என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மதுரையில் மின்வாரிய என்ஜினீயர் உள்பட 2 பெண்களிடம் 11 பவுன் நகை பறிப்பு
Byமாலை மலர்24 May 2017 10:58 AM GMT (Updated: 24 May 2017 10:58 AM GMT)
மதுரையில் நடந்த வெவ்வேறு சம்பவங்களில் மின்வாரிய என்ஜினீயர் உள்பட 2 பெண்களிடம் நகை பறித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
மதுரை:
மதுரை மேலமடை பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்மோகன். இவரது மனைவி ராஜேஸ்வரி (64). இவர் விளக்குத்தூண் பகுதியில் நடந்து சென்றார். அப்போது பின் தொடர்ந்து வந்த மர்ம நபர் ராஜேஸ்வரி அணிந்திருந்த 6 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பினான்.
இது குறித்த புகாரின் பேரில் விளக்குத்தூண் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகிறார்கள்.
மதுரை வளர்நகரைச் சேர்ந்தவர் ராமநாதன். இவரது மனைவி உஷா (40). மின்வாரிய அலுவலக என்ஜினீயராக உள்ளார்.
நேற்று மதியம் இவர் உணவு சாப்பிட மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது மற்றொரு மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த 2 மர்ம நபர்கள், உஷா அணிந் திருந்த 5 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பி னர்.
இது குறித்து உஷா புதூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X