என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குமரி மாவட்டத்தில் போலீசார் ஹெல்மெட் சோதனை - 889 பேர் மீது வழக்கு
Byமாலை மலர்18 Nov 2019 12:07 PM GMT (Updated: 18 Nov 2019 12:07 PM GMT)
குமரி மாவட்டத்தில் போலீசார் நடத்திய வாகன சோதனையில் ஹெல்மெட் அணியாமலும், கார்களில் சீட் பெல்ட் அணியாமலும் வாகனம் ஓட்டிவந்ததாக 889 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணியாமல் செல் பவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று நாகர்கோவிலில் நடந்த வாகன சோதனையில் ஹெல்மெட் அணியாமலும், கார்களில் சீட் பெல்ட் அணியாமலும் வாகனம் ஓட்டிவந்ததாக 103 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அபராத தொகை விதித்தனர்.
இதேப்போல் தக்கலை பகுதியில் நடந்த வாகன சோதனையில் குடித்துவிட்டு வாகனம் ஓட்டிவந்ததாகவும் மற்றும் ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளில் வந்ததாகவும் 309 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
குளச்சல் பஜார் பகுதி, கடற்கரை சாலைகளில் போலீசார் மேற்கொண்ட வாகன சோதனையில் குடித்துவிட்டு, சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டி வந்ததாக 281 பேர் மீதும், மேலும் சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் போலீசார் மேற்கொண்ட தொடர் வாகன சோதனையில் ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளில் வந்ததாகவும், சீட் பெல்ட் அணியாமலும் முறையான ஆவணங்கள் இன்றி வாகனம் ஓட்டி வந்ததாக 196 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து அபராத தொகை விதித்தனர். நேற்று ஒரே நாளில் மட்டும் 889 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இன்றும் போலீசார் முக்கிய சந்திப்பு பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
குமரி மாவட்டத்தில் மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணியாமல் செல் பவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று நாகர்கோவிலில் நடந்த வாகன சோதனையில் ஹெல்மெட் அணியாமலும், கார்களில் சீட் பெல்ட் அணியாமலும் வாகனம் ஓட்டிவந்ததாக 103 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அபராத தொகை விதித்தனர்.
இதேப்போல் தக்கலை பகுதியில் நடந்த வாகன சோதனையில் குடித்துவிட்டு வாகனம் ஓட்டிவந்ததாகவும் மற்றும் ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளில் வந்ததாகவும் 309 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
குளச்சல் பஜார் பகுதி, கடற்கரை சாலைகளில் போலீசார் மேற்கொண்ட வாகன சோதனையில் குடித்துவிட்டு, சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டி வந்ததாக 281 பேர் மீதும், மேலும் சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் போலீசார் மேற்கொண்ட தொடர் வாகன சோதனையில் ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளில் வந்ததாகவும், சீட் பெல்ட் அணியாமலும் முறையான ஆவணங்கள் இன்றி வாகனம் ஓட்டி வந்ததாக 196 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து அபராத தொகை விதித்தனர். நேற்று ஒரே நாளில் மட்டும் 889 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இன்றும் போலீசார் முக்கிய சந்திப்பு பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X