என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
கணவருடன் பைக்கில் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு
மதுரை:
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் கிருஷ்ணாநகரைச் சேர்ந்த அரவிந்த்குமார் மனைவி சரண்யா (வயது 34). இவர் உறவினர் இல்ல நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
ஊமச்சிக்குளம் அருணாச்சலம் நகரில் சென்றபோது பைக் பின் தொடர்ந்து வந்தது. அதில் 30 வயது மதிக்கத்தக்க 3 வாலிபர்கள் இருந்தனர்.
அவர்கள் கத்தி முனையில் அரவிந்தின் மோட்டார் சைக்கிளை தடுத்து நிறுத்தினர். பின்னர் சரண்யாவின் கழுத்தில் கிடந்த 7 பவுன் தங்கச்சங்கிலியை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்று விட்டனர்.
இது குறித்து சரண்யா ஊமச்சிக்குளம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சுமதி வழக்குப்பதிவு செய்து வழிப்பறி கொள்ளையர்களை தேடி வருகிறார்.
ஊமச்சிக்குளம் பகுதியில் கடந்த ஒரு மாதத்தில் 4 வழிப்பறி சம்பவங்கள் நடந்துள்ளன. அந்தப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பை அதிகப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்