என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
சத்தியமங்கலம்-கோபியில் கொட்டிய பலத்த மழை
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டத்தில் நேற்று பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டியது.
சத்தியமங்கலத்தில் சுமார் 1½ மணி நேரம் பெய்த மழையால் ரோட்டில் மழை தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
இதனால் மழை வெள்ளம் வரதம்பாளையம் பத்ரகாளியம்மன் கோவில் மேற்கு வீதியில் 3 வீடுகளுக்குள் புகுந்தது. மழையால் அந்த வீடுகளின் மேற்கூரையும் சேதம் அடைந்தது. வீட்டில் இருந்தவர்கள் பாதுகாப்படன் வெளியேறினர்.
சத்தியமங்கலம் கிராம நிர்வாக அலுவலர் தவசியப்பன் நேரில் வந்து பார்வையிட்டார். சத்தியமங்கலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் 45 மி.மீ. மழை பெய்தது.
இதேபோல் கோபி, கொடிவேரி, வரட்டுப்பள்ளம் அணை பகுதிகளிலும் மழை பெய்தது. கோபி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பெய்த மழையால் தெருக்களில் மழை தண்ணீர் ஓடியது.
மேலும் நம்பியூர், பவானிசாகர், கவுந்தப்பாடி உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மலையில் பெய்த பலத்த மழையால் இன்று காலை அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. நேற்று 500 கனஅடியாக வந்த தண்ணீர் இன்று 3586 கனஅடியாக அதிகரித்துள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்