என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திண்டுக்கல்லில் 350 கிலோ கஞ்சாவுடன் 3 பேர் கைது
Byமாலை மலர்3 May 2019 9:42 AM GMT (Updated: 3 May 2019 9:42 AM GMT)
திண்டுக்கல்லில் 350 கிலோ கஞ்சாவுடன் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல்:
ஆந்திராவில் இருந்து தேனி பகுதிக்கு கஞ்சா கடத்தப்படுவதாக மத்திய போதைப்பொருள் கட்டுப்பாட்டு துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி அந்த குழுவினர் ஆந்திராவில் இருந்து வந்த ஒரு காரை ரகசியமாக திண்டுக்கல் மாவட்ட எல்லையில் கண் காணித்தனர்.
காரில் வந்த கும்பல் திண்டுக்கல் பஸ் நிலையத்தில் உள்ள விடுதியில் அறை எடுப்பதற்காக இறங்கிய போது சுற்றி வளைத்து சோதனை நடத்தினர். அந்த சோதனையில் அவர்கள் காரில் 350 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது.
காரில் வந்த தேனி பாரஸ்ட் ரோடு பகுதியைச் சேர்ந்த கண்ணன் (வயது 37), பொம்மிநாயக்கன் பட்டியைச் சேர்ந்த செந்தில் (35), ராஜசேகர் (35) ஆகிய 3 பேரையும் கைது செய்து அழைத்துச் சென்றனர். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இதேபோல் ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்த கும்பல் திண்டுக்கல் அருகே பிடிபட்டது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X