search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தினேஷ் குண்டுராவ்
    X
    தினேஷ் குண்டுராவ்

    தொகுதி பங்கீடு குறித்த வதந்திகளுக்கு பதிலளிக்க முடியாது- தினேஷ் குண்டுராவ்

    மக்கள் நீதி மய்யத்துடன் காங்கிரஸ் கட்சி பேசுவதாக வெளியாகும் தகவல் உண்மைக்குபுறம்பானது என்று தினேஷ் குண்டுராவ் கூறியுள்ளார்.
    சென்னை:

    சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,

    தொகுதி பங்கீடு தொடர்பாக மூத்த தலைவர்கள் திமுகவுடன் பேச்சுவார்த்தையை நடத்தி வருகின்றனர். நாளை அல்லது நாளை மறுநாள் தொகுதி பங்கீடு இறுதியாகும். மக்கள் நீதி மய்யத்துடன் காங்கிரஸ் பேசுவதாக வெளியாகும் தகவல் உண்மைக்குபுறம்பானது.

    ராகுல் மீது தமிழக மக்கள் அதிகபாசம் கொண்டிருப்பதை பாஜகவினரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. தேர்தல் நடத்தை விதிகளை ராகுல் காந்தி மீறவில்லை. அவர் மீதான புகார் தவறானது. பாஜக அளித்த மனுவை தேர்தல் ஆணையம் நிராகரிக்கும். தொகுதி பங்கீடு குறித்த வதந்திகள், யூகங்களுக்கு பதிலளிக்க முடியாது என்றார்.
    Next Story
    ×