search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருமாவளவன்
    X
    திருமாவளவன்

    மு.க.ஸ்டாலினை ஆதரித்து திருமாவளவன் நாளை பிரசாரம்

    சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிடும் உதயநிதி ஸ்டாலினுக்கு ஆதரவாக திருமாவளவன் நாளை பிரசாரம் செய்கிறார்.
    சென்னை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. முதல் கட்ட தேர்தல் பிரசாரத்தை நேற்று தொடங்கினார். கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தை மேற்கொண்டார்.

    காலையில் பிரசார பாடல் ஒலிப்பேழையை வெளியிட்ட அவர் மாலையில் திருக்கழுகுன்றம், கேளம்பாக்கம், திருப்போரூர் (பொதுக்கூட்டம்) ஆகிய இடங்களில் பிரசாரம் செய்தார். இன்று (செவ்வாய்கிழமை) மாலை பவுஞ்சூர், செய்யூர், சித்தாமூர் கூட்டுச்சாலை, சூனாம்பேடு ஆகிய இடங்களில் திருமாவளவன் பேசுகிறார். இரவு 7 மணிக்கு கடப்பாக்கம், கல்பாக்கம் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.

    நாளை (24-ந் தேதி) சென்னையில் 6 தொகுதிகளில் அவர் பிரசாரம் செய்கிறார். மாலை 3 மணிக்கு கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை ஆதரித்து வாக்கு சேகரிக்கிறார். 4 மணிக்கு திரு.வி.க. நகர், 5 மணிக்கு எழும்பூர், 6 மணிக்கு சேப்பாக்கத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஆதரவு திரட்டுகிறார். இரவு 7 மணிக்கு ஆயிரம் விளக்கு, இரவு 8 மணிக்கு துறைமுகம் தொகுதியிலும் ஆதரவு திரட்டுகிறார்.

    25-ந் தேதி காலை 11 மணிக்கு விழுப்புரம், மதியம் 12 மணிக்கு விக்கிரவாண்டி, மாலை 4 மணிக்கு திருசிற்றம்பலம், 5 மணிக்கு புதுச்சேரி உழவர்கரை, 6 மணிக்கு கண்டமங்கலம் தொகுதியில் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார்.

    26-ந் தேதி கடலூர் மாவட்டத்தில் பிரசாரம் மேற்கொள்ளும் அவர் காலை 11 மணிக்கு சிதம்பரம், 12 மணிக்கு புவனகிரி, மாலை 4 மணிக்கு திருமுட்டம், 6 மணிக்கு காட்டுமன்னார் கோவில், இரவு 8 மணிக்கு குமராட்சி ஆகிய தொகுதிகளில் பேசுகிறார்.

    27-ந் தேதி மாலை 3 மணிக்கு சேந்தமங்கலம், 4 மணிக்கு திருமால்பூர், 5 மணிக்கு தக்கோலம், 6 மணிக்கு அரக்கோணம் ஆகிய தொகுதிகளில் திருமாவளவன் பிரசாரம் செய்வதாக கட்சியின் தலைமை நிலைய செயலாளர் பாலசிங்கம் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×