என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
களக்காடு அருகே பெண்ணுக்கு கொலை மிரட்டல்- தொழிலாளி கைது
Byமாலை மலர்27 Jun 2019 2:31 PM GMT (Updated: 27 Jun 2019 2:31 PM GMT)
களக்காடு அருகே இடப்பிரச்சினை தகராறில் பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
களக்காடு:
களக்காடு அருகே உள்ள தேவநல்லூர் ஆதி திராவிடர் காலனியை சேர்ந்தவர் தொழிலாளி நல்லக்கண்ணு. இவரது மனைவி கனி (வயது 47). நல்லக்கண்ணுக்கும் அதே ஊரை சேர்ந்த தொழிலாளி சுடலை (44) என்பவருக்கும் இடப்பிரச்சினை தொடர்பாக தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வருகிறது.
இந்நிலையில் நேற்று கனி வயலில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சுடலை அவரை அரிவாளால் வெட்ட முயற்சி செய்தார். ஆனால் கனி தப்பி ஓடி விட்டார். இதனால் ஆத்திரமடைந்த சுடலை, கனிக்கு கொலை மிரட்டல் விடுத்து சென்று விட்டார். இது குறித்து களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது.
இதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் லிவிபால்ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி சுடலையை கைது செய்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X