என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சென்னையில் இடியுடன் மழை நீடிக்கும்- வானிலை மையம் அறிவிப்பு
Byமாலை மலர்19 Sep 2019 8:51 AM GMT (Updated: 19 Sep 2019 8:51 AM GMT)
வங்க கடலில் மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் சென்னையில் இடியுடன் மழை நீடிக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை:
சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-
வங்க கடலில் தெற்கு ஆந்திரா மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் வட தமிழகத்தில் அனேக இடங்களிலும், தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் மிதமான மழை பெய்துள்ளது.
கனமழையை பொறுத்த வரையில், வட தமிழகம் பகுதிகளில் திருவள்ளூரில் 22 செ.மீ. அளவுக்கு மழை பெய்துள்ளது. பூண்டி-21 செ.மீ., அரக்கோணம்-17 செ.மீ., தாமரைப்பாக்கம்- 15 செ.மீ. நுங்கம்பாக்கம்- 10 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.
கனமழையை பொறுத்தவரை திருவள்ளூர், வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, விழுப்புரம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருப்பூர், தேனி, திண்டுக்கல், திருச்சி, பெரம்பலூர் அரியலூர், சேலம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது
சென்னையை பொறுத்தவரை சிலமுறை இடியுடன் கூடிய மழை பெய்யும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கையை பொறுத்த வரையில் தென் கிழக்கு வங்க கடல் பகுதிக்கு அடுத்து வரும் 2 நாட்களுக்கு செல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இந்த மழை அடுத்து வரும் 2 அல்லது 3 நாட்களுக்கு தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கிழக்கு திசை, மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதியில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் மழை பெய்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-
வங்க கடலில் தெற்கு ஆந்திரா மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் வட தமிழகத்தில் அனேக இடங்களிலும், தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் மிதமான மழை பெய்துள்ளது.
கனமழையை பொறுத்த வரையில், வட தமிழகம் பகுதிகளில் திருவள்ளூரில் 22 செ.மீ. அளவுக்கு மழை பெய்துள்ளது. பூண்டி-21 செ.மீ., அரக்கோணம்-17 செ.மீ., தாமரைப்பாக்கம்- 15 செ.மீ. நுங்கம்பாக்கம்- 10 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தை பொறுத்தவரையில் வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மிதமான மழை பெய்யக்கூடும்.
கனமழையை பொறுத்தவரை திருவள்ளூர், வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, விழுப்புரம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருப்பூர், தேனி, திண்டுக்கல், திருச்சி, பெரம்பலூர் அரியலூர், சேலம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது
சென்னையை பொறுத்தவரை சிலமுறை இடியுடன் கூடிய மழை பெய்யும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கையை பொறுத்த வரையில் தென் கிழக்கு வங்க கடல் பகுதிக்கு அடுத்து வரும் 2 நாட்களுக்கு செல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இந்த மழை அடுத்து வரும் 2 அல்லது 3 நாட்களுக்கு தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கிழக்கு திசை, மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதியில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் மழை பெய்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X