search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பேரையூர் அருகே போலீஸ் நிலையம் சூறை- ராணுவ வீரர் கைது
    X

    பேரையூர் அருகே போலீஸ் நிலையம் சூறை- ராணுவ வீரர் கைது

    மதுரை மாவட்டம் பேரையூர் அருகே போலீஸ் நிலையத்தை அடித்து சூறையாடியதாக அளித்த புகாரின் பேரில் ராணுவ வீரரை போலீசார் கைது செய்தனர்.
    பேரையூர்:

    மதுரை மாவட்டம் பேரையூர் சங்கரலிங்கா புரத்தைச் சேர்ந்தவர் முனியாண்டி. இவரது மகன் சின்னத்துரை (வயது26). இவர் ஜம்மு-காஷ்மீரில் ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார்.

    இவரது உறவினர் மீது ஒரு பிரச்சனை தொடர்பாக நாகையாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

    இந்த நிலையில் விடுமுறைக்கு ஊருக்கு வந்திருந்த சின்னத்துரை நேற்று தனது நண்பர் ஏ.தொட்டியபட்டியை சேர்ந்த ராஜனுடன் (27) நாகையாபுரம் போலீஸ் நிலையம் சென்றார். அங்கு உறவினர் மீது வழக்கு தொடரப்பட்டது குறித்து கேட்டார். அப்போது அங்கிருந்த போலீசாருக்கும், அவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து பணி செய்யவிடாமல் தடுத்து தகராறு செய்ததோடு, போலீஸ் நிலையத்தில் இருந்த பொருட்களை அடித்து சூறையாடியதாக ராணுவ வீரர் சின்னத்துரை, ராஜன் ஆகியோர் மீது பணியில் இருந்த போலீஸ்காரர் அழகர்சாமி (40) புகார் செய் தார்.

    இதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த நாகையாபுரம் போலீசார் ராணுவ வீரர் உள்பட 2 பேரையும் கைது செய்தனர்.
    Next Story
    ×