என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விருதுநகர் அருகே பஸ் மோதி போலீஸ்காரர் பலி
Byமாலை மலர்9 Sep 2019 4:48 PM GMT (Updated: 9 Sep 2019 4:48 PM GMT)
விருதுநகர் அருகே மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதியதில் ஆயுதப்படை போலீஸ்காரர் உயிரிழந்தார்.
விருதுநகர்:
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள செங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் சிவகுமார் (வயது26). இவர் ராமநாதபுரத்தில் ஆயுதப்படை போலீஸ்காரராக இருந்தார்.
சிவகுமார் நேற்று விருதுநகரில் நடந்த ஒரு திருமணவிழாவில் கலந்து கொண்டார். பின்னர் மோட்டார் சைக்கிளில் சொந்த ஊருக்கு புறப்பட்டுச் சென்றார்.
விருதுநகர் கே. உசிலம்பட்டி அருகே அவர் சென்று கொண்டிருந்தபோது நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் இருந்து மதுரை நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பஸ் அவர் மீது மோதியது. இதில் உடல் நசுங்கி சிவகுமார் பரிதாபமாக இறந்து போனார்.
இதுகுறித்து பாண்டியன் நகர் போலீசார் விசாரணை நடத்தி நிலக்கோட்டையை சேர்ந்த பஸ் டிரைவர் முத்துக்குமார்(47) என்பவரை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X