search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    திருவாரூர் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற லோடுமேன் வாகனம் மோதி பலி

    திருவாரூர் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற லோடுமேன் வாகனம் மோதி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவாரூர்:

    திருவாரூர் அருகே மாங்குடி பகுதியை சேர்ந்தவர் காளிதாஸ் (வயது 58). இவரது நண்பர் கண்ணன் (54). இருவரும் லோடுமேன்கள்.

    இந்த நிலையில் நேற்று இரவு இருவரும் மோட்டார் சைக்கிளில் திருத்துறைப்பூண்டி சாலையில் மாங்குடி நோக்கி சென்று கொண்டிருந்தார். வண்டியை கண்ணன் ஓட்டினார்.

    அப்போது அந்த வழியாக பின்னால் வந்த அடையாளம் தெரியாத ஒரு வாகனம், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் காளிதாஸ், கண்ணன் ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர். உடனே அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு திருவாரூர் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி காளிதாஸ் பரிதாபமாக இறந்தார். கண்ணன் தொடர்ந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுகுறித்து காளிதாஸ் மனைவி சாந்தி கொடுத்த புகாரின்பேரில் திருவாரூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×