என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காதல் திருமணம் செய்த பெண் மீது தாக்குதல் - தாய், தந்தை மீது 8 பிரிவுகளில் வழக்கு
Byமாலை மலர்21 Sep 2019 3:41 PM GMT (Updated: 21 Sep 2019 3:41 PM GMT)
இரணியல் அருகே காதல் திருமணம் செய்த பெண் மீது தாக்குதல் நடத்தியது குறித்து தாய், தந்தை மீது போலீசார் 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
நாகர்கோவில்:
இரணியல் அருகே கட்டிமாங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது30). ஆட்டோ டிரைவர்.
இவரும் காரங்காடு, கொடுப்பகுழியைச் சேர்ந்த அனிஷா(26) என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். கடந்த 10 நாட்களுக்கு முன்பு இவர்களது திருமணம் நடந்தது. திருமணத்திற்கு அனிஷாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில் அனிஷா கணவர் சுரேஷ்குமாருடன், வடசேரி பரமார்த்த லிங்க புரத்தில் உள்ள சுரேஷ் குமாரின் சகோதரி ஸ்ரீஜா வீட்டிற்கு வந்திருந்தனர்.
அப்போது வீட்டிற்குள் புகுந்த 4 பேர் கொண்ட கும்பல் சுரேஷ்குமாரை தாக்கியதுடன் அனிஷாவை அங்கிருந்து கடத்திச் சென்றனர். அவர்களிடம் இருந்து தப்பித்தப்போது அனிஷா காயம் அடைந்தார்.
காயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து வடசேரி போலீசில் அனிஷா புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் அனிஷாவின் தந்தை ராஜேந்திரன், தாயார் ஜெயபாரதி, உறவினர்கள் சிவா, நாராயணன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து உள்ளனர். இவர்கள் மீது கொலை மிரட்டல், பெண் வன்கொடுமை சட்டம் உள்பட 8 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து போலீசார் சிவாவை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சிவா இன்று கோர்ட்டில் ஆஜர் படுத்தப்படுகிறார். தலை மறைவான ராஜேந் திரன், நாராயணன், ஜெயபாரதியை போலீசார் தேடி வருகிறார்கள்.
இரணியல் அருகே கட்டிமாங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது30). ஆட்டோ டிரைவர்.
இவரும் காரங்காடு, கொடுப்பகுழியைச் சேர்ந்த அனிஷா(26) என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். கடந்த 10 நாட்களுக்கு முன்பு இவர்களது திருமணம் நடந்தது. திருமணத்திற்கு அனிஷாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில் அனிஷா கணவர் சுரேஷ்குமாருடன், வடசேரி பரமார்த்த லிங்க புரத்தில் உள்ள சுரேஷ் குமாரின் சகோதரி ஸ்ரீஜா வீட்டிற்கு வந்திருந்தனர்.
அப்போது வீட்டிற்குள் புகுந்த 4 பேர் கொண்ட கும்பல் சுரேஷ்குமாரை தாக்கியதுடன் அனிஷாவை அங்கிருந்து கடத்திச் சென்றனர். அவர்களிடம் இருந்து தப்பித்தப்போது அனிஷா காயம் அடைந்தார்.
காயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து வடசேரி போலீசில் அனிஷா புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் அனிஷாவின் தந்தை ராஜேந்திரன், தாயார் ஜெயபாரதி, உறவினர்கள் சிவா, நாராயணன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து உள்ளனர். இவர்கள் மீது கொலை மிரட்டல், பெண் வன்கொடுமை சட்டம் உள்பட 8 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து போலீசார் சிவாவை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சிவா இன்று கோர்ட்டில் ஆஜர் படுத்தப்படுகிறார். தலை மறைவான ராஜேந் திரன், நாராயணன், ஜெயபாரதியை போலீசார் தேடி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X