என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தி.மு.க.வினர் கிராம மக்களை சந்திப்பது ஏமாற்று வேலை - பொன் ராதாகிருஷ்ணன்
Byமாலை மலர்30 Jan 2019 11:59 PM GMT (Updated: 30 Jan 2019 11:59 PM GMT)
தி.மு.க.வினர் கிராம மக்களை சந்திப்பது ஏமாற்று வேலை என்று மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். #PonRadhakrishnan #BJP
சென்னை:
தமிழக பா.ஜ.க. ஓ.பி.சி. பிரிவு மாநில நிர்வாகிகள் கூட்டம் சென்னை கமலாலயத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு ஓ.பி.சி. பிரிவின் மாநில தலைவர் கார்வேந்தன் தலைமை தாங்கினார். அப்பிரிவின் தேசிய செயலாளர் நந்தகுமார் யாதவ் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் மத்திய இணை மந்திரி பொன் ராதாகிருஷ்ணன், தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், தேசிய செயலாளர் எச்.ராஜா ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியின்போது மத்திய இணை மந்திரி பொன் ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பிரதமர் நரேந்திர மோடி வருகிற 10-ந் தேதி திருப்பூருக்கு வருகிறார். கன்னியாகுமரியில் 19-ந் தேதி நடைபெறும் கூட்டத்துக்கும் அவருக்கு அழைப்பு விடுத்திருக்கிறோம்.
2 நிகழ்ச்சிகளுக்கான பணிகள் சிறப்பாக செய்யப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சிகளுக்கு பின்னர் தமிழக அரசியல் சூழ்நிலை ஒட்டுமொத்தமாக மாறும். 7 கோடி தமிழக மக்களின் மனதிலும் மாற்றம் ஏற்படும்.
மத்திய அரசில் தி.மு.க. பங்கு வகித்தபோது, தமிழ்நாட்டுக்கு ஒரு திட்டம் கூட கொண்டு வரவில்லை. தமிழ்நாட்டுக்கும், தமிழ் சமுதாயத்துக்கும் செய்த துரோகத்துக்கு தி.மு.க. மன்னிப்பு கேட்க வேண்டும். கிராம மக்களை தி.மு.க.வினர் சந்திப்பது ஏமாற்று வேலை.
மத்திய ‘பட்ஜெட்’ நாட்டு மக்களுக்கு நன்மை, பலன் தரக்கூடிய முழு ‘பட்ஜெட்’ ஆக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார். #PonRadhakrishnan #BJP
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X