search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தந்தை கொலை"

    • செபின் கிறிஸ்டியனின் பேச்சில் போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது.
    • செபாஸ்டியன் மரண வழக்கை போலீசார் கொலை வழக்காக மாற்றினர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் புன்னப்பிரா பகுதியை சேர்ந்தவர் செபாஸ்டியன்(வயது65). இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் சிக்கினார். இதில் அவருக்கு நடக்க முடியாமல் போனது. ஆகவே அவர் வீட்டில் படுத்த படுக்கையாக இருந்தார்.

    அவரை அவரது மனைவி உடனிருந்து கவனித்து வந்தார். புற்றுநோய் காரணமாக கடந்த 8 மாதங்களுக்கு முன்பு அவர் இறந்துவிட்டார். இதையடுத்து படுத்த படுக்கையாக இருந்த செபாஸ்டியனை அவரது குழந்தைகள் கவனித்து வந்தனர்.

    இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கட்டியில் இருந்து கீழே தவறி விழுந்ததில் காயமடைந்துவிட்டதாக கூறி, ஆஸ்பத்திரியில் செபாஸ்டியன் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர், கடந்த 21-ந்தேதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    அவரது உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். அதில் செபாஸ்டியன் அடித்துக்கொலை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் தவறி விழுந்ததில் காயமடைந்து இறக்கவில்லை என்றும், அவரது தலை மற்றும் கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டதில் அவர் இறந்திருப்பதாகவும் பிரேத பரிசோதனை அறிக்கையில் டாக்டர்கள் தெரிவித்திருந்தனர்.

    அதன் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அவர்கள் படுத்த படுக்கையாக இருந்த செபாஸ்டியனை கவனித்து வந்த அவரது மூத்த மகன் செபின் கிறிஸ்டியன்(26) உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தினர். அப்போது செபின் கிறிஸ்டியனின் பேச்சில் போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது.

    ஆகவே அவரிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அதில் தனது தந்தையை வாக்கரால் அடித்தும், காலை வைத்து கழுத்தில் மிதித்தும் கொன்ற தகவலை செபின் கிறிஸ்டியன் தெரிவித்தார். தாய் இறந்தபிறகு தந்தை செபாஸ்டியனை, மூத்த மகன் என்ற அடிப்படையில் செபின் கிறிஸ்டியனே அதிகமாக பார்த்து வந்திருக்கிறார்.

    சம்பவத்தன்று செபாஸ்டியன் படுக்கையிலேயே மலம் கழித்துவிட்டார். இது மகன் செபின் கிறிஸ்டியனுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது. அவர் தந்தை பயன்படுத்தும் வாக்கரை எடுத்து தந்தையின் தலையில் அடித்துள்ளார். வலியால் துடித்த அவர் படுக்கையில் இருந்து கீழே உருண்டு விழுந்திருக்கிறார்.

    அதன்பிறகும் தந்தையை வாக்கரால் தொடர்ந்து தாக்கியபடி இருந்துள்ளார். மகனின் இந்த தாக்குதலால் நிலைகுலைந்த செபாஸ்டியன் வலியால் அலறி துடித்திருக்கிறார். இருந்தபோதிலும் ஆத்திரம் தீராத செபின் கிறிஸ்டியன், தனது காலால் தந்தையின் கழுத்தில் வைத்து மிதித்துள்ளார்.

    அதில் படுகாயமடைந்ததாலேயே செபாஸ்டியன் இறந்திருக்கிறார். மேற்கண்ட தகவல்கள் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து செபாஸ்டியன் மரண வழக்கை போலீசார் கொலை வழக்காக மாற்றினர்.

    மகன் செபின் கிறிஸ்டியனை கைது செய்தனர். பின்பு அவர், ஆலப்புழா முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். படுத்த படுக்கையாக இருந்த தந்தையை மகனே கொடூரமாக கொன்ற சம்பவம் ஆலப்புழாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சக்திவேல் அடிக்கடி தனது பெற்றோருடன் தகராறு செய்து வந்துள்ளார்.
    • கொலை சம்பவத்தில் ஈடுபட்ட சக்திவேலை கைது செய்து தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் மனநல சிகிச்சைக்கு உட்படுத்தி உள்ளனர்.

    சாம்பவர்வடகரை:

    தென்காசி மாவட்டம் சுரண்டையை அடுத்த சாம்பவர்வடகரை மேலூர் கிராமத்தை சேர்ந்தவர் கருப்பசாமி(வயது 74). இவரது மனைவி செண்டு. இவர்களது மகன் சக்திவேல்(45). இவருக்கு திருமணமாகி, ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.

    சக்திவேலுக்கு அவ்வப்போது மனநிலை பாதிப்பு ஏற்பட்டு வந்ததாகவும், அதற்காக அவர் சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் அவரது மனைவி அவரை பிரிந்து அவரது 2 குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு செங்கோட்டை பகுதியில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

    இதற்கிடையே சக்திவேல் அடிக்கடி தனது பெற்றோருடன் தகராறு செய்து வந்துள்ளார். சமீபத்தில் தனது பெற்றோரை தாக்கி வீட்டை விட்டு வெளியேற்றியுள்ளார். இதனால் கருப்பசாமி தனது மனைவியுடன் அதே பகுதியில் உள்ள கருப்பசாமி கோவில் வளாகத்தில் சிறிய கூரை அமைத்து தங்கி வந்துள்ளார். மேலும் அவர் அப்பகுதியில் உள்ள ஒரு காற்றாலை நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார்.

    இந்நிலையில் இன்று அதிகாலை கருப்பசாமி வசிக்கும் இடத்திற்கு சக்திவேல் சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த கருப்பசாமியிடம் வாக்குவாதம் செய்த சக்திவேல், தந்தை என்றும் பாராமல் அங்கு கிடந்த கல்லால் அவரை முகம் தெரியாத அளவிற்கு சரமாரியாக தாக்கி கொலை செய்தார்.

    தகவல் அறிந்த சாம்பவர்வடகரை சப்-இன்ஸ்பெக்டர் சிவசங்கர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கருப்பசாமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட சக்திவேலை கைது செய்து தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் மனநல சிகிச்சைக்கு உட்படுத்தி உள்ளனர். இதுகுறித்து சாம்பவர்வடகரை இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கவிதா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • நாராயணசாமி மீது அஸ்வத் குமார் கடும் ஆத்திரத்தில் இருந்து வந்தார்.
    • அஸ்வத் குமார் அரிவாளுடன் நேராக போலீஸ் நிலையத்திற்கு சென்றுள்ளார்.

    கயத்தாறு:

    தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள கடம்பூர் அக்ரஹார தெருவை சேர்ந்தவர் தசரதன் (வயது 50) விவசாயி.

    இவரது மகன் அஸ்வத் குமார் (30) பசுவந்தனையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி அருணா. கணவன்-மனைவி இடையே கடந்த சில நாட்களாக கருத்து வேறுபாடு ஏற்பட்டு அருணா கீழகூட்டுப்பண்ணை பகுதியில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார்.

    அஸ்வத் குமார் கடந்த சில நாட்களாகவே தனது மனைவியை தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு அழைத்ததாகவும், இதுதொடர்பாக அவருக்கும், அவரது மாமனார் நாராயணசாமிக்கும் இடையே தகராறு இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

    இதனால் நாராயணசாமி மீது அஸ்வத் குமார் கடும் ஆத்திரத்தில் இருந்து வந்தார்.

    இது தொடர்பாக ஆவேசம் அடைந்த அஸ்வத் குமார் இன்று காலை அரிவாளுடன் மாமனார் வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். இதைப்பார்த்த அவரது தந்தை தசரதன் அதிர்ச்சி அடைந்தார். அவர் இதுபற்றி தனது சம்பந்தி நாராயணசாமியிடம் போன் மூலம் தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    இதையடுத்து நாராயணசாமி வீட்டில் அனைத்து கதவுகளையும் அடைத்து விட்டு வீட்டிற்குள் இருந்துள்ளார். அப்போது அரிவாளுடன் அங்கு சென்ற அஸ்வத் குமார் வீட்டு கதவை அடித்து உடைத்து சூறையாடி உள்ளார்.

    இந்நிலையில் மகனை சமாதானப்படுத்துவதற்காக அங்கு சென்ற தசரதன், அஸ்வத் குமாரை கண்டித்து அவரை தடுத்ததாக தெரிகிறது. இதனால் ஆவேசம் அடைந்த அஸ்வத் குமார் தந்தை என்றும் பாராமல் தசரதனை அரிவாளால் வெட்டினார். இதனால் படுகாயம் அடைந்த அவர் அங்கிருந்து ஓடிய போது அவரை அஸ்வத் குமார் மீண்டும் சரமாரியாக வெட்டினார்.

    இதில் ரத்த வெள்ளத்தில் சாய்ந்த தசரதன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து இறந்தார். இந்த கொலை பற்றிய தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், சப்-இன்ஸ்பெக்டர் ஆன்டனி திலீப் மற்றும் போலீசார் விரைந்து சென்று தசரதன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்நிலையில் அஸ்வத் குமார் அரிவாளுடன் நேராக போலீஸ் நிலையத்திற்கு சென்றுள்ளார். அவரை வழியிலேயே தடுத்து போலீசார் கைது செய்தனர். அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தாய் அழுது கொண்டிருப்பதை கண்ட பிரேம்குமாருக்கு தந்தை மீது தீராத ஆத்திரம் ஏற்பட்டது.
    • மணல்மேல்குடி போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி மணல்மேல் குடி மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன்( வயது 46) மீன்பிடி தொழிலாளி.

    இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் பிரேம்குமார் (23) சிவகங்கை மாவட்டத்தில் இ-சேவை மையம் வைத்து நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில் குடிப்பழக்கத்திற்கு ஆளான வேல்முருகன் அவ்வப்போது குடிபோதையில் அவரது மனைவியிடம் தகராறு செய்து வந்தார். இதனை அவரது மகன்கள் கண்டித்தனர்.

    இருந்த போதிலும் வேல்முருகன் குடிபோதையில் மனைவியிடம் ரகளை செய்து வந்தார்.

    நேற்று இரவு வழக்கம் போல் குடிபோதையில் வீட்டுக்கு வந்த வேல்முருகன் மனைவியிடம் தகராறு செய்தார். பின்னர் அவரை தாக்கினார். இதனால் வலி தாங்க முடியாமல் அவர் கதறி அழுதார். தாய் அழுது கொண்டிருப்பதை கண்ட பிரேம்குமாருக்கு தந்தை மீது தீராத ஆத்திரம் ஏற்பட்டது.

    அதைத் தொடர்ந்து சமையலறையில் இருந்த கத்தியை எடுத்து தந்தையின் வயிற்றுப் பகுதியில் ஓங்கி குத்தினார். இதில் பலத்த காயமடைந்த வேல்முருகன் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார்.

    பின்னர் அவரை மீட்டு சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருந்தபோதிலும் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று நள்ளிரவு வேல்முருகன் பரிதாபமாக இறந்தார்.

    இது பற்றி தகவல் அறிந்த மணல்மேல்குடி போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    தாயை தாக்கியதால் தந்தையை மகன் குத்தி கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • இளங்கோவனுக்கும் அவரது மகன் தங்கதுரைக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
    • போலீஸ் இன்ஸ்பெக்டர் இளங்கோவன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி தங்கதுரையை தேடி வருகிறார்,

    திருவோணம்:

    தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே ஆம்பலாபட்டு தெற்குகுடிக்காடு பகுதியைச் சேர்ந்தவர் இளங்கோவன் (வயது 53) இவரது தந்தை துரைமாணிக்கம் சமீபத்தில் இறந்தார். அதற்கான 16- வது நாள் நிகழ்ச்சி நேற்று இரவு இளங்கோவன் வீட்டில் நடைபெற்றது.

    இதற்காக ஆட்டுக்கறி உணவு தயார் செய்யப்பட்டு உறவினர்களுக்கு பரிமாறப்பட்டது.

    அப்போது இளங்கோவன் மகன் தங்கதுரை (25) உணவருந்த உட்கார்ந்தார். அப்போது அவருக்கு ஆட்டுகறி அதிகமாக வைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் இளங்கோவனுக்கும் அவரது மகன் தங்கதுரைக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

    இதைத் தொடர்ந்து தங்கதுரை தனது தாய் லட்சுமியிடம் எனக்கு அதிகமாக கறி வைக்கவில்லை என்று கூறி பிரச்சனை செய்ததாக கூறப்படுகிறது. அதற்கு லட்சுமி மகனை சமாதானப்படுத்தினார். பிறகு தூங்கிக் கொண்டிருந்தபோது திடீரென தங்கதுரை வீட்டில் இருந்த கோடாரியை எடுத்து தூங்கிக் கொண்டிருந்த தந்தை இளங்கோவன் தலையில் தாக்கினார். இதில் இளங்கோவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பின்னர் தங்கதுரை அங்கிருந்து தப்பியோடி விட்டார்.

    இது குறித்து லட்சுமி பாப்பாநாடு போலீசில் புகார் அளித்தார், அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இளங்கோவன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து பாப்பாநாடு போலீஸ் இன்ஸ்பெக்டர் இளங்கோவன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி தங்கதுரையை தேடி வருகிறார்,

    இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தயுள்ளது.

    • தந்தை இறந்து போனதால் பயந்து போன ராமமூர்த்தி அவர் வீட்டில் தவறி விழுந்து இறந்ததாக நாடகமாடியது அம்பலமாகியது.
    • சொத்து தகராறில் தந்தையை மகனே அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ஊத்துக்கோட்டை:

    ஊத்துக்கோட்டை அருகே உள்ள காக்க வாக்கத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 70). இவருக்கு 2 மனைவிகள். முதல் மனைவி தனலட்சுமி இறந்து விட்டார். இவர்களுக்கு ஆதிசேஷன் என்ற மகன் உள்ளார். சுப்பிரமணியின் 2-வது மனைவி வசந்தா. இவர்களுக்கு ராமமூர்த்தி (45) என்ற மகன்,ஒரு மகள் உள்ளனர். சுப்பிரமணி 2-வது மனைவி மற்றும் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த 7-ந் தேதி சுப்பிரமணி வீட்டில் தவறி விழுந்து இறந்து விட்டதாக உறவினர்களிடம் குடும்பத்தினர் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. இது தொடர்பாக ஊத்துக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதற்கிடையே பிரேத பரிசோதனை அறிக்கையில் சுப்பிரமணி அடித்து கொலை செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் சுப்பிரமணியின் 2-வது மனைவியின் மகன் ராமமூர்த்தியிடம் விசாரணை நடத்தினர். இதில் சம்பவத்தன்று இரவு ராமமூர்த்தி சொத்து தொடர்பாக ஏற்பட்ட தகராறில் தந்தை சுப்பிரமணியை அடித்து கொலை செய்து இருப்பது தெரியவந்தது. சுப்பிரமணி தனது முதல் மனைவியின் மகன் ஆதிசேஷனுக்கு ஒரு ஏக்கர் நிலம் வழங்கியதாக கூறப்படுகிறது. இதற்கு ராமமூர்த்தி எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். இந்த தகராறு கொலையில் முடிந்து உள்ளது. தந்தை இறந்து போனதால் பயந்து போன ராமமூர்த்தி அவர் வீட்டில் தவறி விழுந்து இறந்ததாக நாடகமாடியது அம்பலமாகியது.

    இதைத்தொடர்ந்து ராமமூர்த்தியை போலீசார் கைது செய்தனர். சொத்து தகராறில் தந்தையை மகனே அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பாளை போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், பெற்ற மகனே தந்தையை கொலை செய்தது தெரியவந்தது.
    • கடல்கனியை பிடிப்பதற்காக தனிப்படை அமைக்கப்பட்டு தேடி வந்தனர்.

    நெல்லை:

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள தளவாய்புரத்தை அடுத்த மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 73). இவருக்கு கடல்கனி என்ற மகனும், 4 மகள்களும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி விட்டது.

    கடல்கனி கேரள மாநிலம் கொட்டாரக்கரையில் ஜவுளி வியாபாரம் பார்த்து வந்தார். நேற்று முன்தினம் தனது தந்தையை பஸ்சில் நெல்லைக்கு அழைத்து வந்த கடல்கனி, வண்ணார்பேட்டை பைபாஸ் பஸ் நிறுத்தத்தில் இருந்து தரதரவென இழுத்துச்சென்று அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார்களுக்கு இடையே வைத்து கொலை செய்து விட்டு தப்பி ஓடினார்.

    இதுதொடர்பாக பாளை போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், பெற்ற மகனே தந்தையை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து கடல்கனியை பிடிப்பதற்காக தனிப்படை அமைக்கப்பட்டு தேடி வந்தனர். அவர் கேரளாவில் வியாபாரம் செய்து வருவதால் அங்கு தப்பி சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டது.

    தொடர்ந்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வேல் சவுத்திரி தலைமையிலான போலீசார் அங்கு சென்று முகாமிட்டு கொலையாளியை தேடி வந்த நிலையில் நேற்று இரவு கொட்டாரக்கரையில் வைத்து கடல்கனியை கைது செய்து நெல்லைக்கு அழைத்து வந்தனர். பின்னர் நடத்திய விசாரணையில், அவர் கூறியதாவது:-

    எனது தந்தையின் பெயரில் இருந்த ஒரு சொத்தை அவர் ஏற்கனவே விற்றுவிட்டார். தற்போது மற்றொரு சொத்தையும் விற்கப்போவதாக சொன்னார். இதனால் நான் ஆத்திரம் அடைந்தேன். அதே நேரத்தில் அவர் வயது முதிர்ச்சியால் நோய் வாய்ப்பட்டார். அவரை ஒவ்வொரு ஆஸ்பத்திரிக்கும் அழைத்துச்சென்று வெறுப்படைந்துவிட்டேன். இதனால் மன விரக்தியில் ஏற்பட்ட ஆத்திரத்தில் கொலை செய்து விட்டேன் என்றார். இதனை வாக்குமூலமாக போலீசார் பதிவு செய்து கொண்டனர். பின்னர் அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • ஸ்ரீலட்சுமியின் தந்தை, மகளை ஜிஷ்ணுவுக்கு திருமணம் செய்து கொடுக்க மறுத்து விட்டார்.
    • போலீசார் விசாரணை நடத்தி ஜிஷ்ணு உள்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

    திருவனந்தபுரம்:

    திருவனந்தபுரம் அருகே கல்லம்பலம் பகுதியை சேர்ந்தவர் ராஜூ (வயது 63). இவரது மகள் ஸ்ரீலட்சுமி.

    ஸ்ரீலட்சுமிக்கும், பக்கத்து வீட்டை சேர்ந்த ஜிஷ்ணு என்பவருக்கும் பழக்கம் இருந்தது. இதில் நெருக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து ஸ்ரீலட்சுமியை ஜிஷ்ணு காதலிக்க தொடங்கினார். மேலும் அவர் ஸ்ரீலட்சுமியின் தந்தை ராஜூவிடம் சென்று அவரை தனக்கு திருமணம் செய்து தர கேட்டார்.

    ஆனால் ஸ்ரீலட்சுமியின் தந்தை, மகளை ஜிஷ்ணுவுக்கு திருமணம் செய்து கொடுக்க மறுத்து விட்டார். மேலும் அவசரமாக ஸ்ரீலட்சுமிக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து திருமணத்திற்கு ஏற்பாடு செய்தார். இவர்களின் திருமணம் இன்று நடக்க இருந்தது.

    இந்த தகவல் அறிந்து ஜிஷ்ணு ஆத்திரம் அடைந்தார். இன்று அதிகாலையில் அவர், தனது நண்பர்கள் சிலருடன் ஸ்ரீலட்சுமி வீட்டுக்கு சென்றார். அங்கு ஸ்ரீலட்சுமியும், அவரது தந்தையும் இருந்தனர். அவர்களை ஜிஷ்ணுவும், அவரது நண்பர்களும் சேர்ந்து சரமாரியாக தாக்கினர்.

    இதில் படுகாயம் அடைந்த ராஜூ, ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். உடனே ஜிஷ்ணுவும், அவரது நண்பர்களும் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். இதற்கிடையே ராஜூவின் அலறல் சத்தம் கேட்டு உறவினர்கள் ஓடி வந்தனர். அவர்கள் ராஜூவை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், வழியிலேயே ராஜூ இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுபற்றி கல்லம்பலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி ஜிஷ்ணு உள்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

    ஸ்ரீலட்சுமிக்கு இன்று காலை 10.30 மணிக்கு திருமணம் நடக்க இருந்தது. இந்த நிலையில் அவரது கண்முன்பு தந்தையை முன்னாள் காதலன் ஜிஷ்ணு கொலை செய்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • தனது தந்தை தாக்கப்படுவதை கண்ட மகன் தடுக்க முயன்றபோது அவரையும் மர்மகும்பல் தாக்கியதில் பலத்த காயம் ஏற்பட்டது.
    • இரு கொலைகளுக்கும் பழிக்குப்பழியாக கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    சென்னை:

    ஆதம்பாக்கம் அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது41). இவர் தனது வீட்டு அருகில் வசிக்கும் உறவினர் ஒருவரின் 16-ம் நாள் துக்க காரிய நிகழ்ச்சிக்காக 10-ம் வகுப்பு பயிலும் தனது மகனுடன் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது ஆட்டோ மற்றும் 3 இருசக்கர வாகனத்தில் அங்கு வந்த 8 பேர் கொண்ட மர்மகும்பல் சீனிவாசனை பயங்கர ஆயுதங்களுடன் தாக்கினர். தாக்குதலில் பலத்த காயம் அடைந்த சீனிவாசன் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    தனது தந்தை தாக்கப்படுவதை கண்ட மகன் தடுக்க முயன்றபோது அவரையும் மர்மகும்பல் தாக்கியதில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

    கொலையுண்ட சீனிவாசன் மீது 2014-ம் ஆண்டு ஒரு கொலை வழக்கும் 2021-ம் ஆண்டு பிரபல ரவுடி நாகூர் மீரான் கொலை வழக்கிலும் சிறைக்கு சென்று வந்தவர் எனவும் மேலும் பல வழக்குகள் அவர் மீது உள்ளது என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

    இந்த இரு கொலைகளுக்கும் பழிக்குப்பழியாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் கொலை சம்பவம் நடந்த பகுதியில் கண்காணிப்பு கேமரா பதிவை வைத்தும் விசாரணை செய்து தப்பி ஓடிய கொலையாளிகளை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

    ஆள்நடமாட்டம் மிகுந்த பகுதியான ஆதம்பாக்கத்தில் நடந்த இந்த கொலை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தந்தையை கொலை செய்த மகனை மல்லி போலீசார் கைது செய்தனர்.
    • மது போதையில் மாடியில் இருந்து விழுந்து இறந்து விட்டதாக அவரது மனைவி சித்ரா தெரிவித்தார்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிருஷ்ணப்பேரி பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 52). இவரது மனைவி சித்ரா (45). இவர்களது மகன் மணிகண்டன்(27). மணிகண்டனுக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. மணிகண்டன் பட்டாசு ஆலையில் வேலை பார்த்து வருகிறார். ஆறுமுகம் ரியல் எஸ்டேட் தொழில் மற்றும் விவசாயம் செய்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் ஆறுமுகம் தனது வீட்டில் ரத்த காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்த கிருஷ்ணபேரி கிராம நிர்வாக அலுவலர் உமாராணி சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தார்.

    அப்போது ஆறுமுகம் மதுபோதையில் மாடியில் இருந்து விழுந்து இறந்து விட்டதாக அவரது மனைவி சித்ரா தெரிவித்தார்.

    ஆனால் ஆறுமுகத்தின் உடலில் ரத்தக் காயங்கள் இருந்ததால், அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி உமாராணி மல்லி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    அதில், கடந்த 10-ம் இரவு குடிபோதையில் வந்த ஆறுமுகம் மனைவியுடன் தகராறில் ஈடுபட்ட தும், அப்போது மகன் மணிகண்டன் தாக்கியதில் ஆறுமுகம் மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்ததும் தெரியவந்தது.

    இதையடுத்து ஆறுமுகம் மரண வழக்கை கொலை வழக்காக மாற்றி வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர்.

    • அரவிந்தன் 10-ம் வகுப்பு படித்துவிட்டு மேற்படிப்பு படிக்காமல் நண்பர்களுடன் ஊர் சுற்றி வருகிறார்.
    • மன்னார்குடி தாலுகா போலீசார் வழக்குபதிவு செய்து அரவிந்தனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அடுத்த வாஞ்சியூரை சேர்ந்தவர் மோகன் (வயது 55) விவசாயி. இவரது மனைவி கமலா. இவர்களுக்கு அரவிந்தன் (19), அர்ஜூன் (15) என்ற 2 மகன்கள் உள்ளனர்.

    அரவிந்தன் 10-ம் வகுப்பு படித்துவிட்டு மேற்படிப்பு படிக்காமல் நண்பர்களுடன் ஊர் சுற்றி வருகிறார். இந்நிலையில், நேற்று இரவு அரவிந்தன் மதுபானம் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்திருக்கிறார். அப்போது மோகனுக்கும் அவரது மனைவிக்கும் இடையே குடும்ப தகராறு நடந்துள்ளது.

    இதனால் ஆத்திரமடைந்த மகன் அரவிந்தன் குடிபோதையில் வீட்டில் இருந்த கடப்பாரையால் தந்தையை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் மோகன் மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளார். உடனடியாக, அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து மோகனை மீட்டு மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது தொடர்பாக மன்னார்குடி தாலுகா போலீசார் வழக்குபதிவு செய்து அரவிந்தனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடிபோதையில் மகனே தந்தையை கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • தேவி தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 5 வருடங்களுக்கு முன்பு பிரிந்து சென்று விட்டார்.
    • மனைவியை விட்டு பிரிந்த இளங்கோவன் தனக்கு சொந்தமான தோட்டத்தில் கிடைத்த வருவாயை தனது முதல் மகனுக்கு மட்டுமே கொடுத்து வந்துள்ளார்.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள பொம்முராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் இளங்கோவன் (வயது 45). இவரது மனைவி தேவி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் திருமணமாகி தனியாக வசித்து வருகிறார். 2-வது மகன் விக்ரம் (22) என்பவர் தந்தையுடன் வசித்து வருகிறார்.

    தேவி தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 5 வருடங்களுக்கு முன்பு பிரிந்து சென்று விட்டார். அதன் பிறகு விவசாய கூலி வேலை பார்த்து வந்த இளங்கோவன் குடிப்பழக்கத்துக்கு அடிமையானார்.

    அடிக்கடி குமணன்தொழு பகுதியில் உள்ள தனது அக்கா வீட்டுக்கு சென்று வருவது வழக்கம். அதன்படி நேற்று இரவு தனது சகோதரியை பார்த்து விட்டு திரும்பிக்கொண்டு இருந்தார். அப்போது காமன் கல்லூர் அருகே கழுத்து நெரிக்கப்பட்டு அருகில் உள்ள சாலையோரம் இளங்கோவனை மர்ம நபர்கள் வீசிச் சென்றனர்.

    அவ்வழியே சென்றவர்கள் இது குறித்து மயிலாடும்பாறை போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இளங்கோவன் உடலை மீட்டு தேனி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.

    போலீசார் விசாரணையில் இளங்கோவனை அவரது மகன் விக்ரம் மற்றும் அக்கா மகன் தமிழ்செல்வன் (22) ஆகியோர் கொலை செய்தது உறுதியானது. இது குறித்து போலீசார் தெரிவிக்கையில், மனைவியை விட்டு பிரிந்த இளங்கோவன் தனக்கு சொந்தமான தோட்டத்தில் கிடைத்த வருவாயை தனது முதல் மகனுக்கு மட்டுமே கொடுத்து வந்துள்ளார். 2-வது மகன் விக்ரம் திருமணம் ஆகாமல் வீட்டில் இருந்த நிலையில் அவருக்கு எந்த உதவியும் செய்யவில்லை. இது குறித்து அவர் கேட்டபோது, எனக்கு பிறக்கவில்லை. யாருக்கு பிறந்தாய்? என்று உன் அம்மாவிடம் கேட்டுப்பார் என தரக்குறைவான வார்த்தைகளால் திட்டி வந்துள்ளார்.

    இதனால் மனவேதனையடைந்த அவர் தனது தந்தையை தீர்த்துக் கட்ட முடிவு செய்தார். அதன்படி தனது அத்தை மகனான தமிழ்செல்வனுடன் சேர்ந்து நேற்று இரவு இளங்கோவனுக்கு அதிக அளவில் மதுபானங்களை வாங்கிக் கொடுத்தனர். போதையில் தனது வீட்டுக்கு இளங்கோவன் நடந்து சென்று கொண்டு இருந்தபோது, பின்னால் வந்த அவர்கள் துண்டால் முகத்தை மூடி கழுத்தை நெரித்து கொலை செய்தனர். பின்னர் சாலையில் வீசி விட்டால் ஏதேனும் வாகனம் மோதி விபத்தில் இறந்ததைப் போல காட்டி விடலாம் என்பதற்காக சாலையோரம் வீசி சென்றுள்ளனர்.

    விசாரணை நடத்தியதில் அவர்கள் கொலை செய்ததை ஒத்துக்கொண்டதால் போலீசார் அவர்களை கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×