search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மகன் கைது"

    • டாக்டர்கள் பரிசோதித்தபோது கொடிமலர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
    • கொடிமலரை கழுத்தை அறுத்து கொலை செய்தது யார்? என்று போலீசார் விசாரணை நடத்தினர்.

    ராம்ஜிநகர்:

    திருச்சி சோமரசம்பேட்டை வாசன் சிட்டி 12-வது கிராஸ் பகுதியை சேர்ந்தவர் லிங்கம்(வயது 55). இவர் நாடார் சத்திரத்தில் பழக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி கொடிமலர்(48). இவர்களுக்கு ராஜகுமாரன்(29) என்ற மகனும், வளர்மதி(28) என்ற மகளும் உள்ளனர்.

    வளர்மதிக்கு திருமணம் ஆகிவிட்டது. ராஜகுமாரன் திருச்சி சாஸ்திரி ரோட்டில் ஒரு நகைகடையில் வேலை செய்து வருகிறார். லிங்கம் தினமும் வியாபாரத்திற்காக மார்க்கெட் சென்று பழங்கள் வாங்கி வருவது வழக்கம்.

    நேற்று இவர் வழக்கம்போல பழங்கள் வாங்க சென்றுவிட்டார். திரும்பி வந்து பார்த்தபோது வீட்டில் கொடிமலர் கழுத்து அறுக்கப்பட்ட் நிலையில் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்தார். இதை பார்த்து அலறி துடித்த லிங்கம் மற்றும் அவரது மகன் ராஜகுமாரன் ஆகியோர் கொடிமலரின் உடலை மீட்டு திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது கொடிமலர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுபற்றி சோமரசம்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. ஜீயபுரம் டி.எஸ்.பி. பாலசந்தர், சோமரசம்பேட்டை இன்ஸ்பெக்டர் முகமது ஜாபர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.

    கொலை செய்யப்பட்ட கொடிமலரின் உடல் பிரேத பரிசோதனைக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டது. கொடிமலரை கழுத்தை அறுத்து கொலை செய்தது யார்? என்று போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அதிர்ச்சி தகவல்கள் வெளியானது.

    மகன் ராஜகுமாரனே தாய் கொடிமலரை கொலை செய்துவிட்டு நாடகமாடியது தெரியவந்தது. ராஜகுமாரன் தனது தந்தை வழி உறவினர் மகளை காதலித்து வந்துள்ளார். இவர்களது காதலுக்கு கொடிமலர் எதிர்ப்பு தெரிவித்தார்.

    மேலும் தனது உறவினர் மகளைதான் திருமணம் செய்யவேண்டும் என்று ராஜகுமாரனிடம் கூறியதாக தெரிகிறது. இதனால் ராஜகுமாரன் கடந்த 6-ந்தேதி விஷத்தை குடித்துவிட்டார். உடனே அவரை தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சைக்கு பின்னர் ராஜகுமாரன் வீடு திரும்பினார்.

    வீட்டுக்கு வந்தபிறகு தான் விரும்பிய பெண்ணுடன் திருமணம் செய்து வைக்குமாறு கொடிமலரிடம் வற்புறுத்தினார். அதற்கு கொடிமலர் பிடிவாதமாக மறுவிட்டார். இது ராஜகுமாரனுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

    நேற்று அதிகாலை லிங்கம் கடைக்கு சென்ற நிலையில் கொடிமலருக்கும், ராஜகுமாரனுக்கும் இடையே இது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் ஆத்திரம் அடைந்த ராஜகுமாரன் கத்தியால் கொடிமலரை குத்தி கொலை செய்தார்.

    பின்னர் யாரோ மர்மநபர் கொலை செய்துவிட்டதாக நாடகம் ஆடியுள்ளார். மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதை தொடர்ந்து போலீசார் ராஜகுமாரனை கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இந்த கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • நிலத்தை பாகம் பிரித்து தர வேண்டுமென சீனிவாசலு ரெட்டி பெற்றோரிடம் தகராறில் ஈடுபட்டார்.
    • தந்தையை பிடித்து கீழே தள்ளி மிதித்து கன்னத்தில் அறைந்தார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், மதனபள்ளி அடுத்த குண்டவாரி பள்ளியை சேர்ந்தவர் வெங்கட்ரமணா ரெட்டி. இவரது மனைவி லஷ்மியம்மா. இவர்களுக்கு மனோகர் ரெட்டி, ஸ்ரீனிவாசலு ரெட்டி என 2 மகன்கள் உள்ளனர்.

    விவசாய நிலத்தை பாகம் பிரித்து தர வேண்டுமென சீனிவாசலு ரெட்டி பெற்றோரிடம் தகராறு செய்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் நிலத்தை பாகம் பிரித்து தர வேண்டுமென சீனிவாசலு ரெட்டி பெற்றோரிடம் தகராறில் ஈடுபட்டார்.

    இதற்கு பெற்றோர் மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரம் அடைந்த சீனிவாசலு ரெட்டி அவரது தாயின் தலை முடியை பிடித்து தரதரவென இழுத்துச் சென்று கீழே தள்ளி காலால் சரமாரியாக உதைத்து தாக்கினார். இதனை தடுக்க வந்த தந்தையை பிடித்து கீழே தள்ளி மிதித்து கன்னத்தில் அறைந்தார்.

    இந்த சம்பவங்களை அங்கிருந்த நபர் ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டார்.

    இந்த வீடியோ பார்ப்பவர்களின் கண்களை கலங்க செய்தது. இதனைக் கண்ட போலீசார் வெங்கட்ராமண ரெட்டி மற்றும் அவரது மனைவியிடம் புகாரை பெற்று சீனிவாசலு ரெட்டியை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    • மது போதையில் வந்த முருகன், சிவந்திப்பூவிடம் அவர் இருக்கும் வீட்டை எழுதி தருமாறும், பொங்கல் பரிசு தொகுப்பு வாங்கிய ரூ.1,000 பணத்தை கேட்டும் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
    • கொலை செய்த முருகனை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள திப்பணம்பட்டி பத்திரகாளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுப்பையா. இவரது மனைவி சிவந்திப்பூ (வயது 80).

    இவரது கணவர் இறந்ததால் தனியாக வசித்து வந்துள்ளார். இவருக்கு 4 மகள்களும், முருகன் (50) என்பவர் உள்பட 2 மகன்களும் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணமாகி விட்டது.

    மூதாட்டி சிவந்திப்பூ புளி குத்தும் வேலைக்கு சென்ற தாகவும், அதன் மூலம் வரும் வருமானத்தையும், முதியோர் உதவித்தொகை மூலம் வரும் வருமானத்தையும் கொண்டு குடும்பம் நடத்தி வந்துள்ளார். அவரிடம் இருக்கும் பணத்தை கேட்டு அவரது மகன் முருகன் அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளார்.

    இந்நிலையில் நேற்று இரவில் மது போதையில் வந்த முருகன், சிவந்திப்பூவிடம் அவர் இருக்கும் வீட்டை எழுதி தருமாறும், பொங்கல் பரிசு தொகுப்பு வாங்கிய ரூ.1,000 பணத்தை கேட்டும் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

    அதற்கு சிவந்திப்பூ மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முருகன், தாய் என்றும் பாராமல் சிவந்தி பூவின் கழுத்தை துணியால் இறுக்கியும், வீட்டினுள் கிடந்த அம்மிக்கல் மற்றும் மற்றொரு கல்லை தலையில் போட்டும் கொலை செய்தார்.

    இதுகுறித்து அறிந்த அக்கம் பக்கத்தினர் பாவூர்சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த இன்ஸ்பெக்டர் சுரேஷ், சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் மற்றும் போலீசார் உயிரிழந்த சிவந்திப்பூவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்புலன்ஸ் மூலம் தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் கொலை செய்த முருகனை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • செபின் கிறிஸ்டியனின் பேச்சில் போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது.
    • செபாஸ்டியன் மரண வழக்கை போலீசார் கொலை வழக்காக மாற்றினர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் புன்னப்பிரா பகுதியை சேர்ந்தவர் செபாஸ்டியன்(வயது65). இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் சிக்கினார். இதில் அவருக்கு நடக்க முடியாமல் போனது. ஆகவே அவர் வீட்டில் படுத்த படுக்கையாக இருந்தார்.

    அவரை அவரது மனைவி உடனிருந்து கவனித்து வந்தார். புற்றுநோய் காரணமாக கடந்த 8 மாதங்களுக்கு முன்பு அவர் இறந்துவிட்டார். இதையடுத்து படுத்த படுக்கையாக இருந்த செபாஸ்டியனை அவரது குழந்தைகள் கவனித்து வந்தனர்.

    இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கட்டியில் இருந்து கீழே தவறி விழுந்ததில் காயமடைந்துவிட்டதாக கூறி, ஆஸ்பத்திரியில் செபாஸ்டியன் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர், கடந்த 21-ந்தேதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    அவரது உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். அதில் செபாஸ்டியன் அடித்துக்கொலை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் தவறி விழுந்ததில் காயமடைந்து இறக்கவில்லை என்றும், அவரது தலை மற்றும் கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டதில் அவர் இறந்திருப்பதாகவும் பிரேத பரிசோதனை அறிக்கையில் டாக்டர்கள் தெரிவித்திருந்தனர்.

    அதன் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அவர்கள் படுத்த படுக்கையாக இருந்த செபாஸ்டியனை கவனித்து வந்த அவரது மூத்த மகன் செபின் கிறிஸ்டியன்(26) உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தினர். அப்போது செபின் கிறிஸ்டியனின் பேச்சில் போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது.

    ஆகவே அவரிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அதில் தனது தந்தையை வாக்கரால் அடித்தும், காலை வைத்து கழுத்தில் மிதித்தும் கொன்ற தகவலை செபின் கிறிஸ்டியன் தெரிவித்தார். தாய் இறந்தபிறகு தந்தை செபாஸ்டியனை, மூத்த மகன் என்ற அடிப்படையில் செபின் கிறிஸ்டியனே அதிகமாக பார்த்து வந்திருக்கிறார்.

    சம்பவத்தன்று செபாஸ்டியன் படுக்கையிலேயே மலம் கழித்துவிட்டார். இது மகன் செபின் கிறிஸ்டியனுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது. அவர் தந்தை பயன்படுத்தும் வாக்கரை எடுத்து தந்தையின் தலையில் அடித்துள்ளார். வலியால் துடித்த அவர் படுக்கையில் இருந்து கீழே உருண்டு விழுந்திருக்கிறார்.

    அதன்பிறகும் தந்தையை வாக்கரால் தொடர்ந்து தாக்கியபடி இருந்துள்ளார். மகனின் இந்த தாக்குதலால் நிலைகுலைந்த செபாஸ்டியன் வலியால் அலறி துடித்திருக்கிறார். இருந்தபோதிலும் ஆத்திரம் தீராத செபின் கிறிஸ்டியன், தனது காலால் தந்தையின் கழுத்தில் வைத்து மிதித்துள்ளார்.

    அதில் படுகாயமடைந்ததாலேயே செபாஸ்டியன் இறந்திருக்கிறார். மேற்கண்ட தகவல்கள் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து செபாஸ்டியன் மரண வழக்கை போலீசார் கொலை வழக்காக மாற்றினர்.

    மகன் செபின் கிறிஸ்டியனை கைது செய்தனர். பின்பு அவர், ஆலப்புழா முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். படுத்த படுக்கையாக இருந்த தந்தையை மகனே கொடூரமாக கொன்ற சம்பவம் ஆலப்புழாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சக்திவேல் அடிக்கடி தனது பெற்றோருடன் தகராறு செய்து வந்துள்ளார்.
    • கொலை சம்பவத்தில் ஈடுபட்ட சக்திவேலை கைது செய்து தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் மனநல சிகிச்சைக்கு உட்படுத்தி உள்ளனர்.

    சாம்பவர்வடகரை:

    தென்காசி மாவட்டம் சுரண்டையை அடுத்த சாம்பவர்வடகரை மேலூர் கிராமத்தை சேர்ந்தவர் கருப்பசாமி(வயது 74). இவரது மனைவி செண்டு. இவர்களது மகன் சக்திவேல்(45). இவருக்கு திருமணமாகி, ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.

    சக்திவேலுக்கு அவ்வப்போது மனநிலை பாதிப்பு ஏற்பட்டு வந்ததாகவும், அதற்காக அவர் சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் அவரது மனைவி அவரை பிரிந்து அவரது 2 குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு செங்கோட்டை பகுதியில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

    இதற்கிடையே சக்திவேல் அடிக்கடி தனது பெற்றோருடன் தகராறு செய்து வந்துள்ளார். சமீபத்தில் தனது பெற்றோரை தாக்கி வீட்டை விட்டு வெளியேற்றியுள்ளார். இதனால் கருப்பசாமி தனது மனைவியுடன் அதே பகுதியில் உள்ள கருப்பசாமி கோவில் வளாகத்தில் சிறிய கூரை அமைத்து தங்கி வந்துள்ளார். மேலும் அவர் அப்பகுதியில் உள்ள ஒரு காற்றாலை நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார்.

    இந்நிலையில் இன்று அதிகாலை கருப்பசாமி வசிக்கும் இடத்திற்கு சக்திவேல் சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த கருப்பசாமியிடம் வாக்குவாதம் செய்த சக்திவேல், தந்தை என்றும் பாராமல் அங்கு கிடந்த கல்லால் அவரை முகம் தெரியாத அளவிற்கு சரமாரியாக தாக்கி கொலை செய்தார்.

    தகவல் அறிந்த சாம்பவர்வடகரை சப்-இன்ஸ்பெக்டர் சிவசங்கர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கருப்பசாமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட சக்திவேலை கைது செய்து தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் மனநல சிகிச்சைக்கு உட்படுத்தி உள்ளனர். இதுகுறித்து சாம்பவர்வடகரை இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கவிதா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • வீட்டுக்கு வந்த சின்னத்துரை வீட்டில் மனைவி, பிள்ளைகள் இல்லாததால் ஆத்திரம் அடைந்தார்.
    • தாயை அவதூறாக பேசியதால் தந்தையை கொன்றதாக கூறி உள்ளார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி நகரின் மையப்பகுதியில் எம்.ஜி.ஆர். பூங்கா அருகே பொது மையவாடி சுமார் 45 மதிக்கத்தக்க ஆண் ஒருவர் நேற்று மாலை கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

    கொலை செய்யப்பட்டவர் யார்? அவரை கொலை செய்தவர்கள் யார்? எதற்காக அவர் கொலை செய்யப்பட்டார்? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

    இதில் கொலை செய்யப்பட்டு கிடந்தவர் தூத்துக்குடி மாவட்டம் ஏரல் கணேஷபுரத்தைச் சேர்ந்த கட்டிட தொழிலாளியான சின்னத்துரை(வயது42) என்பது தெரியவந்தது. போலீசாரின் தொடர் விசாரணையில் திடுக்கிடும் தகவல் கிடைத்து. அதன் விபரம் வருமாறு:-

    சின்னத்துரைக்கு திருமணமாகி ராஜேஸ்வரி (38 ) என்ற மனைவியும், 4 மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். தற்போது ஆறுமுகநேரி அருகே மூலக்கரை செல்லும் சாலையில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். சின்னத்துரை அடிக்கடி குடித்து விட்டு வந்து வீட்டில் தகராறு செய்து வந்துள்ளார். இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த நிலையில் காணப்பட்ட ராஜேஸ்வரி குழந்தைகளை அழைத்துக் கொண்டு வெளியே சென்று விட்டார்.

    இந்நிலையில் வீட்டுக்கு வந்த சின்னத்துரை வீட்டில் மனைவி, பிள்ளைகள் இல்லாததால் ஆத்திரம் அடைந்தார். இதனைத் தொடர்ந்து அக்கம்பக்கத்தில் மற்றும் உறவினர் வீடுகளில் தேடிப் பார்த்தும் அவர்கள் கிடைக்கவில்லை.

    அப்போது அவரது மகன்களில் ஒருவரான 17 வயது மகன் மட்டும் வீட்டிற்கு வந்துள்ளார். அவரை அழைத்து கொண்டு சின்னத்துரை பல்வேறு இடங்களில் மனைவி, குழந்தைகளை தேடி உள்ளார். பின்னர் தூத்துக்குடிக்கு வந்து, மையவாடியில் வைத்து மது குடித்துள்ளார். அதிகமான போதை ஏறிய நிலையில் மனைவியை அவர் அவதூறாக பேசி மகனையும் திட்டியுள்ளார்.

    இதனால் ஆத்திரமடைந்த 17 வயது மகன் அங்கிருந்த அரிவாளால் தன் தந்தையை சரமாரியாக வெட்டி உள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதையடுத்து அவரது மகனை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அவர் தன் தாயை அவதூறாக பேசியதால் தந்தையை கொன்றதாக கூறி உள்ளார். தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மது குடிக்கும் பழக்கம் உள்ள சுப்பிரமணியும், மகன் விக்னேஷும் அடிக்கடி தகராறு செய்து கொள்வது வழக்கம்.
    • மது போதையில் இருந்த விக்னேஷ் மது குடிக்க தந்தையிடம் பணம் கேட்டு உள்ளார்.

    சேலம், நவ:

    சேலம் அருகே கருப்பூர் சந்ப்பேதைட்டை 3-வது வார்டு பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி(54). கூலி வேலை செய்து வரும் இவருக்கு செல்வி (40) என்ற மனைவியும், விக்னேஷ் (20), கோபிநாத் (18) ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.

    மது குடிக்கும் பழக்கம் உள்ள சுப்பிரமணியும், மகன் விக்னேஷும் அடிக்கடி தகராறு செய்து கொள்வது வழக்கம்.

    அடித்து கொலை

    கடந்த 29-ந் தேதி மது போதையில் இருந்த விக்னேஷ் மது குடிக்க தந்தையிடம் பணம் கேட்டு உள்ளார். சுப்பிரமணி பணம் தர மறுத்ததால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த விக்னேஷ் சுப்பிரமணியை தாக்கி கழுத்தை நெரித்து கீழே தள்ளி உள்ளார். இதில் தலையில் படுகாயம் அடைந்த சுப்பிரமணியை குடும்பத்தினர் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த சுப்பிரமணி நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    இது குறித்த புகாரின் பேரில் கருப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விக்னேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மது குடிக்க பணம் தர மறுத்த தந்தையை தாக்கி மகன் கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • தந்தையின் அறிவுரையை ஏற்காமல் நாக தேஜா கள்ளத்தொடர்பை தொடர்ந்து வந்தார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து வெளியூர் தப்பிச்செல்ல பஸ் நிலையத்தில் மறைந்திருந்த நாகதேஜாவை கைது செய்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் ஏலூர் மாவட்டம், அகிரி பள்ளி மண்டலம், சோப்பரமேடுவை சேர்ந்தவர் சீனிவாசராவ் (வயது 47). இவரது மகன் நாக தேஜா.

    சீனிவாசராவுக்கு 4 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. சீனிவாசராவ் மகனுடன் சேர்ந்து விவசாயம் செய்து வந்தார்.

    இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த திருமணமான பெண்ணுடன் நாகதேஜாவுக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதனை அறிந்த சீனிவாசராவ் கள்ளத்தொடர்பை கைவிட்டு வாழ வேண்டும் என அறிவுரை கூறினார்.

    ஆனாலும் தந்தையின் அறிவுரையை ஏற்காமல் நாக தேஜா கள்ளத்தொடர்பை தொடர்ந்து வந்தார். சீனிவாச ராவ் மகனுக்கு அடிக்கடி அறிவுரை கூறியதால் ஆத்திரம் அடைந்தார். கள்ளத்தொடர்புக்கு இடையூறாக உள்ள தந்தையை கொலை செய்ய நாக தேஜா முடிவு செய்தார்.

    நேற்று முன்தினம் இரவு இது சம்பந்தமாக தந்தை மகன் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த நாக தேஜா அருகில் இருந்த செங்கல்லை எடுத்து தந்தையை சரமாரியாக தாக்கினார். தலையில் படுகாயம் அடைந்து ரத்தம் கொட்டியது. இதனால் மயங்கி கீழே விழுந்த சீனிவாசராவ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    தந்தை இறந்ததை அறிந்த நாகதேஜா அங்கிருந்து தப்பி ஓடினார்.

    அருகில் இருந்தவர்கள் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அகிரி பள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சீனிவாசராவின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அங்குள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து வெளியூர் தப்பிச்செல்ல பஸ் நிலையத்தில் மறைந்திருந்த நாகதேஜாவை கைது செய்தனர்.

    • பலத்த காயமடைந்த வெங்கடேஷை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
    • சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து ஹரீஷை கைது செய்தனர்.

    சூளகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த பேரிகை பகுதியைச் சேர்ந்த 36 வயது பெண். இவரது கணவர் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். அந்த பெண் அங்குள்ள ஒரு அங்கன்வாடி மையத்தில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

    மகாராஜாபுரத்தைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் (35). இவருக்கு ஏற்கனவே திருமணமாகி கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார்.

    இந்த நிலையில் அந்த பெண்ணுக்கும், வெங்கடேஷூக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியது தெரிகிறது.

    இந்த நிலையில் அந்த பெண்ணின் உறவினர் மகனான ஹரீஷ் (23) என்பவர் அடிக்கடி வீட்டிற்கு வந்து செல்வார்.

    அப்போது அந்த பெண்ணுக்கும் , வெங்கடேஷூக்கும் இடையே உள்ள கள்ளத்தொடர்பு குறித்து அக்கம்பக்கத்தினர் பேசுவதை கேட்டு ஹரீஷ் அந்த பெண்ணை கண்டித்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று இரவு அந்த பெண்ணின் வீட்டிற்கு வெங்கடேஷ் வந்துள்ளார்.

    அப்போது அங்கு வந்த ஹரீஷ், எதற்காக நீங்கள் இங்கு வந்தீர்கள் என்று கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார்.

    அப்போது ஆத்திரத்தில் ஹரீஷ் அவரை சரமாரியாக கைகளாலும், கட்டையாலும் தாக்கியுள்ளார்.

    இதில் பலத்த காயமடைந்த வெங்கடேஷை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு சிறிது நேரத்தில் வெங்கடேஷ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து தகவலறிந்த பேரிகை போலீசார் உடனே சம்பவ இடத்திற்கு வந்து வெங்கடேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து ஹரீஷை கைது செய்தனர்.

    • ராமு மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
    • கொலையை மறைக்க பஞ்சாயத்து தலைவி கணவரை சிக்க வைத்தது அம்பலம்

    பண்ருட்டி, ஆக.14-

    பண்ருட்டி அருகே தந்தையை மகனே கட்டையால் அடித்து கொன்றுவிட்டு பஞ்சாயத்து தலைவி கணவரை சிக்க வைத்து நாடகமாடியது தெரியவந்தது.கடலூர் மாவட்டம் பண்ருட்டி எல்.என்.புரம் சென்னை சாலையை சேர்ந்தவர் கவர்னர் என்ற ராமு (வயது 69). இவர் அதே பகுதியில் சைக்கிள் பழுது பார்க்கும் கடை வைத்து நடத்தி வந்தார். இவருக்கு புருஷோத்தமன், பிரபாகரன்,மகாலிங்கம் ஆகிய 3 மகன்கள் உள்ளனர். புருஷோத்தமன் தனது மனைவியுடன் ராமு வீட்டில் வசித்து வருகிறார். புருஷோத்தமன் தி.மு.க ஒன்றிய பிரதிநிதியாக உள்ளார். பிரபாகரன், மகாலிங்கம், அருகருகே உள்ள வீட்டில் வசித்து வருகின்றனர்.

    கடந்த மாதம் 24-ந்தேதி வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில் ராமு மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா, இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் தங்கவேலு தலைமையிலான போலீசார் கொலையாலிகளை பிடிக்க 3 தனிப்படை அமைத்து தேடி வந்தனர். எல்.என்.புரம் பஞ்சாயத்து தலைவி கணவர் அ.தி.மு.கவில் உள்ளார். ராமு இறந்து கிடந்த போது அவரது உடலின் மீது அ.தி.மு.க கட்சியின் துண்டு கிடந்ததின் அடிப்படையிலும், கொலை நடந்த இடத்தில் இருந்து மோப்ப நாய் பக்கத்து தெருவில் உள்ள பஞ்சாயத்து தலைவியின் வீட்டிற்கு சென்றதால் முதற்கட்ட விசாரணையாக பஞ்சாயத்து தலைவியின் கணவரை விசாரிக்க முடிவு செய்து அவரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று அவர் யார் யாருடன் பேசி வந்தார் என அவருடைய செல்போனை ஆய்வு செய்தனர்.பின்னர் கொலையான ராமுவிற்கும் இவருக்கும் ஏதேனும் முன்விரோதம் உள்ளதா என்பது குறித்து பல்வேறு கேள்விகளை போலீசார் பஞ்சாயத்து தலைவி கணவரிடம் கேட்ட நிலையில் கொலைக்கும் அவருக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை என தெரியவந்தது.

    அடுத்தகட்டமாக போலீசார் ராமுவின் மகன்கள், மருமகள்களிடம் விசாரணை நடத்த முடிவு செய்தனர். அதன்படி ராமு மகன்கள், மருமகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தது. இதில் புருஷோத்தமன் தனது தந்தையை கட்டையால் தாக்கி கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். உடனே போலீசார் புருஷோத்தமனை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தினர். இதுகுறித்து அவர் போலீசாரின் வாக்குமூலத்தில் கூறியதாவது:- 

    எனக்கும் எனது தந்தை ராமுவிற்கும் கடந்த சில நாட்களாக பிரச்சினை இருந்தது. இந்த பிரச்சினை காரணமாக ஆத்திரத்தில் இருந்த நான் சம்பவத்தன்று வீட்டின் முன் படுத்து தூங்கி கொண்டிருந்த எனது தந்தையை வாயை துணியால் அமுக்கி கட்டையால் தாக்கி கொலை செய்துவிட்டு உடலை வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில் போட்டுவிட்டேன். இந்த கொலையில் என் மீது யாருக்கும் சந்தேகம் ஏற்படாத வகையில் எனது தந்தை உடலின் மீது அ.தி.மு.க கட்சி துண்டை போட்டுவிட்டு பக்கத்து தெருவில் உள்ள பஞ்சாயத்து தலைவி கணவர் வீட்டிற்கு போய்விட்டு பின்னர் அங்கிருந்து சென்றுவிட்டேன். நான் நினைத்தபடி போலீஸ் மோப்ப நாய் எனது தந்தை இறந்து கிடந்த இடத்தில் இருந்து பஞ்சாயத்து தலைவி கணவர் வீட்டிற்கு சென்றது. மேலும் நான் செய்த இந்த நாடகத்தால் அவரின் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் இந்த கொலையிலிருந்து நான் தப்பித்தேன் என்று நினைத்தேன். ஆனால் போலீசார் இந்த கொலைக்கான காரணத்தை கண்டுபிடித்து விட்டனர் இவ்வாறு அவர் கூறினார். தந்தையை மகனே கொலை செய்து விட்டு பழியை பஞ்சாயத்து தலைவி கணவர் மீது போடுவதற்கு நாடகமாடிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • தந்தை இறந்து போனதால் பயந்து போன ராமமூர்த்தி அவர் வீட்டில் தவறி விழுந்து இறந்ததாக நாடகமாடியது அம்பலமாகியது.
    • சொத்து தகராறில் தந்தையை மகனே அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ஊத்துக்கோட்டை:

    ஊத்துக்கோட்டை அருகே உள்ள காக்க வாக்கத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 70). இவருக்கு 2 மனைவிகள். முதல் மனைவி தனலட்சுமி இறந்து விட்டார். இவர்களுக்கு ஆதிசேஷன் என்ற மகன் உள்ளார். சுப்பிரமணியின் 2-வது மனைவி வசந்தா. இவர்களுக்கு ராமமூர்த்தி (45) என்ற மகன்,ஒரு மகள் உள்ளனர். சுப்பிரமணி 2-வது மனைவி மற்றும் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த 7-ந் தேதி சுப்பிரமணி வீட்டில் தவறி விழுந்து இறந்து விட்டதாக உறவினர்களிடம் குடும்பத்தினர் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. இது தொடர்பாக ஊத்துக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதற்கிடையே பிரேத பரிசோதனை அறிக்கையில் சுப்பிரமணி அடித்து கொலை செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் சுப்பிரமணியின் 2-வது மனைவியின் மகன் ராமமூர்த்தியிடம் விசாரணை நடத்தினர். இதில் சம்பவத்தன்று இரவு ராமமூர்த்தி சொத்து தொடர்பாக ஏற்பட்ட தகராறில் தந்தை சுப்பிரமணியை அடித்து கொலை செய்து இருப்பது தெரியவந்தது. சுப்பிரமணி தனது முதல் மனைவியின் மகன் ஆதிசேஷனுக்கு ஒரு ஏக்கர் நிலம் வழங்கியதாக கூறப்படுகிறது. இதற்கு ராமமூர்த்தி எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். இந்த தகராறு கொலையில் முடிந்து உள்ளது. தந்தை இறந்து போனதால் பயந்து போன ராமமூர்த்தி அவர் வீட்டில் தவறி விழுந்து இறந்ததாக நாடகமாடியது அம்பலமாகியது.

    இதைத்தொடர்ந்து ராமமூர்த்தியை போலீசார் கைது செய்தனர். சொத்து தகராறில் தந்தையை மகனே அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கடந்த 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் 12-ந் தேதி நள்ளிரவு ஜெயமேரி செல்போனில் வீடியோகால் மூலம் வேறு நபருடன் நிர்வாணமாக பேசிக்கொண்டு இருந்தார்.
    • வழக்கில் அமலோற்பவநாதன் மீதான கொலை குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

    புதுச்சேரி:

    புதுவை லாஸ்பேட்டையை சேர்ந்தவர் ராஜசேகர உடையார். அவரது 2-வது மனைவி ஜெயமேரி (வயது 51). இவர்களது மகன் அமலோற்பவ நாதன் (28). பி.டெக் என்ஜினீயர்.

    சொத்து தகராறு காரணமாக கடந்த 2014-ம் ஆண்டு ராஜசேகர உடையார் முதல் மனைவியின் உறவினரான மணவாளன் கொலை வழக்கு தொடர்பாக ஜெயமேரி கைது செய்யப்பட்டு காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    பின்னர் ஜாமீனில் வந்த அவர் லாஸ்பேட்டை கிருஷ்ணாநகர் விரிவாக்கம் 20-வது குறுக்கு தெருவில் தனது மகனுடன் வசித்து வந்தார்.

    கடந்த 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் 12-ந் தேதி நள்ளிரவு ஜெயமேரி செல்போனில் வீடியோகால் மூலம் வேறு நபருடன் நிர்வாணமாக பேசிக்கொண்டு இருந்தார்.

    இதனை பார்த்த மகன் அமலோற்பவநாதன், மிகுந்த கோபமடைந்தார். இந்த வயதில் வேறுநபருடன் வீடியோ கால் மூலம் நிர்வாணமாக பேசுகிறாயே என கேட்டு ஆத்திரத்தில் வீட்டில் கிடந்த நாற்காலியால் தாய் என்றும் பாராமல் ஜெயமேரியை சரமாரியாக தாக்கினார்.

    இதில் காயம் அடைந்த அவர் மயங்கி விழுந்தார். பின்னர் சமையல் அறையில் இருந்த கத்தியால் 12 முறை தாயை அமலோற்பவநாதன் குத்தி கொலை செய்தார். அதன்பின் உருளையன்பேட்டை போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார்.

    இந்த கொலை தொடர்பாக லாஸ்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து அமலோற்பவநாதனை கைது செய்தனர். பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். அமலோற்பவநாதன் மீதான கொலை வழக்கு விசாரணை புதுச்சேரி 3-வது கூடுதல் மாவட்ட அமர்வு கோர்ட்டு நீதிபதி இளவரசன் முன்னிலையில் நடந்து வந்தது. இந்த வழக்கில் இறுதி விசாரணை முடிவடைந்து தீர்ப்பு கூறப்பட்டது.

    இந்த வழக்கில் அமலோற்பவநாதன் மீதான கொலை குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

    ×