என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
களக்காட்டில் போலீசாருக்கு கொலை மிரட்டல் - தொழிலாளி கைது
Byமாலை மலர்6 Aug 2019 12:01 PM GMT (Updated: 6 Aug 2019 12:01 PM GMT)
களக்காட்டில் போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்த தொழிலாளியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
களக்காடு:
களக்காடு புதிய பஸ் நிலையம் அருகே சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்வதாக களக்காடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து களக்காடு சப்-இன்ஸ்பெக்டர் லிபிபால்ராஜ் மற்றும் போலீசார் அங்கு சென்று சோதனை செய்தனர். அப்போது அங்கு ஒருவர் மது பாட்டில்கள் விற்பனை செய்து கொண்டிருந்தார்.
இதையடுத்து அவரை போலீசார் விசாரணை நடத்தினர்.விசாரணையில் அவர் வள்ளியூர் அருகே உள்ள விஸ்வாசபுரத்தை சேர்ந்த தொழிலாளியான அர்ச்சுணன் மகன் சுதர்சன் என்பது தெரியவந்தது. பின்னர் அவரை கைது செய்ய முயன்றனர். ஆனால் அவர் போலீசாரை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்தார். எனினும் போலீசார் அவரை மடக்கி பிடித்து கைது செய்து, அவரிடமிருந்து 10 மது பாட்டில்களையும், ரூ. 200 பணத்தையும் பறிமுதல் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X