என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரடாச்சேரி அருகே 2 வீடுகளில் தீ விபத்து- ரூ.4 லட்சம் பொருட்கள் சேதம்
Byமாலை மலர்24 Jun 2019 4:03 PM GMT (Updated: 24 Jun 2019 4:07 PM GMT)
கொரடாச்சேரி அருகே 2 வீடுகளில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் வீட்டில் இருந்த 9 பவுன் நகை மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் எரிந்து சேதமானது.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரியை அடுத்த தாழைக்குடியை சேர்ந்தவர் விஜய மனோகரி. இவரது வீட்டின் அருகில் நக்கீரன் என்பவர் வீடு உள்ளது.
இந்த நிலையில் விஜய மனோகரி வீட்டின் அருகில் உள்ள மூங்கில் தோப்பில் மூங்கில்கள் காற்றில் உரசியதில் ஏற்பட்ட தீப்பொறி பறந்து வந்து விஜய மனோகரி கூரை வீட்டில் விழுந்தது. இதில் வீடு முழுவதும் பரவிய தீ அருகில் உள்ள நக்கீரன் வீட்டிலும் பிடித்தது. இதில் வீட்டில் இருந்த 9 பவுன் நகை மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் எரிந்து சேதமானது.
இதுபற்றிய தகவலின் பேரில் திருவாரூர் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீ மேலும் பரவாமல் அணைத்தனர். இருந்த போதிலும் 2 வீடுகளிலும் ரூ.4 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமாகி விட்டதாக கூறப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X