search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குனியமுத்தூரில் பணம் தர மறுத்த தாைய தாக்கிய மகன்
    X

    குனியமுத்தூரில் பணம் தர மறுத்த தாைய தாக்கிய மகன்

    • மணிகண்டன் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
    • மணிகண்டனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    குனியமுத்தூர்:

    கோவை குனியமுத்தூர் வீரமாத்தி மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் தனலட்சுமி (60). இவரது மகன் மணிகண்டன் (34) கூலி தொழிலாளி. இந்த நிலையில் இவர் வேலைக்கு சரியாக செல்லாமல் அடிக்கடி குடித்துவிட்டு வீட்டில் தகராறு செய்து வந்தார்.

    இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் சம்பவத்தன்று மணிகண்டன் குடிபோதையில் வீட்டிற்கு வந்தார். அப்போது தனது தாயிடம் குடிப்பதற்கு பணம் கேட்டார். ஆனால் அவர் பணம் இல்லை என்று மறுத்து விட்டார்.

    இதில் ஆத்திரம் அடைந்த மணிகண்டன் அவரது தாயை தகாத வார்த்தைகளால் திட்டி சரமாரியாக தாக்கினார். இதனை தடுக்க வந்த அவரது சகோதரியையும் அவர் தாக்கினார். பின்னர் இதுகுறித்து தனலட்சுமி குனியமுத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×