search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கருணாநிதி உடல் நிலையில் நல்ல முன்னேற்றம்- ஜி.கே.வாசன்
    X

    கருணாநிதி உடல் நிலையில் நல்ல முன்னேற்றம்- ஜி.கே.வாசன்

    தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு கொடுக்கப்படும் சிகிச்சையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்ததாக ஜி.கே.வாசன் கூறினார். #Karunanidhi #GKVasan
    சென்னை:

    காவேரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் கருணாநிதியின் உடல்நலம் பற்றி விசாரிப்பதற்காக த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் இன்று ஆஸ்பத்திரிக்கு வந்தார்.

    அவருடன் கோவை தங்கம், என்.எஸ்.வி.சித்தன், விடியல் சேகர், பட்டுக்கோட்டை ரங்க ராஜன், தலைமை நிலைய செயலாளர் ஜி.ஆர்.வெங்கடேஷ் ஆகியோரும் வந்தனர்.

    ஆஸ்பத்திரிக்குள் சென்று கருணாநிதி உடல்நலம் குறித்து ஜி.கே.வாசன் விசாரித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கருணாநிதியின் உடல் நலம் குறித்து குடும்ப உறுப்பினர்களையும், மூத்த தலைவர்களையும் சந்தித்து விசாரித்தேன். கலைஞருக்கு கொடுக்கப்படும் சிகிச்சையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக கூறினார்கள்.


    அவருக்கு அளிக்கப்படும் தீவிர சிகிச்சையின் அடிப்படையில் பழையபடி ஆரோக்கியமான நிலைக்கு திரும்புவார் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இது உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கு கிடைத்த நல்ல செய்தியாகும். அவர் பூரண நலத்துடன் இல்லம் திரும்ப இறைவனை வேண்டுகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பசும்பொன் மக்கள் கழக தலைவர் இசக்கிமுத்து நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழக முதல்- அமைச்சராக 5 முறை தேர்ந்தெடுக்கப்பட்டு பல நல்ல திட்டங்களை மக்களுக்கு தந்த கருணாநிதி நிச்சயமாக எமனிடம் போராடி மீண்டு வருவார். தமிழக மக்களின் நலனுக்காக தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர். அவர் உடல்நலம் தேறி வந்து மீண்டும் தமிழக மக்களுக்காக பணியாற்றிட இறைவனை வேண்டுகிறோம்.

    இவ்வாறு இசக்கிமுத்து கூறினார்.

    இதேபோல் கிறிஸ்தவ அமைப்பினர், தொண்டு நிறு வனங்களை சார்ந்தவர்களும் காவேரி ஆஸ்பத்திரிக்கு வந்து கருணாநிதி உடல்நிலை பற்றி கேட்டறிந்தனர். #Karunanidhi #GKVasan
    Next Story
    ×