search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கூடங்குளம் அருகே விவசாயி அடித்துக்கொலை- மருமகன் வெறிச்செயல்
    X

    கூடங்குளம் அருகே விவசாயி அடித்துக்கொலை- மருமகன் வெறிச்செயல்

    கூடங்குளம் அருகே மகளை அடித்ததை தட்டி கேட்ட மாமனாரை மருமகன் அடித்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    வள்ளியூர்:

    நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள காடுதுலா கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள் (வயது55), விவசாயி. இவரது மகள் பரமசெல்வி என்பவரை அதே பகுதியை சேர்ந்த டிரக்கர் டிரைவர் அந்தோணி ராஜ் (36) என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளார்.

    கடந்த சில மாதங்களாக அந்தோணிராஜ், தினசரி மது குடித்து விட்டு வந்து பரமசெல்வியை அடித்து உதைத்தார். இதை பரம செல்வி தனது தந்தையிடம் கூறி அழுதார். இதைத் தொடர்ந்து நேற்று இரவு பெருமாள், மகள் வீட்டுக்கு சென்று அங்கிருந்த மருமகன் அந்தோணி ராஜை சத்தம் போட்டார்.

    இதில் ஆத்திரம் அடைந்த அந்தோணிராஜ், மாமனார் வீட்டை விட்டு வெளியே வரவும், உருட்டு கட்டையுடன் பின்னால் சென்று சரமாரியாக அடித்தார். இதில் மண்டை உடைந்து உயிருக்கு போராடிய பெருமாளை அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் சிறிது நேரத்தில் பெருமாள் மரணம் அடைந்தார்.

    இதுகுறித்து பெருமாள் மனைவி புஷ்பம் கூடங்குளம் போலீசில் புகார் செய்தார். டி.எஸ்.பி. கனகராஜ், இன்ஸ்பெக்டர் அசோகன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தப்பி ஓடிய அந்தோணி ராஜை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. #tamilnews
    Next Story
    ×