என் மலர்
உள்ளூர் செய்திகள்
- கூடா நட்பு கேடாய் முடியும் என அ.தி.மு.க.வினரை பார்த்து துணை சபாநாயகர் பிச்சாண்டி கூறினார்.
- 1999-ல் பா.ஜ.க.வுடன் நீங்கள் கூட்டணி வைத்திருந்த போது கூடா நட்பு எப்படி இருந்தது? என எஸ்.பி.வேலுமணி கேள்வி எழுப்பினார்.
சென்னை:
அ.தி.மு.க.- பா.ஜ.க.வுடனான கூட்டணி குறித்து தமிழக சட்டசபையில் ஏற்கனவே விவாதங்கள் நடைபெற்று உள்ளன. இந்த நிலையில் இன்றும், தேர்தல் கூட்டணி தொடர்பாக சட்டசபையில் தி.மு.க.- அ.தி.மு.க.வினர் மாறி மாறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
கூடா நட்பு கேடாய் முடியும் என அ.தி.மு.க.வினரை பார்த்து துணை சபாநாயகர் பிச்சாண்டி கூறினார்.
இதற்கு, கூடா நட்பு கேடாய் முடியும் என்பது உங்கள் தலைவர் (கலைஞர்) சொன்னதுதான் என எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.
1999-ல் பா.ஜ.க.வுடன் நீங்கள் கூட்டணி வைத்திருந்த போது கூடா நட்பு எப்படி இருந்தது? என எஸ்.பி.வேலுமணி கேள்வி எழுப்பினார்.
- ஒட்டுமொத்தமாக பல சட்டமன்ற உறுப்பினர்கள் இதுகுறித்து என்னிடத்திலே கோரிக்கையும் வைத்திருக்கிறார்கள்.
- தற்போது ஆண்டொன்றிற்கு வழங்கப்பட்டு வரும் மருத்துவப் படி 75 ஆயிரம் ரூபாய் என்பது ஒரு லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
சென்னை:
முன்னாள் சட்டமன்ற, மேலவை உறுப்பினர்களுக்கான ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதிய மற்றும் மருத்துவப் படியினை உயர்த்தி சட்டசபையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
நம்முடைய துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுடைய ஓய்வூதியத்தைப் பற்றி இங்கே குறிப்பிட்டுச் சொல்லி இருக்கிறார். அதேபோன்று, உறுப்பினர் ஜெகன்மூர்த்தியும் பேசுகிறபோது அதைக் குறிப்பிட்டுச் சொல்லி இருக்கிறார்.
ஆகவே, ஒட்டுமொத்தமாக பல சட்டமன்ற உறுப்பினர்கள் இதுகுறித்து என்னிடத்திலே கோரிக்கையும் வைத்திருக்கிறார்கள். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுடைய அமைப்பைச் சார்ந்தவர்களும் என்னை வந்து நேரடியாகச் சந்தித்து இதுகுறித்து மனுவைத் தந்திருக்கிறார்கள்.
எனவே, அதையெல்லாம் பரிசீலித்துப் பார்த்து, முன்னாள் சட்டமன்றப் பேரவை மற்றும் மேலவை உறுப்பினர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரக்கூடிய மாத ஓய்வூதிய 30 ஆயிரம் ரூபாய் என்பதை, 35 ஆயிரம் ரூபாயாக 1-4-2025 முதல் உயர்த்தி வழங்கப்படும்.
தற்போது வழங்கப்பட்டு வரக்கூடிய முன்னாள் சட்டமன்றப் பேரவை மற்றும் மேலவை உறுப்பினர்களுக்கான குடும்ப ஓய்வூதியத்தைப் பொறுத்தவரையில், மாதம் 15 ஆயிரம் ரூபாய் என்பது, மாதம் ஒன்றுக்கு 17,500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
முன்னாள் சட்டமன்றப் பேரவை மற்றும் மேலவை உறுப்பினர்களுக்கு தற்போது ஆண்டொன்றிற்கு வழங்கப்பட்டு வரும் மருத்துவப் படி 75 ஆயிரம் ரூபாய் என்பது ஒரு லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
ஏற்கனவே, இந்த ஆண்டின் மருத்துவப் படித் தொகை வழங்கப்பட்டு உள்ளது. மீதமுள்ள 25 ஆயிரம் ரூபாய், இதற்கான விதிகளில் திருத்தம் செய்யப்பட்டு பின்னர் வழங்கப்படும் என்பதை நான் இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
- வெங்கடேஷ் பெங்களூரில் உள்ள ஏற்றுமதி நிறுவனத்தில் அங்கேயே தங்கியிருந்து வேலை பார்த்து வந்தார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த வடுகபாளையம், ஸ்ரீ கார்டன் பகுதியை சேர்ந்தவர் மனோகரன். இவர் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஸ்ரீதேவி என்ற மனைவியும், ஒரு மகளும், வெங்கடேஷ் (வயது 22) என்ற மகனும் உள்ளனர்.
வெங்கடேஷ் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் பி.டெக் 4-ம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் கல்லூரியின் இன்டென் சிப் மூலமாக கடந்த ஒன்றரை வருடமாக வெங்கடேஷ் பெங்களூரில் உள்ள ஏற்றுமதி நிறுவனத்தில் அங்கேயே தங்கியிருந்து வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் வெங்கடேஷ் வேலை செய்யும் நிறுவனத்தில் ஆட்குறைப்பு நடந்து வருகிறது. இதனால் தன்னையும் வேலையை விட்டு நீக்கி விடுவார்களோ என்ற பயத்தில் வெங்கடேஷ் இருந்துள்ளார். இது குறித்து தனது தந்தையிடம் கூறி மனம் வருந்தி உள்ளார். அதற்கு அவர் தந்தை இந்த நிறுவனம் இல்லை என்றால் வேறு நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொள்ளலாம் என்று மகனுக்கு ஆறுதல் கூறி வந்தார்.
இந்நிலையில் வெங்கடேஷ் பெங்களூரில் இருந்து வீட்டிற்கு வந்துள்ளார். அன்று காலை வெங்கடேஷ் சத்தியமங்கலத்தில் தான் தங்கியிருக்கும் அறைக்கு சென்று தங்கி விட்டு தேர்வு எழுதி வருகிறேன் என்று கூறிவிட்டு காரை எடுத்து சென்றுள்ளார். இதையடுத்து வெங்கடேஷ் தன்னுடன் படிக்கும் கவுதம் என்பவருக்கு போன் செய்து சத்தியமங்கலம்-அத்தாணி மெயின் ரோட்டு அருகே உள்ள ஒரு பேக்கரி கடையில் இருக்கிறேன் நீ இங்கு வா என்று கூறியுள்ளார்.
அதன் பேரில் கவுதம் அங்கு சென்றார். அப்போது வெங்கடேஷ் சோர்வுடன் இருந்துள்ளார். இதுகுறித்து கவுதம் கேட்டபோது ஒன்று மில்லை என்று கூறிவிட்டார். பின்னர் வெங்கடேஷ், கவுதமை தனது காரில் அழைத்து கொண்டு சென்று கொண்டிருந்தபோது திடீரென வெங்கடேஷ் ரத்த வாந்தி எடுத்து உள்ளார்.
இதுகுறித்து கேட்டபோது வேலை போய்விடும் என்ற பயத்தில் தான் விஷம் குடித்து விட்டதாகவும், தனக்கு மயக்கம் வருவது போன்று இருப்பதாகவும் கூறினார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் உதவியுடன் ஆம்புலன்ஸ் மூலம் வெங்கடேசை அழைத்து கொண்டு சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச் சைக்காக கொண்டு சென்றனர்.
அங்கு மருத்துவர் முதலுதவி சிகிச்சை அளித்து வெங்கடேசை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தினார். பின்னர் அவர் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக பெருந்துறையில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் வெங்கடேஷ் இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 30-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.
- இன்று காலை வழக்கம் போல் தொழிலாளர்கள் வேலையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
சிவகாசி:
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பட்டாசு ஆலைகளில் தற்போது உற்பத்தி பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. கோடை காலம் என்பதால் விபத்துக்கள் அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே தொழிலாளர் கவனமுடன் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் இன்று மதியம் நடந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் 3 பேர் உடல் கருகி பலியானார்கள். அதன் விபரம் வருமாறு:-
சிவகாசி அருகே உள்ள எம்.புதுப்பட்டியில் தனியார் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு சுற்று வட்டார பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட 30-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். கோவில் திருவிழாக்களை முன்னிட்டு ஆர்டரின்பேரில் இந்த ஆலையில் பேன்சி ரக பட்டாசு தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இன்று காலை வழக்கம் போல் தொழிலாளர்கள் வேலையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். ஆலையில் உள்ள ஒரு அறையில் பட்டாசு தயாரிப்பதற்காக மருந்து கலவையை தொழிலாளர்கள் தயார் செய்து கொண்டிருந்தனர். அப்போது ரசாயன மாற்றம் காரணமாக உராய்வு ஏற்பட்டு வெடி விபத்து ஏற்பட்டது. அருகில் இருந்த பட்டாசுகளில் தீ பரவி பயங்கர சத்தத்துடன் வெடிக்க தொடங்கியது. இதில் அடுத்தடுத்து இருந்த 5 அறைகள் இடிந்து தரைமட்டமாகின. இந்த விபத்தில் 3 தொழிலாளர்கள் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலியானார்கள். அவர்களது பெயர் விபரம் உடனடியாக தெரியவில்லை.
வெடி விபத்து குறித்து தகவலறிந்த சிவகாசி தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்டு பணியில் ஈடுபட்டனர். அப்போது விபத்து நடந்த அறையில் தீக்காயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்த 3 பேரை வீரர்கள் மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பட்டாசு ஆலையில் தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகிறது.
- உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
- எங்கும், எப்போதும் அலட்சியப் போக்குடனே செயல்படும் மு.க.ஸ்டாலின் மாடல் விடியா தி.மு.க. அரசுக்கு எனது கண்டனம்.
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சேலம் மாவட்டம், காடையாம்பட்டி அருகே கஞ்சநாயக்கன்பட்டி கிராமத்தில் கோவில் திருவிழாவின்போது ஏற்பட்ட பட்டாசு வெடி விபத்தில் 4 பேர் பரிதாபகரமாக உயிரிழந்ததாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.
உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
ஸ்டாலின் மாடல் தி.மு.க. ஆட்சியில், கோவில் திருவிழாக்களில் உரிய நெறிமுறைகள் பின்பற்றப்படுவதில்லை என்பதாலும் , முறையான பாதுகாப்பும் கொடுப்பதில்லை என்பதாலும் இதுபோன்ற விபத்துகளுக்கு தொடர்கதையாகி விட்டது.
எங்கும், எப்போதும் அலட்சியப் போக்குடனே செயல்படும் மு.க.ஸ்டாலின் மாடல் விடியா தி.மு.க. அரசுக்கு எனது கண்டனம்.
உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கான நிவாரண நிதியை உயர்த்தி வழங்க வேண்டும் என்றும்; இனி இதுபோன்ற விபத்துகள் நிகழாவண்ணம் பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றுவதற்கு உரிய ஆவன செய்ய வேண்டும் எனவும் ஸ்டாலின் மாடல் தி.மு.க. அரசை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மருத்துவக் கழிவுகளை முறையற்று குவிப்பது சுற்றுச் சூழலுக்கும், பொதுச் சுகாதாரத்திற்கும் கடும் அபாயத்தை ஏற்படுத்தக் கூடியது.
- சட்டசபையின் இறுதி நாளன்றுதான் மசோதா விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு சட்டமாக்கப்படும்.
சென்னை:
தமிழக சட்டசபையில் இன்றைய நிகழ்வு தொடங்கியது. அப்போது வினாக்கள்-விடைகள் நேரத்தில் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு துறைசார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்தனர்.
அதனை தொடர்ந்து, உயிரி மருத்துவக் கழிவுகள் தொடர்பான மசோதாவை அமைச்சர் ரகுபதி தாக்கல் செய்தார். அப்போது, மருத்துவக் கழிவுகளை முறையற்று குவிப்பது சுற்றுச் சூழலுக்கும், பொதுச் சுகாதாரத்திற்கும் கடும் அபாயத்தை ஏற்படுத்தக் கூடியது. அண்டை மாநிலங்களில் இருந்து நமது மாநிலத்தில் உயிரி மருத்துவக் கழிவுகள் கொட்டுவது தொடர்பாக அடிக்கடி புகார்கள் பெறப்படுவதாக அமைச்சர் ரகுபதி பேசினார்.
சட்டசபையின் இறுதி நாளன்றுதான் மசோதா விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு சட்டமாக்கப்படும் என்பது குறப்பிடத்தக்கது.
உயிரி மருத்துவக் கழிவுகள் தொடர்பான மசோதாவை அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்வதாக நிகழ்ச்சி நிரலில் குறிப்பிடப்பட்டு இருந்தது. கடைசி நேரத்தில் இந்த மசோதாவை அமைச்சர் ரகுபதி தாக்கல் செய்தார்.
அமலாக்கத்துறை வழக்கு காரணமாக தனது அமைச்சர் பதவியை செந்தில் பாலாஜி ராஜினாமா செய்வார் என்று கூறப்படும் நிலையில், அவர் தாக்கல் செய்யவேண்டிய மசோதாவை அமைச்சர் ரகுபதி தாக்கல் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- 4-ந்தேதி நடத்த திட்டமிட்டுள்ள கட்சி பொதுக்கூட்டத்தை பிரமாண்டமாக நடத்துவது தொடர்பாக ஆலோசித்தனர்.
- ஆட்சி, அதிகாரத்தில் பங்கு தரும் அணியில் சேர வேண்டும்.
சென்னை:
தமிழக காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் கூட்டம் சத்திய மூர்த்தி பவனில் நேற்று மாலையில் நடந்தது. கூட்டத்துக்கு மாநில தலைவர் செல்வப்பெருந்தகை முன்னிலை வகித்தார். சட்டமன்ற காங்கிரஸ் குழு தலைவர் ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ., கிராம கமிட்டி ஒருங்கிணைப்பாளர் பீட்டர் அல்போன்ஸ் உள்பட மூத்த நிர்வாகிகளும் பங்கேற்றனர்.
கூட்டத்தில் தேசம் காப்போம் நிகழ்ச்சியை மாநிலம் முழுவதும் நடத்துவது, காங்கிரஸ் மைதானத்தில் 4-ந்தேதி நடத்த திட்டமிட்டுள்ள கட்சி பொதுக்கூட்டத்தை பிரமாண்டமாக நடத்துவது தொடர்பாக ஆலோசித்தனர்.
கூட்டத்தில் கட்சி பிரச்சனைகளையும் மாவட்ட தலைவர்கள் கிளப்பினார்கள். பெரம்பலூர் மாவட்ட தலைவர் சுரேஷ் பேசும் போது, கட்சி அமைப்பு ரீதியாக நமக்கு 72 மாவட்டங்கள் உள்ளன. மாவட்டத்துக்கு ஒரு தொகுதியிலாவது காங்கிரஸ் போட்டியிட வேண்டாமா? தி.மு.க. கூட்டணியில் குறைந்த பட்சம் 60 தொகுதிகளையாவது கேட்டு பெற வேண்டும். இல்லை என்றால் கூட்டணியை விட்டு வெளியேற வேண்டும். ஆட்சி, அதிகாரத்தில் பங்கு தரும் அணியில் சேர வேண்டும்.
ஆட்சி அதிகாரத்தில் பங்கு, துணை முதல்வர் பதவி என்று கேட்க கூட கட்சியினருக்கு உரிமை இல்லையா? அதற்காக கட்சியினர் மீது நடவடிக்கை எடுப்பது தவறு என்றார்.
இதே போல் மேலும் சில மாவட்ட தலைவர்களும் கூடுதல் தொகுதிகளை கேட்டு பெற வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் கே.ஆர்.ராமசாமி பேசும் போது, ஆளும் கட்சி கூட்டணியில் இருந்தாலும் மக்கள் பிரச்சனைகளை எடுத்துக் கூற வேண்டும். ஆட்சியின் தவறுகளையும் சுட்டிக் காட்ட வேண்டும். வரும் தேர்தலில் கூடுதல் தொகுதிகளை கேட்டு பெற வேண்டும் என்றார்.
பீட்டர் அல்போன்ஸ் பேசும் போது, எம்.எல்.ஏ. பதவி மீது அனைவருக்கும் ஆசை இருக்கலாம். அதற்கு நேரம் வரும் போது பேசிக் கொள்ளலாம். இப்போது கட்சியை பலப்படுத்தும் பணிகளில் ஈடுபட வேண்டும். கிராம கமிட்டிகள் அமைப்பதில் சென்னையில் இன்னும் 2 மாவட்ட தலைவர்கள் பட்டியல் தரவில்லை என்றார்.
இதற்கு மாவட்ட தலைவர் திரவியம் எதிர்ப்பு தெரிவித்து குரல் எழுப்பினார். மற்றொரு மாவட்ட தலைவர் சிவராஜசேகர் மேலிட பொறுப்பாளர் நியமிக்கப்பட்ட பிறகு இதுவரை அவரது முன்னிலையில் மாவட்ட தலைவர்கள் கூட்டம் நடத்தப்படவில்லை என்று குற்றம் சாட்டினார்.
இறுதியாக மாநில தலைவர் செல்வப் பெருந்தகை பேசும் போது, என் அலுவலக கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கின்றன. கட்சியினர் தங்கள் பிரச்சனைகளை என்னிடம் நேரிலேயே தெரிவிக்கலாம் என்றார்.
- ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து ஏப். 26-ந்தேதி ம.தி.மு.க. ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
- சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ம.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னையில் கடந்த 20-ந்தேதி நடைபெற்ற ம.தி.மு.க. நிர்வாகக்குழு கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ முன்னிலையில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து ஏப். 26-ந்தேதி ம.தி.மு.க. ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி இன்று சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ம.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் ஆளுநரை கண்டித்தும், ஆளுநரை பதவியில் இருந்து நீக்க வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- சூரிய வெப்பத்தில் ஏற்படும் உடலியல் மாற்றங்கள் காரணமாக நாய்கள் குழப்பமடையக்கூடும்.
- வீட்டில் வளர்க்கப்படும் செல்ல நாய்களுக்கு முன்கூட்டியே ரேபிஸ் தடுப்பூசி போட வேண்டும்.
கோடை வெப்பம் தாங்க முடியாத அளவுக்கு கணிசமாக அதிகரித்துள்ளது.பொதுமக்களுடன் சேர்ந்து விலங்குகளும் இந்த வெப்பத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. கால்நடைகள், பறவைகள் மற்றும் தெருநாய்கள் மீது கோடையின் தாக்கம் கடுமையாக உள்ளது.
தெரு நாய்களுக்கு இது மிகவும் கடினமான நேரம். தெரு நாய்கள் வெயிலின் வெப்பத்தால் அவதிப்படுகின்றன. மனிதர்களின் உடல் சூடாகும்போது குளிர்விக்க வியர்வை சுரக்கிறது. நாய்களுக்கு அந்த நிலை இல்லை. இதனால் அவை விரைவாக வெயில் பாதிப்புக்கு ஆளாகின்றன.
இதனால் நாய்களின் குணநலன் பாதிக்கப்பட்டு கோபம் அடைகிறது. அவற்றின் நடத்தை ஆவேசமாக மாறுகிறது. இந்த நேரத்தில் நாய்களை அணுகினாலோ அல்லது தூண்டிவிட்டாலோ ஓடி வந்து கடித்து விடும்.
மற்ற நாட்களை விட கோடை காலத்தில் நாய் கடியால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இந்தியாவில் உள்ள பெரிய நகரங்களில் ஒவ்வொரு மாதமும் 2,500 பேர் நாய் கடியால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக வருகிறார்கள். ஆனால் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில், அந்த எண்ணிக்கை 3,000-க்கும் அதிகமாக இருக்கும்.
கோடை காலத்தில் தெரு நாய்கள் மற்றும் செல்ல நாய்கள் குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க நிபுணர்கள் ஆலோசனைகள் வழங்கி உள்ளனர்.
ஒரு நாயின் காதில் ஒரு சிறிய வெட்டு (காது வெட்டு) இருந்தால் அது குடும்பக் கட்டுப்பாட்டுடன் ரேபிஸுக்கு எதிராக தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று அர்த்தம். அத்தகைய நாய்களால் எந்த ஆபத்தும் இல்லை.
உங்கள் பகுதியில் அதிக அளவில் தெருநாய்கள் இருந்தால் உடனடியாக மாநகராட்சி மற்றும் நகராட்சிக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அவர்கள் நாய்களை பிடித்து குடும்பக் கட்டுப்பாட்டுடன் ரேபிஸ் எதிர்ப்பு தடுப்பூசிகளையும் வழங்குகிறார்கள்.
குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டால், நாய்களின் டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் உற்பத்தி குறைந்து தங்கள் ஆக்ரோஷமான தன்மையை இழந்து விடும். அவை மனிதர்களைத் தாக்குவதில்லை. நீங்கள் நடந்து செல்லும் போது நாய்களைக் கண்டால், அவற்றின் கண்களைப் பார்க்கவோ அல்லது அச்சுறுத்தவோ கூடாது. நாம் அவைகளை புறக்கணித்தால், நாய்கள் பெரும்பாலும் கண்டுகொள்ளாமல் விட்டு விடும்.
99 சதவீத நாய்கள் நன்றி உள்ளவை. அதன் மீது கொஞ்சம் பரிதாபப்பட்டாலும் உண்மையுள்ளவர்களாகவே மாறிவிடும். உடலில் ஏற்படும் மாற்றங்களால் சில சமயங்களில் ஆக்ரோஷமாக நடந்து கொள்கின்றன. இது போன்ற நேரங்களில் கவனமாக இருங்கள்.
சூரிய வெப்பத்தில் ஏற்படும் உடலியல் மாற்றங்கள் காரணமாக நாய்கள் குழப்பமடையக்கூடும். நீங்கள் அவற்றை நெருங்கும்போது அவை தாக்குகின்றன.
குழந்தைகளின் கையில் ஏதாவது உணவு இருந்தால் அதைப் பறிப்பதற்காக அவை தாக்கும். ஒரு நாய் உங்களைக் கடித்தால், அதைப் புறக்கணிக்காதீர்கள் காயத்தை உடனடியாக சோப்பு போட்டு கழுவவும். காயத்தின் மீது தண்ணீர் விழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இது ரேபிஸை ஏற்படுத்தும் வைரஸை நீக்கும்.
வீட்டில் வளர்க்கப்படும் செல்ல நாய்களுக்கு முன்கூட்டியே ரேபிஸ் தடுப்பூசி போட வேண்டும். அவை கடித்தால் கூட நீங்கள் ஒரு மருத்துவரை அணுக வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
- 160 தொகுதிகள் போக மீத முள்ள 74 தொகுதிகளை பா.ஜ.க. உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கவும் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
- மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திலும் எடப்பாடி பழனிசாமி முக்கிய ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.
சென்னை:
தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை சந்திப்பதற்கு அனைத்து கட்சிகளும் ஆயத்தமாகி வருகின்றன.
அந்த வகையில் தி.மு.க.வை வீழ்த்தி ஆட்சியில் அமர வேண்டும் என்கிற எண்ணத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி காய் நகர்த்தி வருகிறார். இதற்காக பா.ஜ.க.வுடன் மீண்டும் கூட்டணி அமைத்துள்ள அவர் அ.தி.மு.க. கூட்டணியில் மேலும் பல கட்சிகளை சேர்ப்பதற்கான நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளார்.
இதன் மூலம் அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க, தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகளும் சேர்வதற்கு வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழகத்தில் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி உறுதியானதையடுத்து மத்திய மந்திரி அமித்ஷா அளித்த பேட்டியில் அ.தி.மு.க. தலைமையில் கூட்டணி ஆட்சி அமைப்போம் என்று கூறியதாக செய்திகள் வெளியானது. இதுபற்றிய கேள்விக்கு பதில் அளித்த எடப்பாடி பழனிசாமி கூட்டணி ஆட்சி என்று அமித்ஷா சொல்லவில்லை என்று மறுத்தார்.
இதையடுத்து அ.தி.மு.க.வை தனி மெஜாரிட்டியுடன் ஆட்சியில் அமர வைத்திட வேண்டும் என்பதில் எடப்பாடி பழனிசாமி மிகவும் தீவிரமாக உள்ளார். இதற்கு வசதியாக கூடுதல் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர்களை களம் இறக்க அவர் முடிவு செய்துள்ளார். கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாரதிய ஜனதா கட்சி மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் 150 தொகுதிகளை நீங்கள் எடுத்துக் கொண்டு மீதமுள்ள 84 தொகுதிகளையும் எங்களிடம் கொடுத்துவிடுங்கள். நாங்கள் தேவையான தொகுதிகளை எடுத்துக் கொண்டு கூட்டணி கட்சிகளுக்கும் பிரித்து கொடுத்து விடுகிறோம் என்று கூறி உள்ளது.
ஆனால் எடப்பாடி பழனிசாமியோ 160 தொகுதிகளில் அ.தி.மு.க.வை போட்டியிட வைப்பதற்கு விரும்புகிறார். அப்போதுதான் ஆட்சி அமைப்பதற்கு தேவையான 117 இடங்களில் வெற்றி பெற்று தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க முடியும் என்பதே எடப்பாடி பழனிசாமியின் கணக்காக உள்ளது. 160 தொகுதிகள் போக மீத முள்ள 74 தொகுதிகளை பா.ஜ.க. உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கவும் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த சட்டமன்ற தேர்தலில் 49 தொகுதியில் மிகவும் குறைவான வாக்கு வித்தியாசத்திலேயே அ.தி.மு.க. தோல்வியை தழுவி இருந்தது. 34 சட்டமன்ற தொகுதிகளில் 2 சதவீதத்துக்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்திலும், 15 தொகுதிகளில் 4 சதவீத வாக்குகள் வித்தியாசத்திலுமே அ.தி.மு.க. தோல்வி அடைந்திருந்தது.
இந்த தொகுதிகள் எவை? எவை? என்பதை பட்டியல் போட்டு வைத்துள்ள எடப்பாடி பழனிசாமி அதனை அ.தி.மு.க. நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்களிடம் கொடுத்து குறிப்பிட்ட 49 தொகுதிகளிலும் கூடுதல் கவனம் செலுத்தி பணியாற்ற அறிவுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக நேற்று மாலையில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திலும் எடப்பாடி பழனிசாமி முக்கிய ஆலோசனைகளை வழங்கியுள்ளார். சட்டமன்ற தேர்தல் பணிகளில் ஒற்றுமையோடு செயல்பட வேண்டும் என்றும், தி.மு.க. அரசின் குறைகளை மக்கள் மத்தியில் எடுத்துச் சென்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு அ.தி.மு.க.வுக்கு வெற்றியை தேடித் தர வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி கட்சியினருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
- உங்களுக்கு கை சரியான பின்னர் பேசுவதற்கு வாய்ப்பு தருகிறேன், அமருங்கள்.
- யாருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பது எனக்கு தெரியும்.
சட்டசபையில் வினாக்கள், விடைகள் நேரத்தில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.
அப்போது, பேசுவதற்கு வாய்ப்பு தருமாறு கை தூக்கித் தூக்கி கை வலிக்கிறது என அரக்கோணம் எம்.எல்.ஏ. ரவி கூறினார்.
உங்களுக்கு கை சரியான பின்னர் பேசுவதற்கு வாய்ப்பு தருகிறேன், அமருங்கள் என எம்.எல்.ஏ. ரவிக்கு சபாநாயகர் அப்பாவு பதில் அளித்தார்.
இதைத்தொடர்ந்து பேசிய அவை முன்னவர் துரைமுருகன், உறுப்பினர்கள் அனைவரும் அவை மரபை காக்க வேண்டும், நையாண்டி செய்யக்கூடாது என அறிவுறுத்தினார்.
சபாநாயகர் அப்பாவு பேசுகையில், எம்.எல்.ஏ. ரவி 3 கேள்விகள் கேட்பதற்கு வாய்ப்பு தந்துள்ளேன். யாருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பது எனக்கு தெரியும்.
எல்லோருக்கும் எல்லாம் கொடுக்க வேண்டும் என்பது தான் இந்த ஆட்சி. அதை கடைபிடித்து எல்லோருக்கும் எல்லாம் கொடுத்துக்கொண்டு இருக்கிறேன் என்று கூறினார்.
- மாலை 3 மணிக்கு பூத் கமிட்டி மாநாடு தொடங்குகிறது.
- அதிகளவில் கூடிய தொண்டர்களால் விமான நிலையமே ஸ்தம்பித்தது.
2026-ம் ஆண்டு தேர்தலை எதிர்கொள்வதற்கும், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பகுதிகளிலும், குறிப்பாக கிராமப்புறங்களிலும் பூத் கமிட்டியை பலப்படுத்துவதில் விஜய் கவனம் செலுத்தி வருகிறார். இதற்காக தமிழகம் முழுவதும் ஒரு பூத்துக்கு ஒரு ஆண், ஒரு பெண் என 2 பேர் வீதம் 35 ஆயிரம் பூத் கமிட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தமாக 70 ஆயிரம் பூத் கமிட்டி உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
பூத் கமிட்டி பணிகள் நிறைவடைந்ததும், பூத் கமிட்டி மாநாடு நடத்துவதற்கான பணிகளில் தமிழக வெற்றிக்கழகம் தீவிரம் காட்டியது. இந்த மாநாட்டை மொத்தமாக இல்லாமல், மண்டலங்கள் வாரியாக பிரித்து நடத்த முடிவு செய்தனர்.
அதன்படி தமிழகத்தை 5 மண்டலங்களாக பிரித்து தற்போது மாநாடு நடத்த உள்ளனர். அதன்படி, முதல்கட்டமாக கொங்கு மண்டல பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கான மாநாடு இன்றும், நாளையும் கோவையில் நடக்கிறது.
கோவை சரவணம்பட்டி அருகே உள்ள குரும்பபாளையத்தில் உள்ள எஸ்.என்.எஸ் கல்லூரியில் உள்ள அரங்கத்தில் மாலை 3 மணிக்கு பூத் கமிட்டி மாநாடு தொடங்குகிறது. இந்த மாநாட்டில் கோவை, திருப்பூர், சேலம், ஈரோடு, நாமக்கல், நீலகிரி, கரூர் ஆகிய 7 மாவட்டங்களை உள்ளடக்கிய பூத் கமிட்டி நிர்வாகிகள் 16 ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர்.
மாநாட்டில் பங்கேற்க ஏற்கனவே அந்தந்த மாவட்ட செயலாளர்கள் மூலம் பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கான அடையாள அட்டைகள் கொடுக்கப்பட்டு இருந்தன. அடையாள அட்டை வைத்திருந்தவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
இந்த மாநாட்டில் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்கிறார். இதற்காக அவர் இன்று காலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலமாக கோவைக்கு வந்தார். கோவை விமான நிலையம் வந்த விஜய்க்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதிகளவில் கூடிய தொண்டர்களால் விமான நிலையமே ஸ்தம்பித்தது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.






