search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மார்த்தாண்டம் அருகே காதல் தோல்வியால் டிரைவர் தற்கொலை
    X

    மார்த்தாண்டம் அருகே காதல் தோல்வியால் டிரைவர் தற்கொலை

    மார்த்தாண்டம் அருகே காதல் தோல்வியால் ஆட்டோ டிரைவர் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நாகர்கோவில்:

    மார்த்தாண்டம் இடைக்கோடு பகுதியைச் சேர்ந்தவர் நடேசன். இவரது மகன் சீனு(வயது28). இவர் லோடு ஆட்டோ டிரைவராக உள்ளார்.

    சீனு அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் காதலித்து வந்த பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமண ஏற்பாடுகள் நடந்தது. இதனை அறிந்த சீனு மன வருத்தத்துடன் காணப்பட்டு வந்தார்.

    கடந்த சில நாட்களாக சீனு யாரிடமும் பேசாமல் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று ஆட்டோவில் சீனு வி‌ஷம் குடித்து ஆபத்தான நிலையில் மயங்கி கிடந்தார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் சீனுவை மீட்டு குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டுச் சென்றனர்.

    ஆனால் கொண்டுச் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து மார்த்தாண்டம் போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஜாண் விக்டர் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    #tamilnews
    Next Story
    ×