என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
கடையம் அருகே கணவரை கொன்ற பெண் தீக்குளித்து தற்கொலை
கடையம்:
நெல்லை மாவட்டம் கடையம் அருகே முதலியார்பட்டி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சங்கரன் மனைவி லட்சுமி (வயது 68). இவர்களது மகன் ராமசந்திரன். கடந்த ஜனவரி மாதம் 26-ந்தேதி சங்கரனை, தாயும் மகனும் சேர்ந்து அம்மி கல்லை போட்டும், அரிவாள்மனையால் வெட்டியும் கொலை செய்தனர்.
இதனையடுத்து லட்சுமி கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார். ஜாமீனில் வெளிவந்த அவர், வந்தநாள் முதல் வீட்டில் தனியாக இருந்து வந்தார். இவர் மிகுந்த மன உளைச்சலோடு இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் லட்சுமி வீட்டின் கதவை உள்பக்கமாக பூட்டி கொண்டு, தனது உடல் முழுவதும் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதில் அவர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
லட்சுமியின் உடல் பரிசோதனைக்காக அம்பை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. லட்சுமி மனஉளைச்சலுடன் இருந்து வந்த நிலையில் உடல்நலம் பாதித்தும் அவதிப்பட்டு வந்திருக்கிறார். இதனாலேயே அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அவருடைய மகன் மாரியப்பன் கொடுத்த புகாரின் பேரில் கடையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆதிலட்சுமி வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்