என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குடியாத்தம் அருகே லாரி மீது பைக் மோதி ஆந்திர வாலிபர் மரணம்
Byமாலை மலர்31 May 2018 11:47 AM GMT (Updated: 31 May 2018 11:47 AM GMT)
குடியாத்தம் அருகே லாரி மீது பைக் மோதியதில் பலியான ஆந்திர வாலிபர் கண்கள் தானமாக வழங்கப்பட்டன.
குடியாத்தம்:
ஆந்திர மாநிலம் சித்தூர் அடுத்த பங்காருபாளையம் ரால்லுவங்க கிராமத்தை சேர்ந்தவர் காத்தவராயன். இவரது மகன் ஈஸ்வரன் (வயது 23). கட்டிட தொழிலாளி. திருமணமாகாதவர்.
குடியாத்தம் அடுத்த பரதராமியில் இருக்கும் கெங்கையம்மன் கோவில் சிரசு திருவிழா நேற்று நடந்தது. இந்த திருவிழாவிற்காக ஈஸ்வரன், அதே பகுதியை சேர்ந்த அருண் (20) என்ற நண்பருடன் பைக்கில் வந்து கொண்டிருந்தார்.
குடியாத்தம் அடுத்துள்ள பெருமாள்பல்லியில் வந்த போது, முன்னாள் சென்ற லாரி மீது பைக் மோதியது. இந்த விபத்தில் ஈஸ்வரன் மற்றும் நண்பர் அருண் பலத்த காயமடைந்தனர்.
சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட ஈஸ்வரன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
நண்பர் அருணின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதால் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கிடையே, பலியான ஈஸ்வரனின் கண்களை தானமாக வழங்க அவருடைய பெற்றோர் முன்வந்தனர்.
ஈஸ்வரனின் கண்களை ரோட்டரி கண் மற்றும் உடல் உறுப்பு தான சங்க தலைவர் கோபிநாத் தானமாக பெற்று கொண்டார். இந்த விபத்து குறித்து பரதராமி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #Tamilnews
ஆந்திர மாநிலம் சித்தூர் அடுத்த பங்காருபாளையம் ரால்லுவங்க கிராமத்தை சேர்ந்தவர் காத்தவராயன். இவரது மகன் ஈஸ்வரன் (வயது 23). கட்டிட தொழிலாளி. திருமணமாகாதவர்.
குடியாத்தம் அடுத்த பரதராமியில் இருக்கும் கெங்கையம்மன் கோவில் சிரசு திருவிழா நேற்று நடந்தது. இந்த திருவிழாவிற்காக ஈஸ்வரன், அதே பகுதியை சேர்ந்த அருண் (20) என்ற நண்பருடன் பைக்கில் வந்து கொண்டிருந்தார்.
குடியாத்தம் அடுத்துள்ள பெருமாள்பல்லியில் வந்த போது, முன்னாள் சென்ற லாரி மீது பைக் மோதியது. இந்த விபத்தில் ஈஸ்வரன் மற்றும் நண்பர் அருண் பலத்த காயமடைந்தனர்.
சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட ஈஸ்வரன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
நண்பர் அருணின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதால் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கிடையே, பலியான ஈஸ்வரனின் கண்களை தானமாக வழங்க அவருடைய பெற்றோர் முன்வந்தனர்.
ஈஸ்வரனின் கண்களை ரோட்டரி கண் மற்றும் உடல் உறுப்பு தான சங்க தலைவர் கோபிநாத் தானமாக பெற்று கொண்டார். இந்த விபத்து குறித்து பரதராமி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #Tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X