search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பேரையூர்"

    • நாகதோஷம் நீங்க வழிபட வேண்டிய கோவில்கள் பல உள்ளன.
    • சர்ப்ப விநாயகர் படம் வைத்து வீட்டிலும் வழிபடலாம்.

    நாகதோஷம் நீங்க வழிபட வேண்டிய புராதனக் கோவில்கள் பல உள்ளன. அவற்றில் திருநாகேஸ்வரம், திருப்பாம்புரம், கீழப்பெரும்பள்ளம், நாகர்கோவில், திருக்காளகஸ்தி, பேரையூர், நயினார்கோவில், ராமேஸ்வரம், திருச்செங்கோடு போன்றவை முக்கியமானவை. சர்ப்பத்தை அருகில் வைத்திருக்கும் தெய்வங்கள், சர்ப்பத்தை மாலையாக அணிந்துள்ள தெய்வங்கள் வீற்றிருக்கும் ஆலயங்களுக்கும், சர்ப்ப விநாயகர் அருளும் ஆலயங்களுக்கும் சென்று வழிபடலாம். சர்ப்ப விநாயகர் படம் வைத்து வீட்டிலும் வழிபடலாம்.

    ஜாதகத்தில் ராகு-கேது ஆதிக்கம் அமைந்தவர்கள், திருவாதிரை, சுவாதி, சதயம் ஆகிய நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், 4, 7, 13, 16, 22, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள், ராகு - கேது ஆதிக்க எண்களில் பிறந்தவர்கள் ஆகியோர் ஆதிசேஷனுக்குரிய பெயர்களை வைத்துக் கொண்டால் வாழ்க்கை வளமாகும். செட்டிநாட்டுப் பகுதிகளில் நாகப்பன், நாகம்மை, நாகராஜன், நாகமுத்து, நாகவள்ளி, நாகலிங்கம், நாகா, நாகரத்னம், நாகமணி போன்ற பெயர்களை வைப்பது வழக்கம்.

    எண்கணிதப்படி ஆராய்ந்து நாகர் பெயர் வைத்துக் கொண்டால் பெருமை சேரும். எப்படி இருந்தாலும் தோஷங்களிலேயே பெரிய தோஷமாகக் கருதப்படும் நாகதோஷம் ஒருவருக்கு ஜாதகத்தில் இருக்குமானால், முறையாக வழிபாடு செய்வதன் மூலமே முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைக்க முடியும். சுய ஜாதகத்தின் அடிப்படையில் யோகபலம் பெற்ற நாளை தேர்ந்தெடுத்து, உங்களுக்கு யோகம் தரும் ஆலயங்களில் வழிபாடுவது உகந்தது.

    • நர்சிங் மாணவி மாயமானார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் பேரையூர் டி.மீனாட்சிபுரம் அருகே உள்ள டி.மணி நகரம் பகுதியை சேர்ந்தவர் மாரிக்காளை. இவருடைய மகள் ஜோதிலட்சுமி (19) இவர் உசிலம்பட்டியில் செவிலியர் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 12-ந் தேதி இவர், தங்கையிடம் தோட்டத்துக்கு சென்று வருவதாக கூறி சென்றவர் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் தந்தை பேரையூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆந்திர வாலிபர் மாயம்

    ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்த நாகராஜூ மகன் மணிந்திரவர்மா (32). இவருடைய மனைவி மவுனிகா. இவர்களுக்கு கடந்த டிசம்பர் மாதம் திருமணம் நடந்தது. மதுரை மாவட்டம் கள்ளிக்குடி ெரயில் நிலையம் முன்புள்ள தனியார் நிறுவனத்தில் கடந்த ஒரு வருடமாக டிசைனராக மணிந்திரவர்மா வேலை பார்த்து வந்தார். திருமங்கலம் ஆறுமுகம் 4-வது வடக்குத் தெருவில் மனைவியுடன் வாடகைக்கு குடியிருந்து வந்தார். 4 நாட்களுக்கு முன்பு கணவன்-மனைவிக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டதால் மனைவி கோபித்துக் கொண்டு விஜயவாடா சென்றுவிட்டார். இந்த நிலையில் மணிந்திரவர்மா தனது சகோதரருக்கு தன்னை யாரும் தேட வேண்டாம் என்று எஸ்.எம்.எஸ். அனுப்பிவிட்டு செல்போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டார். பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் உறவினர் ராஜேஷ்வர்மா கொடுத்த புகாரின் பேரில் திருமங்கலம் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×