என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தமிழகத்துக்கும் தெலுங்கானாவுக்கும் பாலமாக செயல்படுவேன்- டாக்டர் தமிழிசை பேட்டி
Byமாலை மலர்3 Sep 2019 7:43 AM GMT
தமிழகத்துக்கும் தெலுங்கானாவுக்கும் இடையே பாலமாக செயல்பட உள்ளதாக, தெலுங்கானா கவர்னராக நியமிக்கப்பட்டுள்ள டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
சென்னை:
தமிழகத்துக்கும் தெலுங்கானாவுக்கும் இடையே பாலமாக செயல்பட உள்ளதாக, தெலுங்கானா கவர்னராக நியமிக்கப்பட்டுள்ள டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
தெலுங்கானா கவர்னராக நியமிக்கப்பட்டுள்ள டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் பா.ஜனதா தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவில் கலந்து கொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கவர்னர் பதவி என்பது கட்சி எனக்கு அளித்து இருக்கும் அங்கீகாரம். இந்த பதவியை பெற்றதை தொடர்ந்து உறவிற்கான அங்கீகாரத்தை அனைத்து தரப்பினரும் வழங்கி வருகிறார்கள்.
அனைத்து கட்சிகள், இயக்கங்கள், அமைப்புகள், பொதுமக்கள் என் மீது கொண்டுள்ள அன்பும், ஆதரவும் நெகிழ வைக்கிறது. என்னை பொறுத்தவரை தமிழகத்துக்கு வளர்ச்சியை தர பணியாற்ற வேண்டியது எனது உரிமை. அதே போல் தெலுங்கானா மக்களுக்காக பணியாற்ற வேண்டியது எனது கடமை. இரண்டு மாநிலங்களுக்கும் இடையே பாலமாக செயல்படுவேன்.
தெலுங்கானா மாநில அதிகாரிகள் இன்று மாலை சென்னை வருகிறார்கள். அவர்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு பதவி ஏற்பு தேதி உறுதி செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழகத்துக்கும் தெலுங்கானாவுக்கும் இடையே பாலமாக செயல்பட உள்ளதாக, தெலுங்கானா கவர்னராக நியமிக்கப்பட்டுள்ள டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
தெலுங்கானா கவர்னராக நியமிக்கப்பட்டுள்ள டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் பா.ஜனதா தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவில் கலந்து கொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கவர்னர் பதவி என்பது கட்சி எனக்கு அளித்து இருக்கும் அங்கீகாரம். இந்த பதவியை பெற்றதை தொடர்ந்து உறவிற்கான அங்கீகாரத்தை அனைத்து தரப்பினரும் வழங்கி வருகிறார்கள்.
அனைத்து கட்சிகள், இயக்கங்கள், அமைப்புகள், பொதுமக்கள் என் மீது கொண்டுள்ள அன்பும், ஆதரவும் நெகிழ வைக்கிறது. என்னை பொறுத்தவரை தமிழகத்துக்கு வளர்ச்சியை தர பணியாற்ற வேண்டியது எனது உரிமை. அதே போல் தெலுங்கானா மக்களுக்காக பணியாற்ற வேண்டியது எனது கடமை. இரண்டு மாநிலங்களுக்கும் இடையே பாலமாக செயல்படுவேன்.
தெலுங்கானா மாநில அதிகாரிகள் இன்று மாலை சென்னை வருகிறார்கள். அவர்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு பதவி ஏற்பு தேதி உறுதி செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X