search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    மேட்டுப்பாளையம் அருகே தந்தையை அடித்து கொன்ற மகன்

    மேட்டுப்பாளையம் அருகே தந்தையை அடித்து கொன்று பிணத்தை வீட்டிற்குள் புதைக்க முயன்ற மகன் போலீசில் சிக்கினார்.
    மேட்டுப்பாளையம்

    மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிறுமுகை சின்ன கள்ளிப்பட்டி சண்முகாபுரம் பழைய ஆதி திராவிடர் காலனியை சேர்ந்தவர் மாகாளி (60). கூலித்தொழிலாளி. இவரது மனைவி பூவாள். இவர் கடந்த 2 வருடத்திற்கு முன் இறந்து விட்டார். இதனால் மாகாளி தனியாக வசித்து வந்தார். இவரது மகன் சிவராஜ் (40) கூலித்தொழிலாளி.

    இவருக்கு திருமணமாகி 3 மனைவிகள் உள்ளனர். இவரும் அதே பகுதியில் தான் வசித்து வருகிறார். மாகாளிக்கும் அவரது மகன் சிவராஜூக்கும் குடும்பதகராறு இருந்து வந்தது.நேற்று இரவு 12 மணியளவில் சிவராஜ் குடிபோதையில் தனது தந்தை வீட்டிற்கு சென்றார். அப்போது இருவருக்கும் தகராறு உருவானது.

    இதனால் ஆத்திரம் அடைந்த சிவராஜ் தனது தந்தையை தாக்கினார். இதில் மயங்கி விழுந்த மாகாளி சம்பவ இடத்திலே உயிர் இழந்தார். இதனால் சிவராஜ் அதிர்ச்சி அடைந்தார்.

    தந்தையின் உடலை என்ன செய்வது என திகைத்த அவர் யாருக்கும் தெரியாமல் வீட்டில் குழி தோண்டி புதைக்க முடிவு செய்தார். அதன் படி தந்தையின் வீட்டில் கடப்பாரையால் குழி தோண்டினார். இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு விரைந்து வந்தனர். அவர்களை பார்த்ததும் வீட்டை பூட்டி விட்டு சிவராஜ் தப்பி ஓடி விட்டார். இது குறித்து அக்கம் பக்கத்தினர் சிறுமுகை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். பெரியநாயக்கன்பாளையம் டி.எஸ்.பி. மணி, சிறுமுகை இன்ஸ்பெக்டர் இளங்கோ, சப்-இன்ஸ்பெக்டர் ராஜ பிரபு ஆகியோர் அங்கு விரைந்து சென்றனர். கொலை செய்யப்பட்டு கிடந்த மாகாளி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    தப்பி ஓடிய கொலையாளி சிவராஜை போலீசார் தேடி வந்தனர். அவர் போலீஸ் பிடியில் சிக்கினார். அவரிடம் தந்தையை கொலை செய்தது ஏன்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.தந்தையை மகன் அடித்து கொன்ற சம்பவம் சிறுமுகை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×