என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மணல் கடத்தலை தடுத்த சப்- இன்ஸ்பெக்டருக்கு மிரட்டல்- போலீஸ் விசாரணை
Byமாலை மலர்25 May 2018 12:25 PM GMT (Updated: 25 May 2018 12:25 PM GMT)
ராணிப்பேட்டையில் மணல் கடத்தலை தடுத்த போலீஸ் சப் -இன்ஸ்பெக்டரை ஒழித்து விடுவதாக மிரட்டியவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ராணிப்பேட்டை:
சிப்காட்டை அடுத்த அவரக்கரை அருகே உள்ள பாலாற்றில் இருந்து நேற்று அதிகாலை புளியங்கண்ணுவை சேர்ந்த ரஞ்சித்குமார் (வயது 28) என்பவர் டிப்பர் லாரியில் மணல் கடத்தி வந்தார்.
ராணிப்பேட்டை ஒத்தவாடை தெரு அருகே வந்தபோது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த நெடுஞ்சாலை ரோந்துப்பணி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கருணாநிதி மணல் கடத்தி வந்த லாரியை மடக்கினார்.
அப்போது சம்பவ இடத்திற்கு வந்த ராணிப்பேட்டை காரை பகுதியை சேர்ந்த நரேஷ் என்பவர் சப்-இன்ஸ்பெக்டர் கருணாநிதியை அசிங்கமாக பேசி ஒழித்து விடுவேன் என மிரட்டல் விடுத்துவிட்டு தப்பி ஓடிவிட்டார்.
இதுகுறித்து கருணாநிதி ராணிப்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார். ராணிப்பேட்டை போலீசார் மணல் கடத்தி வந்த டிப்பர் லாரி டிரைவர் ரஞ்சித்குமாரை கைது செய்து டிப்பர் லாரியை பறிமுதல் செய்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து நரேசை தேடி வருகின்றனர்.#tamilnews
சிப்காட்டை அடுத்த அவரக்கரை அருகே உள்ள பாலாற்றில் இருந்து நேற்று அதிகாலை புளியங்கண்ணுவை சேர்ந்த ரஞ்சித்குமார் (வயது 28) என்பவர் டிப்பர் லாரியில் மணல் கடத்தி வந்தார்.
ராணிப்பேட்டை ஒத்தவாடை தெரு அருகே வந்தபோது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த நெடுஞ்சாலை ரோந்துப்பணி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கருணாநிதி மணல் கடத்தி வந்த லாரியை மடக்கினார்.
அப்போது சம்பவ இடத்திற்கு வந்த ராணிப்பேட்டை காரை பகுதியை சேர்ந்த நரேஷ் என்பவர் சப்-இன்ஸ்பெக்டர் கருணாநிதியை அசிங்கமாக பேசி ஒழித்து விடுவேன் என மிரட்டல் விடுத்துவிட்டு தப்பி ஓடிவிட்டார்.
இதுகுறித்து கருணாநிதி ராணிப்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார். ராணிப்பேட்டை போலீசார் மணல் கடத்தி வந்த டிப்பர் லாரி டிரைவர் ரஞ்சித்குமாரை கைது செய்து டிப்பர் லாரியை பறிமுதல் செய்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து நரேசை தேடி வருகின்றனர்.#tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X