search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    பேரையூர் அருகே இளம்பெண் தீக்குளித்து தற்கொலை

    பேரையூர் அருகே இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பேரையூர்:

    மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள நாகையாபுரம் போலீஸ் சரகத்துக்குட்பட்ட தங்களாச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் சடையாண்டி. இவரது மனைவி விஜயலட்சுமி (வயது35). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.

    கடந்த சில மாதங்களாக சடையாண்டி சரியாக வேலைக்கு செல்லாமல் மது குடித்து விட்டு வந்து மனைவியிடம் அடிக்கடி பிரச்சினை செய்து வந்தார்.

    சம்பவத்தன்றும் அவர்களுக்குள் பிரச்சினை ஏற்பட விரக்தி அடைந்த விஜயலட்சுமி கணவன் கண் முன்பே உடலில் மண்எண்ணை ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.

    இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சடையாண்டி மனைவியை காப்பாற்ற முயன்றார். இதில் அவருக்கும் தீக்காயம் ஏற்பட்டது. உடல் கருகிய இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத் திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி விஜய லட்சுமி பரிதாபமாக இறந்தார். சடையாண்டி சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த சம்பவம் தொடர்பாக நாகையாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×