search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவையில் ரெயில் மீது கல்வீசிய 2 வாலிபர்கள் கைது
    X

    கோவையில் ரெயில் மீது கல்வீசிய 2 வாலிபர்கள் கைது

    கோவையில் எக்ஸ்பிரஸ் ரெயில் மீது கல்வீசி தாக்கிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கோவை:

    கோவை வழியாக செல்லும் ரெயில்கள் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்கும் சம்பவம் அடிக்கடி நடந்து வந்தது. இதுகுறித்து பயணிகள் ரெயில்வே போலீசாரிடம் புகார் அளித்து வந்தனர்.

    இந்தநிலையில் நேற்று மாலை 5 மணியளவில் திருப்பூரில் இருந்து கோவை ரெயில் நிலையத்துக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் வந்து கொண்டு இருந்தது. ரெயில் வடகோவை ரெயில் நிலையத்தை தாண்டி வந்துகொண்டு இருந்தபோது அங்கு நின்று கொண்டிருந்த 3 வாலிபர்கள் ரெயில் மீது கல்வீசி தாக்கினர்.

    இதனை பார்த்த அந்த வழியாக ரோந்து சென்ற ஆர்.எஸ்.புரம் போலீஸ்காரர் சவுந்தரபாண்டியன் ரெயில் மீது கல்வீசி தாக்கிய 2 வாலிபர்களை விரட்டி சென்று மடக்கி பிடித்தார். அப்போது ஒரு வாலிபர் தப்பி ஓடிவிட்டார். பின்னர் சிக்கிய வாலிபர்களை போலீஸ்காரர் சவுந்தரபாண்டியன் கோவை ரெயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தார். போலீசார் நடத்திய விசாரணையில் அந்த வாலிபர்கள் ரத்தினபுரியை சேர்ந்த சூர்யா (வயது 18), சதீஸ்குமார் (18) என்பது தெரிய வந்தது.

    இதுகுறித்து ரெயில்வே போலீசார் 2 வாலிபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தப்பி ஓடிய ரத்தினபுரியை சேர்ந்த பிரவீன் என்ற வாலிபரை தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×