search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    கோவை அருகே வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை

    கோவை அருகே வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    கோவை வீரகேரளம் அருகே உள்ள பாலகிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் சக்திவேல்(44). வியாபாரி. இவரது தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் மிகுந்த மன வருத்தத்துடன் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தொண்டாமுத்தூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×