search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுரையில் கத்தியை காட்டி மிரட்டி பணம், செல்போன் பறிப்பு- 4 பேர் கைது
    X

    மதுரையில் கத்தியை காட்டி மிரட்டி பணம், செல்போன் பறிப்பு- 4 பேர் கைது

    மதுரை அருகே கத்தியை காட்டி மிரட்டி பணம் மற்றும் செல்போனை பறித்து சென்றது தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
    மதுரை:

    மதுரை அருகே உள்ள துவரிமான் கணேசபுரம் மேற்கு தெருவைச் சேர்ந்தவர் ஸ்ரீமன். இவர் பெரியார் பஸ் நிலையம் பாலம் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 2 மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி செல்போனை பறித்துக்கொண்டு தப்ப முயன்றனர்.

    உடனே ஸ்ரீமன் கூச்சலிட்டதால் பொதுமக்கள் விரட்டிச்சென்று 2 பேரையும் பிடித்தனர். பின்னர் அவர்கள் திடீர்நகர் போலீசில் ஒப்படைத்தனர்.

    போலீசார் விசாரணை நடத்தியதில் திடீர்நகரைச் சேர்ந்த முபாரக்அலி (51), ஒத்தப்பட்டி வைத்திய நாதபுரத்தைச் சேர்ந்த அபிஷேக் (20) என தெரிய வந்தது. இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

    கோரிப்பாளையம் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் நடராஜன் (51). இவர் பள்ளிவாசல் தெருவில் நடந்து சென்றபோது கே.புதூரைச் சேர்ந்த நாகவேலு (28), கோரிப்பாளையம் இப்ராகிம் (32) ஆகியோர் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு கைது செய்தனர். #tamilnews
    Next Story
    ×