என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காயல்பட்டிணத்தில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை
Byமாலை மலர்19 July 2019 4:05 PM GMT (Updated: 19 July 2019 4:05 PM GMT)
காயல்பட்டிணத்தில் காதல் தகராறில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
ஆறுமுகநேரி:
காயல்பட்டிணம் மங்களவாடி சல்லிகிரடு பகுதியை சேர்ந்தவர் ராஜ். சென்னையில் கட்டிட மேஸ்திரியாக உள்ளார். இவரது மனைவி பூங்கணி. இவர்களது முதல் மகள் கவுசல்யா(21), அங்குள்ள ஜெராக்ஸ் கடையில் வேலை செய்து வருகிறார். இரண்டாவது மகள் கவுரி(19) பிளஸ்-2 வரை படித்துவிட்டு வீட்டில் இருந்தார்.
கவுரியும், அதே பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த கவுரியின் பெற்றோர் அவரை கண்டித்துள்ளனர். இதனால் கடந்த சில நாட்களாக மனம் உடைந்து காணப்பட்டார். இந்நிலையில் குளியலறைக்கு சென்றவர் அங்கிருந்த பெயிண்ட் அடிக்க பயன்படுத்தும் தின்னரை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
அவரது அலறல் சத்தம்கேட்டு விரைந்து வந்த அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று உடல் கருகிய நிலையில் இருந்த கவுரியை மீட்டு திருச்செந்தூரை தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடியில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஆனால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து ஆறுமுகநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X