search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Peraiyur"

    • நர்சிங் மாணவி மாயமானார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் பேரையூர் டி.மீனாட்சிபுரம் அருகே உள்ள டி.மணி நகரம் பகுதியை சேர்ந்தவர் மாரிக்காளை. இவருடைய மகள் ஜோதிலட்சுமி (19) இவர் உசிலம்பட்டியில் செவிலியர் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 12-ந் தேதி இவர், தங்கையிடம் தோட்டத்துக்கு சென்று வருவதாக கூறி சென்றவர் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் தந்தை பேரையூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆந்திர வாலிபர் மாயம்

    ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்த நாகராஜூ மகன் மணிந்திரவர்மா (32). இவருடைய மனைவி மவுனிகா. இவர்களுக்கு கடந்த டிசம்பர் மாதம் திருமணம் நடந்தது. மதுரை மாவட்டம் கள்ளிக்குடி ெரயில் நிலையம் முன்புள்ள தனியார் நிறுவனத்தில் கடந்த ஒரு வருடமாக டிசைனராக மணிந்திரவர்மா வேலை பார்த்து வந்தார். திருமங்கலம் ஆறுமுகம் 4-வது வடக்குத் தெருவில் மனைவியுடன் வாடகைக்கு குடியிருந்து வந்தார். 4 நாட்களுக்கு முன்பு கணவன்-மனைவிக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டதால் மனைவி கோபித்துக் கொண்டு விஜயவாடா சென்றுவிட்டார். இந்த நிலையில் மணிந்திரவர்மா தனது சகோதரருக்கு தன்னை யாரும் தேட வேண்டாம் என்று எஸ்.எம்.எஸ். அனுப்பிவிட்டு செல்போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டார். பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் உறவினர் ராஜேஷ்வர்மா கொடுத்த புகாரின் பேரில் திருமங்கலம் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை மாவட்டம் பேரையூர் அருகே போலீஸ் நிலையத்தை அடித்து சூறையாடியதாக அளித்த புகாரின் பேரில் ராணுவ வீரரை போலீசார் கைது செய்தனர்.
    பேரையூர்:

    மதுரை மாவட்டம் பேரையூர் சங்கரலிங்கா புரத்தைச் சேர்ந்தவர் முனியாண்டி. இவரது மகன் சின்னத்துரை (வயது26). இவர் ஜம்மு-காஷ்மீரில் ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார்.

    இவரது உறவினர் மீது ஒரு பிரச்சனை தொடர்பாக நாகையாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

    இந்த நிலையில் விடுமுறைக்கு ஊருக்கு வந்திருந்த சின்னத்துரை நேற்று தனது நண்பர் ஏ.தொட்டியபட்டியை சேர்ந்த ராஜனுடன் (27) நாகையாபுரம் போலீஸ் நிலையம் சென்றார். அங்கு உறவினர் மீது வழக்கு தொடரப்பட்டது குறித்து கேட்டார். அப்போது அங்கிருந்த போலீசாருக்கும், அவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து பணி செய்யவிடாமல் தடுத்து தகராறு செய்ததோடு, போலீஸ் நிலையத்தில் இருந்த பொருட்களை அடித்து சூறையாடியதாக ராணுவ வீரர் சின்னத்துரை, ராஜன் ஆகியோர் மீது பணியில் இருந்த போலீஸ்காரர் அழகர்சாமி (40) புகார் செய் தார்.

    இதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த நாகையாபுரம் போலீசார் ராணுவ வீரர் உள்பட 2 பேரையும் கைது செய்தனர்.
    பேரையூர் அருகே குளிக்க சென்ற விவசாயி ஊரணியில் தவறி விழுந்து பரிதாபமாக இறந்தார்.

    பேரையூர்:

    திருமங்கலம் மாவட்டம், பேரையூர் வ.உ.சி. நகரை சேர்ந்தவர் குருவு (வயது 55). விவசாயி. இவர் நேற்று மாலை சாப்டூர் அருகே கேணி என்ற பகுதியில் உள்ள ஊரணியில் குளிக்க சென்றார்.

    ஊரணி கரையில் நின்று குளித்துக் கொண்டிருந்த போது திடீரென்று குருவு வழுக்கி கீழே விழுந்தார். இதில் அவரது பின்தலையில் காயம் ஏற்பட்டு மண்டை உடைந்தது.

    ரத்தம் கொட்டிய நிலையில் உயிருக்கு போராடிய அவரை அப்பகுதியை சேர்ந்தவர்கள் மீட்டு உசிலம்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு நிலைமை மோசமானதால் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி குருவு பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து சாப்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×