என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
என்னை சுமையாக நினைத்ததால் தி.மு.க.வை விட்டு வெளியேறினேன்- ராதா ரவி பேட்டி
Byமாலை மலர்13 Jun 2019 8:14 AM GMT (Updated: 13 Jun 2019 8:14 AM GMT)
தன்னை சுமையாக நினைத்ததால் தி.மு.க.வை விட்டு வெளியேறியதாக சேலத்தில் ராதா ரவி நிருபர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.
சேலம்:
சேலத்திற்கு இன்று வந்த நடிகர் ராதாரவி நிருபர்களிடம் கூறியதாவது:-
தி.மு.க.வில் இருந்து அ.தி.மு.க.விற்கு வந்ததற்கு காரணம், என்னை அவர்கள் தூக்கிவிடவில்லை. சுமையாக நினைத்ததால் வெளியேறினேன்.
தி.மு.க.வில் தான் இரட்டை தலைமை உள்ளது. தி.மு.க.வின் மீது அதிருப்தி கிடையாது. ஆனால், மு.க.ஸ்டாலின் தற்போது சூழ்நிலை கைதியாக உள்ளார்.
அ.தி.மு.க. நான் பிறந்த வீடு. அம்மா, அம்மா என்று அழைப்பதால் இது எனக்கு தாய் வீடு.
மு.க.ஸ்டாலினை அவதூறாக பேசிய வைகோ தி.மு.க.வில் சேரவில்லையா?. அதுபோல் தான் அவர்களுடைய செயல்பாடு இருக்கிறது.
படையப்பா திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஒரு காட்சியில் பெண்ணை பற்றி பேசுவார். அப்படித்தான் நானும் மேடையில் பேசினேன்.
ஒரு கட்டிடத்திற்கு 2 முறை அடிக்கல் நாட்டியது நடிகர் சங்க கட்டிடம் தான். நடிகர் சங்க தேர்தலில் தி.மு.க. தலையீடு உள்ளது.
நான் புதுக்கோட்டைக்கு சென்றபோது பூச்சிமுருகன் தி.மு.க. தலைமை கழகத்தில் இருந்து பேசுகிறேன். ராதா ரவி வந்தால் அவருக்கு ஆதரவு கொடுக்க வேண்டாம் என நாடக நடிக நிர்வாகிகளிடம் தெரிவித்தார்.
சங்க கட்டிடத்தை காட்டி சிலர் வெற்றி பெற நினைக்கிறார்கள். அவர்கள் தேர்தலின்போது, திரைப்படத்தில் நடித்து, அதில் கிடைக்கும் பணத்தை கொண்டு கட்டிடத்தை கட்டுவோம் என கூறினார்கள். ஆனால் அவர்கள் அப்படி செய்யவில்லை.
தற்போது விஷால் அணியை எதிர்த்து யார் நிற்பார்கள் என்று நினைத்தபோது ஐசரி கணேஷ் வந்தார். அவருடன் பாக்கியராஜ் இணைந்துள்ளதால் இந்த அணியே வெற்றி பெறும். இவர்களுக்காக நாங்கள் வாக்குகள் சேகரிப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
சேலத்திற்கு இன்று வந்த நடிகர் ராதாரவி நிருபர்களிடம் கூறியதாவது:-
தி.மு.க.வில் இருந்து அ.தி.மு.க.விற்கு வந்ததற்கு காரணம், என்னை அவர்கள் தூக்கிவிடவில்லை. சுமையாக நினைத்ததால் வெளியேறினேன்.
தி.மு.க.வில் தான் இரட்டை தலைமை உள்ளது. தி.மு.க.வின் மீது அதிருப்தி கிடையாது. ஆனால், மு.க.ஸ்டாலின் தற்போது சூழ்நிலை கைதியாக உள்ளார்.
அ.தி.மு.க. நான் பிறந்த வீடு. அம்மா, அம்மா என்று அழைப்பதால் இது எனக்கு தாய் வீடு.
என்னை தற்காலிகமாக நீக்கியதற்கு ஓர் அறிவிப்பு கொடுத்திருக்கலாம். தேர்தலின்போது, புதுகோட்டையில் கருணாசின் செயல்பாடு கேவலத்தனமானது.
மு.க.ஸ்டாலினை அவதூறாக பேசிய வைகோ தி.மு.க.வில் சேரவில்லையா?. அதுபோல் தான் அவர்களுடைய செயல்பாடு இருக்கிறது.
படையப்பா திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஒரு காட்சியில் பெண்ணை பற்றி பேசுவார். அப்படித்தான் நானும் மேடையில் பேசினேன்.
ஒரு கட்டிடத்திற்கு 2 முறை அடிக்கல் நாட்டியது நடிகர் சங்க கட்டிடம் தான். நடிகர் சங்க தேர்தலில் தி.மு.க. தலையீடு உள்ளது.
நான் புதுக்கோட்டைக்கு சென்றபோது பூச்சிமுருகன் தி.மு.க. தலைமை கழகத்தில் இருந்து பேசுகிறேன். ராதா ரவி வந்தால் அவருக்கு ஆதரவு கொடுக்க வேண்டாம் என நாடக நடிக நிர்வாகிகளிடம் தெரிவித்தார்.
சங்க கட்டிடத்தை காட்டி சிலர் வெற்றி பெற நினைக்கிறார்கள். அவர்கள் தேர்தலின்போது, திரைப்படத்தில் நடித்து, அதில் கிடைக்கும் பணத்தை கொண்டு கட்டிடத்தை கட்டுவோம் என கூறினார்கள். ஆனால் அவர்கள் அப்படி செய்யவில்லை.
தற்போது விஷால் அணியை எதிர்த்து யார் நிற்பார்கள் என்று நினைத்தபோது ஐசரி கணேஷ் வந்தார். அவருடன் பாக்கியராஜ் இணைந்துள்ளதால் இந்த அணியே வெற்றி பெறும். இவர்களுக்காக நாங்கள் வாக்குகள் சேகரிப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X