search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    குமரி மாவட்டத்தில் போலீசார் ஹெல்மெட் சோதனை - 889 பேர் மீது வழக்கு

    குமரி மாவட்டத்தில் போலீசார் நடத்திய வாகன சோதனையில் ஹெல்மெட் அணியாமலும், கார்களில் சீட் பெல்ட் அணியாமலும் வாகனம் ஓட்டிவந்ததாக 889 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணியாமல் செல் பவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் உத்தரவிட்டிருந்தார்.

    அதன்படி போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று நாகர்கோவிலில் நடந்த வாகன சோதனையில் ஹெல்மெட் அணியாமலும், கார்களில் சீட் பெல்ட் அணியாமலும் வாகனம் ஓட்டிவந்ததாக 103 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அபராத தொகை விதித்தனர்.

    இதேப்போல் தக்கலை பகுதியில் நடந்த வாகன சோதனையில் குடித்துவிட்டு வாகனம் ஓட்டிவந்ததாகவும் மற்றும் ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளில் வந்ததாகவும் 309 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    குளச்சல் பஜார் பகுதி, கடற்கரை சாலைகளில் போலீசார் மேற்கொண்ட வாகன சோதனையில் குடித்துவிட்டு, சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டி வந்ததாக 281 பேர் மீதும், மேலும் சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் போலீசார் மேற்கொண்ட தொடர் வாகன சோதனையில் ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளில் வந்ததாகவும், சீட் பெல்ட் அணியாமலும் முறையான ஆவணங்கள் இன்றி வாகனம் ஓட்டி வந்ததாக 196 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து அபராத தொகை விதித்தனர். நேற்று ஒரே நாளில் மட்டும் 889 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    இன்றும் போலீசார் முக்கிய சந்திப்பு பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
    Next Story
    ×