என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஸ்டெர்லைட் ஆலைக்கு தடை விதிக்க வேண்டும்- மதுரை ஐகோர்ட்டில் வைகோ வழக்கு
Byமாலை மலர்26 April 2018 1:34 AM GMT (Updated: 26 April 2018 2:48 AM GMT)
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை இயங்குவதற்கும், ஆலையை விரிவாக்கம் செய்வதற்கும் தடை விதித்து உத்தரவிட வேண்டும் என மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் வைகோ கூறியுள்ளார்.#BanSterlite #TalkAboutSterlite #Vaiko
மதுரை:
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-
தூத்துக்குடி மீளவிட்டான் பகுதியில் ஸ்டெர்லைட் ஆலை இயங்குகிறது. இந்த ஆலைக்காக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வழங்கிய லைசென்சு கடந்த மார்ச் மாதம் 30-ந் தேதியுடன் முடிந்துவிட்டது. இந்த ஆலையால் அப்பகுதியில் புற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் சுற்றுச்சூழலும் மாசடைந்துள்ளது. எனவே இந்த ஆலையால் அப்பகுதி மக்கள் பல்வேறு தொந்தரவுகளை அனுபவித்து வருகின்றனர். இந்த நிலையில் ஸ்டெர்லைட் தொழிற்சாலையை விரிவாக்கம் செய்யும் பணியில் நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. இந்த நடவடிக்கைக்கு மத்திய-மாநில அரசுகளிடம் முறையாக அனுமதி பெறப்படவில்லை.
எனவே தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை இயங்குவதற்கும், ஆலையை விரிவாக்கம் செய்வதற்கும் தடை விதித்து உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. #Vaigo
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-
தூத்துக்குடி மீளவிட்டான் பகுதியில் ஸ்டெர்லைட் ஆலை இயங்குகிறது. இந்த ஆலைக்காக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வழங்கிய லைசென்சு கடந்த மார்ச் மாதம் 30-ந் தேதியுடன் முடிந்துவிட்டது. இந்த ஆலையால் அப்பகுதியில் புற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் சுற்றுச்சூழலும் மாசடைந்துள்ளது. எனவே இந்த ஆலையால் அப்பகுதி மக்கள் பல்வேறு தொந்தரவுகளை அனுபவித்து வருகின்றனர். இந்த நிலையில் ஸ்டெர்லைட் தொழிற்சாலையை விரிவாக்கம் செய்யும் பணியில் நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. இந்த நடவடிக்கைக்கு மத்திய-மாநில அரசுகளிடம் முறையாக அனுமதி பெறப்படவில்லை.
எனவே தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை இயங்குவதற்கும், ஆலையை விரிவாக்கம் செய்வதற்கும் தடை விதித்து உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. #Vaigo
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X