search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மழை
    X
    மழை

    சத்தியமங்கலம்-கோபியில் கொட்டிய பலத்த மழை

    சத்தியமங்கலம் மற்றும் கோபியில் பலத்த மழை பெய்தது.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டத்தில் நேற்று பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டியது.

    சத்தியமங்கலத்தில் சுமார் 1½ மணி நேரம் பெய்த மழையால் ரோட்டில் மழை தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

    இதனால் மழை வெள்ளம் வரதம்பாளையம் பத்ரகாளியம்மன் கோவில் மேற்கு வீதியில் 3 வீடுகளுக்குள் புகுந்தது. மழையால் அந்த வீடுகளின் மேற்கூரையும் சேதம் அடைந்தது. வீட்டில் இருந்தவர்கள் பாதுகாப்படன் வெளியேறினர்.

    சத்தியமங்கலம் கிராம நிர்வாக அலுவலர் தவசியப்பன் நேரில் வந்து பார்வையிட்டார். சத்தியமங்கலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் 45 மி.மீ. மழை பெய்தது.

    இதேபோல் கோபி, கொடிவேரி, வரட்டுப்பள்ளம் அணை பகுதிகளிலும் மழை பெய்தது. கோபி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பெய்த மழையால் தெருக்களில் மழை தண்ணீர் ஓடியது.

    மேலும் நம்பியூர், பவானிசாகர், கவுந்தப்பாடி உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மலையில் பெய்த பலத்த மழையால் இன்று காலை அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. நேற்று 500 கனஅடியாக வந்த தண்ணீர் இன்று 3586 கனஅடியாக அதிகரித்துள்ளது.

    Next Story
    ×