என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சமூக ஊடகங்களில் வெளியாகும் மழை தகவல்களை நம்ப வேண்டாம் - பொதுமக்களுக்கு அமைச்சர் அறிவுரை
Byமாலை மலர்24 Oct 2019 3:29 AM GMT (Updated: 24 Oct 2019 5:25 AM GMT)
சமூக ஊடகங்களில் வெளியாகும் மழை தொடர்பான ஆதாரமற்ற தகவல்களை நம்ப வேண்டாம் என்று பொதுமக்களுக்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அறிவுறுத்தி உள்ளார்.
சென்னை:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதையடுத்து பேரிடர் மேலாண்மைத்துறையின் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை சென்னை சேப்பாக்கம் எழிலகத்தில் செயல்பட தொடங்கி உள்ளது. அந்த அலுவலகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
எனவே சமூக ஊடகங்களில் வெளியாகும் மழை தொடர்பான ஆதாரமற்ற தகவல்களை மக்கள் நம்ப வேண்டாம். பத்திரிகைகள், தொலைக்காட்சி மற்றும் வானிலை ஆய்வு மையம் சொல்கிற மழை செய்தியை மட்டுமே மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். வடகிழக்கு பருவமழை பாதிப்பு குறித்து மக்களிடம் விழிப்புணர்வு, எச்சரிக்கை ஏற்படுத்த வேண்டுமே தவிர, யாரும் பீதி-அச்சத்தை ஏற்படுத்தக்கூடாது.
பருவமழை காலத்தின்போது யாரும் நீர்நிலைகள் அருகே ‘செல்பி’ எடுக்கக்கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது வருவாய் நிர்வாக கமிஷனர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், பேரிடர் மேலாண்மை இயக்குனர் டி.ஜெகநாதன் ஆகியோர் உடனிருந்தனர்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதையடுத்து பேரிடர் மேலாண்மைத்துறையின் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை சென்னை சேப்பாக்கம் எழிலகத்தில் செயல்பட தொடங்கி உள்ளது. அந்த அலுவலகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தற்போது மழை சீசனுக்கு ஏற்ப நிறைய ‘வெதர்மேன்கள்’ (வானிலை ஆர்வலர்கள்) வந்துவிட்டார்கள். எந்த வெதர்மேனுக்கும் அரசாங்கம் அங்கீகாரம் கொடுக்கவில்லை. அவர்கள் யூகத்தில் சொல்கிறார்கள். அது சில நேரங்களில் நடந்து விடுகிறது.
எனவே சமூக ஊடகங்களில் வெளியாகும் மழை தொடர்பான ஆதாரமற்ற தகவல்களை மக்கள் நம்ப வேண்டாம். பத்திரிகைகள், தொலைக்காட்சி மற்றும் வானிலை ஆய்வு மையம் சொல்கிற மழை செய்தியை மட்டுமே மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். வடகிழக்கு பருவமழை பாதிப்பு குறித்து மக்களிடம் விழிப்புணர்வு, எச்சரிக்கை ஏற்படுத்த வேண்டுமே தவிர, யாரும் பீதி-அச்சத்தை ஏற்படுத்தக்கூடாது.
பருவமழை காலத்தின்போது யாரும் நீர்நிலைகள் அருகே ‘செல்பி’ எடுக்கக்கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது வருவாய் நிர்வாக கமிஷனர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், பேரிடர் மேலாண்மை இயக்குனர் டி.ஜெகநாதன் ஆகியோர் உடனிருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X