் நந்தினி (வயது15). இவர் தருமபுரி அவ்வையார் அரசு மகளிர் மேல் நிலைபள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். நந்தினி தனது தாயிடம் எனக்கு படிப்பு வரவில்லை. அதனால் என்னால் தொடர்ந்து படிக்க முடியவில்லை. நான் பள்ளியை விட்டு நின்று விடுகிறேன் என்று கூறினார். இதனால் பெற்றோர்கள் அவருக்கு ஆறுதல் கூறி பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.
இதனால் மனமுடைந்து காணப்பட்ட நந்தினி கடந்த 16-ந்தேதி அன்று விஷத்தை அருந்தி விட்டு பள்ளிக்கு வந்தார். அப்போது திடீரென வகுப்பறையில் மாணவிக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதனை பார்த்து சக மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர். அவரது தாய் மணிபாரதிக்கு பள்ளி நிர்வாகத்தினர் தகவல் தெரிவித்தனர். அவர் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார். பின்னர் தனது மகளை மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றுமாலை நந்தினி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தருமபுரி டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X